December 31, 2011

தந்தை சொல் மிக்கதொரு மந்திரமில்லை..

இப்பொழுது எல்லாம் பணத்திற்க்கு பதில் நிறைய கிரெடிட் கார்ட்கள் பயன்படுத்துகிறோம் இல்லையா? கிரெடிட் கார்ட் இல்லாத காலத்திலும் அல்லது கிரெடிட் கார்ட் இல்லாத குடும்பத்திற்க்கும் இருந்த, இருக்கின்ற ஒரே கிரெடிட் அப்பாதான் . எனக்கு பணத்திற்க்கு மட்டுமல்ல புத்திமதிகளுக்கும் அறிவுரைகளுக்கும் கூட என் அப்பாதான் கிரெடிட் கார்ட்.என்னோட அப்பா பாக்கெட்ல எப்பவும் நிறைய பணம் வைத்திருப்பார். அவருடன் வெளியில் செல்லும் பொழுதுகளில் கடை வீதிகளில் இருக்கும் கடைகளில் முதல் கடையில் வாங்கிய பொருள் ஐம்பது ரூபாய்க்கும் குறைவாகவே இருந்தாலும் ஐநூறு ரூபாய் தாளை எடுத்து நீட்டுவார் அவர்கள் கொடுக்கும் மீதி சில்லரையை வாங்கி வைத்துக்கொண்டு அடுத்தடுத்த கடைகளிலும் அதேபோல நூறு ரூபாய் தாளையோ ஐநூறு ரூபாய் தாளையோ கொடுத்து சில்லரை வாங்கிக்கொள்வார் , ஏம்ப்பா அதான் சில்லரை வைத்திருக்கிறீர்களே பின் ஏன் மீண்டும் மீண்டும் சில்லரையாக சேர்க்கிறீர்கள் என்றால் அவசர ஆத்திரத்திற்க்கு பயன்படுத்துவதற்க்கு சில சமயம் சில்லரை இல்லாமல் போய்விடும் அதற்க்காக நான்கைந்து கடைகள் ஏறி இறங்குவதைவிட நம்கையில் சில்லரையிருந்தால் அலைய வேண்டியிருக்காதென்பார். அப்பொழுதிருந்து அதேதான் நானும் பின்பற்றுகிறேன் என் பாக்கெட்டில் பணம் இருக்கிறதோ இல்லையோ நிறைய சில்லரைகள் இருக்கும். அதன் பயன்பாடு அவசர ஆத்திரத்திற்க்கு மட்டுமல்ல மாதக்கடைசியிலும் உதவியிருக்கிறது.

என்னுடைய அப்பா எல்லாவிதத்திலும் திறமையானவராயிருந்தாலும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் முடிவெடுப்பதில் அவருக்கு சிறு மன உளைச்சல் உண்டு . என் கைபிடித்து சாலையை கடக்க முயற்சிக்கும் பொழுது  அவர் படும் பாடு சொல்லி மாளாது அதுபோன்ற தருணங்களிலும் சில வேறு விஷயங்களிலும் அப்பாவிடம் எதிர்த்து அல்லது கடிந்து கொண்டிருக்கிறேன். சில சமயம் அமைதியாகிவிடுவார் சில சமயம் கோவித்துக்கொள்வார் கோவித்துக்கொண்டு சிலநாட்கள் அப்பாவும் நானும் பேசாமலும் இருப்போம் அச்சமயங்களில் நான் என்னுடைய அறையில் எதாவது புத்தகம் படித்துக்கொண்டிருப்பேன் வெளியிலிருந்து பாட்டுச்சத்தம் கேட்கும் அப்பாதான் பாடிக்கொண்டிருப்பார் ''ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ? இல்லையொரு பிள்ளையென்று ஏங்குவோர் பலரிருக்க இங்கு வந்து ஏன் பிறந்தாயோ'' வென்று அம்மாவும் அப்பாவும் சிரித்துக்கொண்டிருப்பார்கள் நான் உடனே வெளியில் சென்று ஏன் பெத்தீங்க என்பேன். இதற்காகத்தானடா என்று வாங்கிவந்த எனக்குபிடித்த பால்கோவாவை எடுத்து நீட்டி கன்னங்களில் தடவிக்கொடுப்பார் . பால்கோவாவிற்கு இல்லையானாலும் அப்பாவின் அந்த அன்பிற்க்கு சரண்டராகிவிடுவேன்.

அப்பா பாடல்கள் நன்றாக படிப்பார் பழைய பாடல்கள் விரும்பி கேட்பார் சந்தோஷமான நேரங்கள் துன்பமான நேரங்கள் அதனதன் நேரங்களுக்கேற்ப அப்பா படிக்கும் பாடல்கள் இருக்கும் சந்தோஷமான பாடல்கள் படிக்கிறாரென்றால் அப்பா சந்தோஷமாக இருக்கிறார் என்று கொள்ளலாம். வருத்தமான பாடல்கள் படிக்கிறாரென்றால் அப்பா கோபத்திலிருக்கிறாரென்றும் கொள்ளலாம். பெரும்பாலும் அப்பா சந்தோஷமான பாடல்கள் படிக்கும்பொழுதே எனக்கு ஆக வேண்டிய காரியங்களை சாதித்துக்கொண்டிருக்கிறேன். அப்பாவின் உடன் பிறந்தோர் அப்பாவுடன் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம் . என்னுடைய பாட்டனார் என் அப்பாவின் தந்தை கடைசி வரையிலும் எங்களுடன்தான் இருந்தார். பாட்டையா தன்னுடைய பிற மகன்களைபற்றி வருத்தப்படும்பொழுது ''ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி ஒரே ஒரு ராணி பெற்றால் ஒன்பதுபிள்ளை அந்த ஒன்பதிலே ஒன்றுகூட உருப்படியில்லை'' என்ற பாடலை அப்பா பாட்டையாவிடமும் பாடிக்காட்டுவார் கூடவே அம்மாவும் பாடுவதுண்டு, வாஸ்தவம்தான்ப்பா என்று பேச்சை முடித்துக்கொள்வார் பாட்டையா.இப்பவும் அந்த பாடல் பார்க்கும்பொழுதெல்லாம் அப்பா ஞாபகம் வந்து கண்கலங்கிவிடுகிறது இந்த பதிவு கூட அந்த பாடல் கேட்டுக்கொண்டேதான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..



அப்பா திருமணத்திற்க்கு முன்பு சென்னையில் பல வருடங்கள் வேலை செய்திருக்கிறார். நடிகர் ராஜசேகர் எங்கள் ஊர்க்காரர் ஒருவரின் உறவினர் என்பதால் ராஜசேகரின் கெஸ்ட் ஹவுஸ் ரூமில் தங்கி வேலை செய்திருக்கிறார் ராஜ சேகர் தம்பி செல்வாவை சிறுவயதில் அப்பா தூக்கி விளையாடியிருப்பதாக கூறுவார். அப்படி அங்கு வேலை செய்து கொண்டிருந்த சமயம் அப்பாவுடன் அப்பாவின் நண்பர் ஒருவரும் ஒரே அறையில் தங்கியிருந்து பணிபுரிந்திருக்கின்றனர். அந்த நண்பர் ஒரு நாள் சமயம் பார்த்து அப்பாவிடமிருந்த நகைகள் உடைகள் பணம் அத்தனையையும் திருடிக்கொண்டு தலை மறைவாகிவிட்டாராம். அந்த படிப்பினையை என்னிடம் நண்பர்களிடம் பழகுவது தப்பல்ல ,நண்பர்களின் குணம் அறிந்து பழகு , நம்மிடம் நல்லவிதமாக பழகிவிட்டு நமக்கு பின்புறம் போய் நம்மை பற்றி குறை பேசுபவர்களும் உண்டு அதனால் ''ஊரெல்லாம் எனக்கு நண்பர்களிருக்கிறார்கள் என்ற பெருமையை விட நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற நாலு நண்பர்கள் இருந்தால் போதும்'' என்பார் . அவர் சொன்னதன் படி இதுவரை என்னுடைய நண்பர்கள் எண்ணிக்கை ஏழைத் தொட்டிருக்கிறது. அவர்கள் ஒவ்வொருவரின் எண்ணிக்கையிலும் ஒன்று கூடியிருக்கிறது.

அப்பா எனக்கு நிறைய பொருட்கள் வாங்கிக்கொடுத்திருக்கிறார் ஆனால் எல்லாவற்றையும் கேட்டதும் வாங்கிக்கொடுத்ததுகிடையாது சில நாட்கள் கழித்தே வாங்கிக்கொடுத்திருக்கிறார். பணம் இருக்கே கேட்டதும் வாங்கிக்கொடுத்திருக்கலாம்தானே அப்பா என்றால் , கேட்டதும் வாங்கிக்கொடுத்தால் வாங்கிய பொருளின் மதிப்பறிந்திருக்க மாட்டாய். இப்பொழுது இத்தனை நாட்கள் கேட்டு கேட்டு வாங்கிய பொருளென்று அதை பத்திரமாக வைத்திருப்பாயல்லவா என்பார். கடந்த 1999 ம் வருடம் இதே டிசம்பர் மாதம் வந்த என்னுடைய பிறந்த நாளுக்கு நான் கேட்காமலேயே டைட்டன் ஸ்கொயர் டைப் வாட்ச் ஒன்று வாங்கிக்கொடுத்தார். வாட்ச் என்று அப்பா வாங்கிக்கொடுத்தது அதுதான் முதன் முறை அதுவரை நான் வாங்கிய உறவினர்கள் வாங்கிக்கொடுத்த நிறைய வாட்ச்கள் தொலைந்து போயிருக்கின்றன அல்லது உடைந்து போயிருக்கின்றன ஆனால் இந்த வாட்ச் கிட்டத்தட்ட பனிரெண்டு வருடங்களாக என்னுடனே இருக்கிறது என்பதை விட அப்பாவின் சார்பில் என்னுடன் இருந்து அன்பையும் அறிவுரையையும் தேவைப்படும் சமயங்களில் தந்துகொண்டேயிருக்கிறது...நிறைய புதுரக வாட்ச்கள் பார்க்கும்பொழுது    வாங்க வேண்டுமென்று ஆசையும் வந்ததில்லை..வேறு ஏதாவது வாட்ச்கள் கட்டும் சூழ்நிலை வந்தாலோ இல்லை இந்த வாட்ச் கட்ட மறந்த நாட்களோ மகிழ்ச்சியுடன் நகர்ந்ததில்லை..



இதோ இன்றைக்கு அப்பாவுக்கு எழுதும் பிறந்த நாள் வாழ்த்தையும் நான் எழுத எழுத பார்த்து சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கிறது.

பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா..

சென்ற வருடம் அப்பாவுக்கு எழுதிய பிறந்த நாள் வாழ்த்து பதிவு அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை

பதிவை வாசித்த அனைவருக்கும் நன்றிகள்..


December 18, 2011

ரைட்டிங் ஸ்டைல் ..

நம்முடைய கையெழுத்தில் கவிதையை வாசிப்பது நமக்கே சில சமயம் சிலிர்ப்பைதரும் இதோ எனக்கு சிலிர்ப்பை தந்த என் கை(உயிர்)எழுத்து இவ்ளோ நாள் விட்டுட்டு இப்போ ஏன்னு கேட்குறீங்களா? ப்ரியசகிக்காக...









December 12, 2011

'காமன்' வெல்த் (U/A)



ஒரு நாள் இருவரும் வெளியிலிருக்கும் ஒரு பார்க்கில் சந்தித்து கொண்ட பொழுது அவள் கையிலிருக்கும் மச்சத்தை பார்த்துவிட்டு ஹைய்யோ இத எப்படி கவனிக்காமல் போனேன் எங்கே சொல் உன் உடம்பில் எத்தனை மச்சம் இருக்கிறதென்று? என்று அவளிடம் கேட்டேன் ஏன் கேட்கறடா என்று வினவியவளிடம் சும்மா ஒரு லவ் நாலேட்ஜிற்க்குத்தான் சொன்னால்தான் என்னவாம் என்றேன் சிணுங்கியபடியே மொத்தம் பத்து இருக்கிறது என்றாள் எங்கெல்லாம் என்றேன் ஆச தோச நீயே கண்டுபிடிச்சுக்கோ என்றாள் பாவம் நீயாகவே சொல்லிவிட்டாயென்றால் உனக்கு நல்லது இல்லையென்றால் எனக்கு நல்லது ம்ஹூம் சொல்லமாட்டேன் என்றாள் அப்படியா மேடம் அப்போ நம்ம மேரேஜிற்க்கு பிறகு நானே கண்டுபிடித்துக்கொள்கிறேன் ஆனால் ''நான் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு மச்சங்களையும் வரிசையாக இணைக்கும்படி என் உதட்டால் உன் உடம்பில் மச்சக்கோடு வரைவேன் பரவாயில்லையா?'' என்றேன் ஆஆங் அதெப்படி முடியாது என்றாள் அப்போ சொல் என்றேன் ம்ஹூம் என்றாள் அப்போ மச்சக்கோடு ஒகேவா என்றேன் ஒகே என்றாள் கீழ் உதட்டை கடித்தபடியே..

திருமணத்திற்க்கு பிறகொரு நாள் புத்தம் புதிய ஒரு சேலை அணிந்துகொண்டிருந்தவள் என்னருகில் வந்து இந்த காட்டன் சாரி எனக்கு நல்லா இருக்கா என்று வினவினாள் சூப்பரா இருக்கு ஆனால் ''உனக்கு கூந்தல் சேலைதான் கொள்ளையழகு'' என்றதும் கூந்தல் சேலையா? என்று ஆச்சரியத்தோடு வினவியவளிடம் அதான் கண்ணே நேற்றைக்கிரவில் ''உன் உடம்பெங்கும் விரவியிருந்த உன் கூந்தலைத்தான் சொன்னேன்'' என்றபடி அவளை கட்டியணைத்தேன் ச்சீய் சரியான காட்டான்டா நீ என்று என்னிடமிருந்து விடுவித்துக்கொண்டு ஓடியவளை கூந்தல் சேலை அணிவிக்க வெகு நேரமாயிருக்கவில்லை..

மறுநாள் , குளித்துமுடித்துவிட்டு ஈரம் சொட்ட சொட்ட தலையை சிலுப்பியபடி சிணுங்கல்முகத்துடன் என்னிடம் வந்தவள் உனக்கு கொஞ்சமாவது சென்ஸ் இருந்தா இப்படிலாம் பண்ணுவியா நீ என்றாள் என்ன சொல்ற நீ ? ம் ஆமாம் உடம்புல சுடு தண்ணீர் விழுந்ததும் ஒரே எரிச்சல் என்னவென்று பார்த்தால் உடம்பெல்லாம் உன் நகக்கீறல் முதலில் உன் நகத்தை வெட்டிவிட வேண்டும் என்றாள் சிணுங்கலுடனே ஓஹ் அதுவா? அது ''நேற்றைக்கு நாம் கலந்துகொண்ட காமன்வெல்த் கேம்ஸில் நீ வாங்கிய பரிசுகள்'' கண்ணே என்றதும் இன்னும் வெட்கப்பட்டு சிரித்தாள் ஈரக்கூந்தல் அள்ளிமுடித்தவளை இன்னொரு காமன்வெல்த் கேம்ஸிற்க்கு தயார் படுத்தினேன்.

இன்னொரு நாள் பகல் பொழுதில் என் மடியில் தலை வைத்து படித்திருந்தவள் என்னிடம், நான் சாரிகட்டுறது பிடிச்சிருக்கா இல்லை சுடிதார் போட்டிருப்பது பிடிச்சிருக்கா என்றாள் சாரிதான் என்றேன் ஏன் என்றாள் சேலையில்தான் உன் வனப்பான பிரதேசங்கள் என்னை இன்புறச்செய்கின்றன என்றபடி உனக்கெது சவுகர்யமாக இருக்கிறது என்று வினவினேன் சுடிதார் என்றாள் ஏன்? என்றதும் , ''உங்களோட ப்ராபர்டிஸ் எல்லாம் பத்திரமா பாதுகாப்பா இருக்க ஹெல்ப் பண்ணுதே '' என்று வெட்கியவளை அடிக்கள்ளி என்றபடி அவள் உதட்டில் மென் முத்தமிட விடுங்க பட்டப்பகலிலேவா என்றாள் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமென்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்றதும் சிவந்த அவள் முகம் இன்னும் சிவக்க ஆரம்பித்தது..

ஒரு நாள் மாலைப்பொழுதில் நான் புத்தகம் படித்துக்கொண்டிருக்கையில் என் நெற்றியில் முத்தமிட்டவள் நீங்க எனக்காக எழுதிய கவிதைகள் அத்தனையும் ஏன் அந்த கருப்பு வண்ணத்திலிருக்கும் டயரியில் எழுதினீர்கள் எல்லோரும் வெள்ளை டயரியில்தானே எழுதுவார்கள் என்றாள் அதுவா ''நீ இந்த விமானத்தில் இருக்கும் கருப்புப்பெட்டி கேள்விப்பட்டிருப்பாய் விமானம் விபத்துக்குள்ளானால் அந்தகருப்புப்பெட்டியிலிருக்கும் ரகசியத்தை அனைவரும் தெரிந்துகொள்வார்கள் அதுபோலவே நான் உன் மேல் வைத்திருக்கும் அத்தனை காதலையும் இந்த கருப்புடயரி ரகசியமாய் வைத்திருக்குமென்றேன்'' , உணர்ச்சிவசப்பட்டவள் மிக தைரியமாக ஃப்ரெஞ்ச் கிஸ் ஒன்று கொடுத்தபடி என்னை வாரியணைத்தாள்.

மங்கிய நீல நிற இரவு விளக்கில் இருவரும் ஆதாம் ஏவாளாய் இருக்கையில் சின்ன சின்னதாய் காதல்ஸ்வரங்களாய் அவளின் கொலுசும் வளையல்களும் சத்தங்கள் எழுப்பிக்கொண்டிருந்தன இந்த கொலுசும் வளையலும் ஏன் சத்தம் போடுகிறதென்று தெரியுமாவென்றேன் இல்லையே என்றாள் நான் உன்னிடம் சரணடைந்துவிட்டதை பார்த்த கேலிச்சிரிப்புதான் அது என்றேன் ஓஹ் அப்படியா என்றவளிடம், கலைந்து போடப்பட்ட ஆடைகளை காட்டி ' அவங்க நம்ம மேல கோபமா இருக்காங்கபோல' என்றேன் சிரித்தபடி ஏன் அப்படி சொல்றீங்க என்றாள் அவங்கள நம் விளையாட்டில் சேர்த்துக்கொள்ளவில்லையே அதுதான் காரணமாயிருக்கும் என்றதும் க்ளுக்கென்று சிரித்தவளும் நானும் மீண்டுமோர் கள்ளாட்டம் விளையாட ஆரம்பித்திருந்தோம்..



December 6, 2011

இந்தா பிடி..விருதுகள் 2011

























கூடங்குளம், பால் விலை உயர்வு, பஸ்கட்டண உயர்வு,மின்கட்டண உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, இவ்வளவையும் எதிர்த்து தங்கள் வாழ் நாட்களை கடத்திக்கொண்டிருக்கும் பொதுமக்கள் ஒவ்வொருவரும் போராளிகளே..


நன்றி..