ஒரு மனிதனுக்கு தனக்கு குழந்தை பிறந்த பிறகு வீட்டிற்க்கு நல்ல நாள் பார்த்து எந்த நாளில் அழைத்து வருவது என சாய்ஸ் இருக்கு...
வீட்டிற்க்கு வந்த பிறகு அந்த குழந்தைக்கு அப்பா பெயர்வைப்பதா குலசாமி பெயர் வைப்பதா இல்லை மனைவி சொன்ன பெயர் வைப்பதா தன்னுடைய முன்னாள் காதலி காதலன் பெயர் வைப்பதா என்று சாய்ஸ் இருக்கு...
குழந்தையை ஆங்கில வழிக்கல்வி கற்க வைக்கலாமா இல்லை தமிழ் வழி கற்க வைக்கலாமா என்ற சாய்ஸ்ம் இருக்கு...ஸ்கூலுக்கு போய் படிச்சதும் இறுதியில் வைக்கும் தேர்வில் எந்த விடையை தேர்ந்தெடுக்க என்ற சாய்ஸ் இருக்கு...
பையன் பத்தாவது படித்து முடித்தது அடுத்து ப்ளஸ் ஒன் போகலாமா பாலிடெக்னிக் போகலாமா ஐடிஐ போகலாமா என்று சாய்ஸ் ப்ளஸ் டூ முடித்ததும் இன்ஞினியரிங் காலெஜ் போகலாமா இல்லை மருத்துவக்கல்லூரி இல்லை ஆர்ட்ஸ் காலேஜ் இப்படி மேல்நிலைக்கல்வியில் எதை தேர்ந்தெடுக்கலாம் என ஆயிரம் சாய்ஸ் இருக்கு...
படிப்பு முடிஞ்சதும் எந்த கம்பெனிக்கு அப்ளிகேசன் போடலாம் என சாய்ஸ் இருக்கு..ரெண்டு மூணு கம்பெனியில் இருந்து இண்டெர்வியூ வந்தாலும் எந்த கம்பெனிக்கு போவது என்று சாய்ஸ் இருக்கு..இண்டெர்வியூல நம்மல மாதிரியே நிறைய பேரிலிருந்து ஒருத்தரை தேர்வு செய்ய கம்பெனிக்கு சாய்ஸ் இருக்கு...
வேலை கிடைச்சதும் வர்ற சம்பளத்தை வைப்பு நிதியில் போடலாமா இல்லை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாமான்னு சாய்ஸ் இருக்கு...
பணம் நிறைய சேர்ந்ததும் அதை வைத்து ரெடிமேடாக அனைத்து வசதியும் இருக்கும் அபார்ட்மெண்டில் ஃப்ளாட் வாங்கலாமா இல்லை காலிமனை வாங்கி வீடு கட்டலாமா என்று சாய்ஸ் இருக்கு...
வீட்டுக்கும் ஆபீஸுக்கும் போய் வர கார் வாங்கலாமா இல்லை பைக் வாங்கலாமா பைக் வாங்கினால் எந்த மாடல் வாங்கலாம் என நிறைய சாய்ஸ் இருக்கு...
திருமணத்துக்கு பெண் பார்க்கும் வகையில் அழகா இருக்கற பெண்கள் , அதிக வரதட்சணை கொடுக்குற பெண்கள், படிச்ச பொண்ணா பெரிய குடும்பமா என பார்க்க பொருத்தமான ஜாதகம் பார்த்து திருமணத்துக்கு பொண்ணு தேட நிறைய சாய்ஸ் இருக்கு...
திருமணம் நிச்சயமானதும் அதை ஏதாவது ஒரு மாதத்தில் வரும் நல்ல நாட்கள் நாளில் எதில் வைக்கலாம் என்று சாய்ஸ் இருக்கிறது...திருமணத்தை மண்டபத்தில் வைக்கலாமா இல்லை கோவிலில் வைக்கலாமா என்ற சாய்ஸ் திருமணத்துக்கு விருந்து சாப்பாடு போடலாமா இல்லை டிபனோட முடிச்சுடலாமா என்று சாய்ஸ் நிறைய இருக்கு....
திருமணத்துக்கு உடுத்துற உடையில் ஆயிரம் சாய்ஸ் இருக்கு...ஃபேண்ட் சர்ட் போடலாமா இல்லை வேட்டி சட்டை போட்டுக்கிடலாமா புடவை கடைக்கு போனா எந்த புடவை என்ன கலர் எடுக்கலாம் என்று சாய்ஸ் இருக்கு....
திருமணம் முடிந்து வரும் நாட்களில் மனைவி காலையில் கணவனுக்கு காபி தருவதா இல்லை டீ தருவதா என்று சாய்ஸ் இருக்கு...
அதற்கு பிறகு வீட்டில் தினமும் இட்லி வைக்கலாமா தோசை ஊத்தலாமா சாப்பாடு செய்யலாமா தோசைக்கு தேங்காய்சட்னியா இல்லை தக்காளி சட்னியா என்ற சாய்ஸ் சிக்கன் வாங்கினால் வறுக்கிறதா இல்லை குழம்பு வைக்கறதா முட்டை ஆம்லேட் போடறதா ஆஃப்பாயில் போடறதான்ற சாய்ஸ் இருக்கு...
வீட்டிலிருக்கும்பொழுது விஜய் டிவி பார்க்கிறதா இல்லை சன்னா கலைஞரா என சாய்ஸ் இருக்கு...
ஞாயிற்றுகிழமை விஜய் படத்துக்கு போகலாமா அஜீத் படத்துக்கு போகலாமா இல்லை பீச்சுக்கு போகலாமான்னு சாய்ஸ் இருக்கு...
மொபைல் நோகியா வாங்கலாமா இல்லை சோனிஎரிக்சன் வாங்கலாமா வாங்கிய பிறகு ஏர்டெல்லா,ஏர்செல்லா,ஹட்ச்சா இப்படி நிறைய சாய்ஸ் இருக்கு...
பத்திரிக்கை வகையில் தினமலர்,தினத்தந்தி,தினகரன், குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம், சாரு, ஜெமோ, சுஜாதா இப்படி நிறைய சாய்ஸ்...
இவ்வளவு ஏங்க ஆயிரம் வலைப்பூ இருக்குற பதிவுலகத்தில் இவங்களை மட்டும் படிச்சா போதும்ன்னு குறிப்பிட்ட பதிவர்களை மட்டும் செலக்ட் பண்ணி படிக்க கூட சாய்ஸ் இருக்கு...
இப்படி வாழ்க்கையில் எந்த பக்கம் திரும்பினாலும் சாய்ஸ் இருக்கிற மனிதனுடைய வாழ்க்கையில் நமக்கு அம்மா அப்பாவாக இவர்தான் இருக்க வேண்டும் என்ற சாய்ஸ் இல்லை,ஏனென்று சிந்தனைகள் பறக்கவிட்டால் அவர்களுக்கும் நாம்தான் பிறக்க வேண்டும் என்ற சாய்ஸ் அவர்களுக்கு இருந்திருக்கவில்லை..
இறக்கும்பொழுது என்றைக்கு இறக்கப்போகிறோம்? வலிக்க வலிக்க இறக்கபோகிறோமா? இல்லை வலியில்லாமல் தூக்கத்திலே இறந்துவிடுவோமா? என்று சாய்ஸ் இல்லை(தற்கொலை செய்பவனை தவிர்த்து) ஆனால் செத்தபிறகு புதைக்கிறதா எரிக்கிறதா என்ற அதிமுக்கியமான சாய்ஸ் இருக்கிறது...இப்பொழுதுதான் தெரிகிறது தன்னுடைய சாவை தீர்மானித்து கொள்ளும் தற்கொலை செய்து கொள்ளும் கோழை எவ்வளவு அதிர்ஷ்டசாலியென்று...
வாழும்போதே வரிசையாக ஆள்களை நிற்கவைத்து அதிலிருந்து நண்பர்களை தேர்ந்தெடுக்கும் வசதியும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...நட்புங்கூட எப்பொழுது வருகிறது எப்பொழுது பிரிகிறதென்று தெரியாமல் தானாகவே வந்து தானாகவே பிரிந்துவிடுகிறது...
பிறப்பு கூட நாம ஆணாக பிறக்கணும் இல்லை பெண்ணாக பிறக்க வேண்டும் இந்த மதத்தில் இந்த சாதியில் பிறக்க வேண்டும் என்ற சாய்ஸ் இருந்திருந்தால் நிறைய பெண் சிசு கருக்கலைப்புகள்,சாதி மத சண்டைகள் இருந்திருக்காது..
காதல் கூட ஜாதி சமயம் பணம் அழகு இதெல்லாம் பார்த்து வருவதாய் இருந்திருந்தால் இப்போ இருக்குற காதலி காதலர்களுக்கு எவ்வளவு வசதியாய் இருந்திருக்கும்? ஹும்...
(ஒரு குழப்பவாதியின் ஆதங்கம்)