January 3, 2010

நடந்தாலும் நடக்கும்....!




இனி வரும் சில பல வருடங்களில் கிழ் கண்ட நிகழ்வுகள் நடந்தாலும் நடக்கலாம்...கண்டிப்பாக நகைச்சுவைக்காகவே நகச்சுவைக்காக அல்ல....


21 வயது நிரம்பிய ஆணை கிண்டல் பண்ணிய 5 வாலிபிகள் ஆடம் டீசிங்ல் கைது...!

வரதட்சிணையாக 25 கிலோ தங்கம் கேட்டு கணவனை துன்புறுத்தியதாக திருச்சியை சேர்ந்த தேவி என்ற மணமகள் வரதட்சிணை கொடும்சட்டத்தில் கைது...!

சமுதாயத்தில் ஆண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கேட்டு சென்னை ஹை கோர்ட்டில் ஆண் வக்கீல்கள் மூன்றாவது நாளாக வாயில் கறுப்புத்துணி கட்டி போராட்டம்....!

ஆண்கள் கல்லூரிக்கு ஃபேண்ட் சர்ட் அணிந்து வர தடை மாறாக அரைக்கால் டவுசரும் முண்டா பனியனும் அணிந்து வர உத்தரவு....

மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி கரிமேடு கன்னிகா நான்கு ஆண்களை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓட்டம் கரிமேடு போலீஸார் அவரை தேடி வருகின்றனர்....

நடை பெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஆ.மு.க.(ஆண்கள் முன்னேற்ற கழகம்) இந்த முறையும் படுதோல்வியடைந்தது, பெ.மு.க(பெண்கள் முன்னேற்ற கழகம்) போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது அந்த கட்சியின் தலைவி செல்வி.ச.மு.ஜிக்கி முதலைமச்சராக பதவியேற்க்க இருக்கிறார்...!

பேருந்தில் பயணம் செய்யும் ஆண்கள் அதிக அளவில் பெண்களால் சில்மிஷங்களுக்குட்படுவதால் ஆண்களுக்கென்று பிரத்யோக ஆடவர் பேருந்து விரைவில் இயக்க ஆவண செய்யப்பட வேண்டும் கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்....

25 வயது மதிக்கதக்க வாலிபரை நான்கு பெண்கள் கற்பழித்து கொன்ற கொடூர சம்பவம் சென்னை கொஸப்பேட்டையில் பயங்கரம் ....

தமிழகத்தில் பெண்களால் சித்ரவதைக்குட்படும் ஆண்களின் வழ்க்குகளை விசாரிக்க மேலும் 45 ஆடவர் காவல் நிலையங்கள் திறப்பு...!

பேறையூரை சேர்ந்த ஆண் ஒரே பிரசவத்தில் 4 ஆண் குழந்தை பெற்றார்....!

வரதட்சிணை கொடுமைக்கு ஆளான திருப்பூரை சேர்ந்த ராஜா என்பவர் மண்ணெண்ணெய் ஊற்றி மாமியாரால் கொலை செய்யப்பட்டார் மனைவியும் உடந்தை....

பிரசவத்திற்க்காக அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படும் கர்ப்பிணி ஆண்களுக்கு 1000 ரூபாய் பிரசவகால உதவியாக அளிக்கப்படும் என சட்டமன்றத்தில் முதலமைச்சர் செல்வி.ச.மு.ஜிக்கி அறிவிப்பு....!

பெருகி வரும் ஆண்சிசுக்கொலை தடுப்பதற்க்கு சிறப்பு கமிட்டி அமைக்கப்படுமெனவும் அவர் கூறினார்...

கோவையில் நடை பெற்ற மாபெரும் ஆண்கள் விடுதலை இயக்கத்தின் பொதுக்கூட்டத்தில் ஆண்விடுதலை பற்றி பேசிய கரூர் கண்ணபிரான் ஆளுங்கட்சியினரினால் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார்....

திருச்சி அரசு மதுபான கடையில் நான்கு பெண்கள் குடித்துவிட்டு கலாட்டா செய்து கடையை அடித்து நொறுக்கினர்...

பெண்கள் சந்தோஷப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் இதெல்லாம் நடக்கவே கூடாதுடா சாமீய்ய்ய்ய்ய்ய்ய்ய்....



67 comments:

Anonymous said...

புதுவருஷமும் அதுவுமா ஏன் இப்படியெல்லாம் உங்களுக்கு தோணுது.
இதெல்லாம் ஒண்ணும் நடக்காது. கவலைப்படாதீங்க. :)

சுசி said...

ஏனிந்த கொலைவெறி?

இப்டீல்லாம் நடக்கவே நடக்காது உ பி.

நாங்க ரொம்ப நல்லவங்கப்பா..
ரொம்ப சிரிச்சுட்டேன்..

சுசி said...

புது சைட்டு சூப்பர்..

சீமான்கனி said...

//கண்டிப்பாக நகைச்சுவைக்காகவே நகச்சுவைக்காக அல்ல....//

நல்ல இருக்கு மாப்ஸ்....

ஆத்தா இதெல்லாம் நடக்ககூடாதுனு வர்ர வெள்ளிகிழமை நானும் மாப்சும் மண்சோறு சாப்டுறோம்......தாயி...

Paleo God said...

ஹையோ ஹையோ .... (நீங்க யோசிக்கற ரூம் ஏங்க இருக்கு ?? )

பெசொவி said...

எல்லாம் சரி, அந்த கற்பழிப்பு சமாசாரம் ஒண்ணுதான் உறுத்தல். ஏன்னா....சேலைல முள்ளு பட்டாலும், முள்ளுல சேலை பட்டாலும், நட்டம் என்னவோ, சேலைக்குத்தான். என்ன சொல்றீங்க?
அது மட்டுமில்லீங்க, அந்த ஒரு விஷயத்துனாலேயே, மத்த விஷயங்கள் நிஜம் ஆக வாய்ப்பில்லை.

பீர் | Peer said...

:))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இது ஆவருதில்ல..
சீக்கரம் கால் ( அ) கை கட்டு போடனுமுனு நினைக்கிறேன்..

ஜெட்லி... said...

//25 வயது மதிக்கதக்க வாலிபரை நான்கு பெண்கள் கற்பழித்து கொன்ற கொடூர சம்பவம் சென்னை கொஸப்பேட்டையில் பயங்கரம் ....

//
:))

பார்த்து வஸந்த் எதுவும் பெண்கள் அமைப்பில் இருந்து எதிர்ப்பு
வரபோகுது!!

நட்புடன் ஜமால் said...

கணாக்கண்டியாப்பா

அல்லது கல்யாண பயமா

பேப்பூடாதே ...

சங்கர் said...

மக்கள் தொகை கணக்கெடுப்பு பத்தி சர்வே எதுவும் படிச்சீங்களா?

ஜிகர்தண்டா Karthik said...

ஆபிஸ் முடித்து வீட்டிற்கு திரும்பிய வாலிபரை, டிரைவர் பெண்மணி கற்பழித்துக் கொன்றார்.//
இதெப்படி இருக்கு...

kishore said...

யோவ்.. உனக்கு கல்யாணம் fix ஆகிடிசின்னு தெரியுது.. இப்போவே training எடுத்துகனுமா?
புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

Ganesh Gopalasubramanian said...

ஆஹா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க....

எல்லாம் ஓகே அதென்ன கர்ப்பிணி ஆண்கள்?

Unknown said...

இதெல்லாம் நடக்காது கவலைப் படாதீங்க.

வீட்டுல பொண்ணு பாக்குறாங்களா?

Anonymous said...

ஹஹஹ்ஹா இதுவும் கடந்து போகும்...ஆனால் இது ஒரு போதும் நடவாது கவலை வேண்டாம் வசந்த்,,,,,,,

நல்லா யோசிக்கிறீங்கப்பா....

அம்பிகா said...

ஆனாலும் ரொம்பத்தான் பயப்படுறீங்க.

பித்தனின் வாக்கு said...

இதில் கர்ப்பினி ஆண்கள் மற்றும் ஆண் பிரசவம் தவிர மீதி நடக்க வாய்ப்பு உள்ளது என நினைக்கின்றேன். நல்ல கற்பனை வசந்த்.

Ashok D said...

வாழ்த்துகள் தம்பி.. உங்க தலைக்கு மேல இருக்கறவங்களுக்காக :)

கல்யானம் ஆன பிறகு எல்லாம் ஆண்களும் பாவம்தான் :(

Prathap Kumar S. said...

//கல்யானம் ஆன பிறகு எல்லாம் ஆண்களும் பாவம்தான் :(//

ஐ அண்ணனுக்கு அனுபவம் பேசுது...

மாப்பு... ஏன் உனக்கு இத்தனை கொலைவெறி ? படிக்கும்போதே பயமாகீதே??? நடந்தால்??

ஏதாச்சும் ஹார்மோன் பிரச்சனையா?திடீர்னு ஆப்போசிட் சைடுல கோல் போடுற? எனக்குகென்னவோ பயமா இருக்கு... வசந்து, வசந்தா ஆகியிடுவியோன்னு... :-)

நாஸியா said...

ஐயோ என்னால முடியல.

"நான் ஆண் பிள்ளை, தண்ணி அடிப்பேன், சிகரட் குடிப்பேன், பெண்களை கேவலப்படுத்துவேன், நான் எப்படி வேணும்னாலும் இருப்பேன்" என்பதும் "நீ மட்டும் இதெல்லாம் செய்யலாம், நாங்க செய்தா அது தப்பா"ன்னு கேப்பதும் தான் இப்ப ஃபேஷன்

நாஸியா said...

கண்ணுல தண்ணி வர்ற வரைக்கும் சிரிச்சேன்! அதுவும் ரவுடி மேட்டர் சூப்பர்

பின்னோக்கி said...

எதுவும் நடக்கும்.
ஆடம்டீசிங் அந்த இடம் எங்க இருக்கு ? ஈ.சி.ஆர் பக்கத்துலயா ?

தமிழ் உதயம் said...

இப்பவும் இப்படியும் நடக்குது. ஆனா வெளிய தெரியல

கலையரசன் said...

நல்லாயிருக்கு அழகிய தமிழ்மகனே!!

//நாங்க ரொம்ப நல்லவங்கப்பா..
ரொம்ப சிரிச்சுட்டேன்//
எப்டிங்க??? இப்டியெல்லாம் சிரிக்காம கமெண்ட் பண்ண முடியுது??

(எல்லோருமே என்னை மாதிரிதான் போல..?)

பிரேமி said...

பெண்கள் மேல் ஏன் இந்த தீராத கோபம்? பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகுகிறீரே! ஒரு மனிதன் இந்த அளவிற்கா கற்பனை பண்ணிப் பார்ப்பது? காளியாத்தா நீ தான் இந்த ஆளை கேட்கணும்!

Deepan Mahendran said...

:) ரொம்ப கொடூரமான ஆளு மச்சான் நீங்க...!!!

Ramesh said...

ஆரம்பமே.... இப்படியாச்சு ம்ம்ம் ஏன் எதற்கு இப்படி எண்டு அடுத்த பதிவில் எதிர்பார்க்கிறோம்

அகல்விளக்கு said...

புது வருட வாழ்த்துக்கள் தல...

புது வருஷத்துல ஏன் இப்படி....

Starjan (ஸ்டார்ஜன்) said...

:-)))

கடைக்குட்டி said...

நாங்கள்ளாம் அந்தக் காலத்திலே என்னும் பதிவுல் நானும் கிட்டத்தட்ட இதே மேட்டரத்தான் எழுதினேன்..

நம்ம ரெண்டு பேருக்குள்ள என்ன அட்டாச்மெண்ட் பாருங்களேன்.. :-)

Vidhoosh said...

ஏங்க இப்படி.. :( sorry.


--வித்யா

balavasakan said...

நடந்தாலும் நடக்கும் இல்ல கட்டாயம் நடக்கும்

இராகவன் நைஜிரியா said...

என்னா ஒரு குசும்பு ... தாங்கலைடா சாமி..

rajamelaiyur said...

நல்ல உதைக்குற பொண்டாடி அமைய வாழ்த்துகள்

ஆர்வா said...

என்ன ஒரு கொலை வெறி

Rajan said...

எனது வலைப் பூவானது
கீழ்க்கண்ட முகவரிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது
http://kondralkatru.blogspot.com

அன்பின் ராஜன் ராதாமணாளன்

ஹேமா said...

வசந்து....ஏன்ம்பா இப்பிடிப் பயந்துபோய் இருக்கீங்க.எங்காச்சும் நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டீங்களோ ?இருக்கிறது அரபு நாடு.சந்தர்ப்பம் இல்ல.அப்ப ஏன் இப்பிடிப் புலம்பணும் !

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எப்படி அப்பு...

SUFFIX said...

ஏதாச்சும் கெட்ட கனவா:)

ரோஸ்விக் said...

பயப்பாடாதீங்க... நம்ம ஆளுங்க ஏற்கனவே சங்கம் ஆரம்பிச்சு தயாரா இருக்காங்க... சமாளிச்சுடலாம். :-)

வினோத் கெளதம் said...

டேய் கல்யாணதுக்கு ஆவுறதுக்கு முன்னடியேவா..:)

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் இதெல்லாம் நடக்கவே கூடாதுடா சாமீய்ய்ய்ய்ய்ய்ய்ய்....//
ரொம்பப் பயந்து போய் இருக்காப் போல தெரியுது. காத்துக் கருப்பு ஏதும் .............
கவனம்பா.

ஸ்ரீராம். said...

எனக்கு ஒரு வேட்டி உண்டா சட்டை உண்டா என்று ஆண்கள் மனைவிகளிடம் புலம்புவார்களோ...

சிநேகிதன் அக்பர் said...

பாஸ் சீக்கிரம் சங்கம் ஆரம்பிக்கனும்.

M.S.R. கோபிநாத் said...

வசந்த், இதெல்லாம் நடக்கும் ஆனா நடக்காது..

VISA said...

2010 லயே இப்படியா?

ராமலக்ஷ்மி said...

சிறகு விரித்த கற்பனை உய்ர உயரப் பறந்த படியே...:))!

அன்புடன் மலிக்கா said...

எங்கிருந்துதான் யோசிக்கிமோ என்ட சேட்டன், தாங்கமுடியலையே சிரிப்பு. சூப்பரப்பூ..

சகோ நேரம்கிடைகும்போது இதையும் பாருங்க
http://fmalikka.blogspot.com/

Chitra said...

புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆட்டம் ஜாஸ்த்தியா இருக்கே........

கமலேஷ் said...

ஜி....கல்யாணத்துக்கு முன்னாடிதான் இப்படி எல்லாம் எழுதி பாக்கலாம்....கல்யாணம் ஆகிடிட்சி, நகைச்சுவையா இருந்தாலும் உங்க வீட்டுகார அம்மாவே உங்க முதுகுல டின் கட்டிருவாங்க ....அதானால இந்தமாதிரி எழுதுற ஆசை எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே முடிட்சுகுங்க....(என்னதான் இருந்தாலும் நீங்க சொன்ன விஷயங்கள் கொஞ்சம் நடக்க கூடிய சாத்தியம் இருக்கு தலை...)

Unknown said...

உங்களுக்கு ....ஏன் இந்த வெறி ஐயா... பெண்கள் மீது..

உங்களின் நகைச்சுவை உணர்வு மிகவும் அருமை..

Rajeswari said...

:-))

TCTV said...

male shavanism ????

ithula enna nagaichuvai vendi kidakku ?

not nice man

any way
a big hiiiiiiiiiiiiiiiiii to u

சத்ரியன் said...

வசந்த்,

இனிமே தூங்க போகும் போது... கண்டடஹிப் பத்தியெல்லாம் நெனைக்காம தூங்கு.

Thenammai Lakshmanan said...

//பேறையூரை சேர்ந்த ஆண் ஒரே பிரசவத்தில் 4 ஆண் குழந்தை பெற்றார்....!//

வசந்து கல்யாணத்துக்கு முந்தி
இப்படி எல்லாம் பயம் வர்றது சகஜம்தான் :-)

பூங்குன்றன்.வே said...

//பேருந்தில் பயணம் செய்யும் ஆண்கள் அதிக அளவில் பெண்களால் சில்மிஷங்களுக்குட்படுவதால் ஆண்களுக்கென்று பிரத்யோக ஆடவர் பேருந்து விரைவில் இயக்க ஆவண செய்யப்பட வேண்டும் கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்....//

:)

thiyaa said...

அருமை,நல்ல நடை,நல்ல பதிவு
வாழ்த்துகள்

ப்ரியமுடன் வசந்த் said...

அகிலா...

இல்லீங்கோ இன்னும் ரெண்டுமாசத்துக்குத்தான் இதுமாதிரியெல்லாம் சுதந்திரமா எழுத முடியும் அப்புறம் கைதிதான் அப்புறம் என்னோட நிலைமை...?

நன்றி அகிலா....

***********************************

சுசி

வாங்க மேடம் எப்டியிருக்கீங்க லீவ் எல்லாம் சந்தோஷமா கழிந்ததா? கலையரசன் சொல்றது நிஜமா? அப்டியி உண்மையா இருந்தா நார்வேக்கு ஃப்லைட் பிடிச்சு வந்து தலையில குட்டுவேன்....!

புது சைட்டு பேரு சாம்லி...

:) நன்றி சுசிக்கா...

***********************************
சீமான் கனி...

மாப்பு வாடி வா... மண் சோறு திங்கணுமா இரு இரு அதுவும் பாலைவ்சனத்துல இருந்துட்டு உனக்கு இந்த ஆசை வரலாமா மாப்பு?

நன்றி சீமான் கனி

***********************************

பலா பட்டறை

நன்றி ஷங்கர் இந்த கதார்லதானுங்க இருக்கு...

***********************************

பெயர் சொல்லவிருப்பமில்லை

ம்ம் நடந்தாலும் நடக்கும்ன்னுதானே தலைப்பு ஆண் பெண்ணா மாறி அறுவை சிகிச்சை செய்ற கொடுமையெல்லாம் நடக்கும்போது இது கூட செஞ்சாலும் செய்வாங்க பெயர் சொல்ல விருப்பமில்லை...

நன்றி பெ.சொ.வி.இ.

:)

***********************************

ப்ரியமுடன் வசந்த் said...

பீர்

நன்றி பீர்மொஹம்மது..

:)

*************************************

பட்டாபட்டி

ம்க்கும் வீட்லதான் இப்பிடி சொல்லிட்டு திரியுறாய்ங்கன்ன்னா நீங்களுமா ? நல்லாயிருங்க சாமியோவ்...

நன்றி பட்டாபட்டி :)

***********************************

ஜெட்லி

வரட்டுமே பாத்துகிடலாம் நம்மளா அவங்களான்னு

நன்றி சரண் :)

***********************************

நட்புடன் ஜமால்

அண்ணா ஆமாண்ணா ஆமா இன்னிக்கும் வந்துச்சு ஒரே பயமா கீது இன்னா பண்றதுன்னே தெரில அவ்வ்..

நன்றிண்ணா

***********************************

சங்கர்

இல்லியே தல அதுவேற படிச்சோம்னா இன்னும் கொஞ்சம் பயமா போகும்,,,

நன்றி சங்கர்

***********************************

ஜிகர்தண்டா கார்த்திக்

சூப்பர்

நன்றி கார்த்திக்

***********************************

கிஷோர்

அடப்பாவி...!

நன்றி கிஷோர்

***********************************

கணேஷ்

நன்றிப்பா...! பெயர் சொல்லவிருப்பமில்லைக்கு கொடுத்த பதில் படிக்கவும்

:)

***********************************

முகிலன்

ம்ம் தெரிஞ்சுபோச்சா?

நன்றி முகிலன்

***********************************

ப்ரியமுடன் வசந்த் said...

தமிழரசி

வாங்க பிரபலபதிவர் எப்டியிருக்கீங்க ஆன்லைல கூட பாக்கமுடியாத அளவுக்கு பிஸியாயிட்டீங்க வாழ்த்துக்கள்
நன்றி தமிழரசி மேடம்...

:)

*************************************

அம்பிகா

ஆமாங்க

நன்றிங்க...

***********************************

பித்தனின் வாக்கு

ஏன் அதுவும் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

நன்றி சுதாகர்

***********************************

அஷோக்

ம்ம் நன்றி அஷோக் அண்ணா

:))

***********************************

நாஞ்சில் பிரதாப்

அடப்பாவிகளா ஒருத்தன் பயந்துபோயி கிடக்கானேன்னு ஆறுதல் சொல்லாம புகைய விடுறியே மாப்பு...

நன்றி பிரதாப்

***********************************

நாஸியா

கரெக்ட்டா சொன்னீங்க சகோ...

நன்றி நாஸியா

:)

***********************************

பின்னோக்கி

லொள் ஜாஸ்தியாயிடுச்சு...

நன்றி பின்னோக்கி

:)

ப்ரியமுடன் வசந்த் said...

தமிழுதயம்

இப்போவே நடக்குதா சரியாப்போச்சு போங்க...

நன்றி தமிழுதயம்

*************************************

கலையரசன்

டேய் சுசிய கிண்டல் பண்றியா நீ?

நன்றி கொலையரசன்

:)))

***********************************

சந்தோஷி

மேடம் உங்க ப்லாக் வந்தேன் நீங்க ப்ரொஃபசரா? தமிழ் விளையாடுதே மேடம் எனக்கு அது மாதிரி நல்ல பதிவுகளை வாசிக்க கூட தகுதியில்லை மேடம்

நன்றி சந்தோஷி மேடம்

***********************************

சிவன்

தீபன் அப்டியெல்லாம் சொல்லக்கூடாது மச்சி பின்ன நான் அழுவேன்...

:)

***********************************

றமேஷ்

ஓஹோ...

நன்றி றமேஷ்

***********************************

அகல் விளக்கு

நன்றி அகல் விளக்கு

***********************************

ஸ்டார்ஜன்

நன்றிப்பா

***********************************

கடைக்குட்டி

ம் இப்போதான் பார்த்தேன் அது பொதுவான மேட்டர்ஸ் அதுல பல இப்போ ரீச் ஆஅயிடுச்சே தம்பி...

நன்றி கடைக்குட்டி

***********************************

வித்யா

ஏங்க?

நன்றிங்க

***********************************

ப்ரியமுடன் வசந்த் said...

வாசு

அதான்...

நன்றி வாசு

:)

*************************************

இராகவன் நைஜீரியா

உங்க தம்பியாச்சே...

நன்றிண்ணா

:))

***********************************

ராஜா தெ கிங்

ம் ராஜான்னாலே கிங் தானே பாஸ் ஹா ஹா ஹா

லொள்ளு வேறயா நல்ல ஆசை,..

நன்றி ராஜா முதல் வருகைக்கு

***********************************

கவிதை காதலன்

நன்றி கவிதை காதலன்

***********************************

ராஜா ராதாமணாளன்

அடப்பாவி இன்னொன்னா?

:))

***********************************

ஹேமா

கண்ணடியோ காலடியோ சே கல்லடியோ வாங்குற மாதிரி கனவு அதான்...!
நன்றி ஹேமா

***********************************

சஃபி

ம்ம் நன்றி சஃபி

***********************************

ரோஸ்விக்

நன்றி ரோஸ்விக்

:)

***********************************

வினோத்

ஆமாடா மச்சி

நன்றிடா...

***********************************

ஜெஸ்வந்தி

அக்கறைக்கு நன்றி ஜெஸ்ஸம்மா

:)

***********************************

ஸ்ரீராம்

கரெக்ட்டு நான் இந்த பாயிண்ட் மிஸ் பண்ணிட்டேனே...

நன்றி ஸ்ரீராம்

***********************************

அக்பர்

சங்கம் ஆரம்பிச்சுட்டா போச்சு

நன்றி அக்பர்

***********************************

ப்ரியமுடன் வசந்த் said...

கோபிநாத்

நடக்கும்

நன்றி கோபிநாத்

*************************************

விசா

ம் நன்றி விசா சார்

***********************************

ராமலக்ஷ்மி மேடம்

நன்றி மேடம்

:)

***********************************

மலிக்கா

ஹா ஹா ஹா

நன்றி சகோ...

:))

***********************************

சித்ரா

ம்ம் இன்னும் ஆரம்பிக்கவேயில்லயே ஆட்டம் இனிதான் ஆரம்பமாகும் அவ்வ்வ்...

நன்றி சித்ரா

:)

***********************************

கமலேஷ்

ஹா ஹா ஹா அவ்வ்வ்வ்

நினைச்சாலே பயமா இருக்கே தல


நன்றி கமலேஷ்

:)
***********************************

ஃபாயிஷா

மிக்க மகிழ்ச்சி ஃபாயிசா நன்றியும்

:)

***********************************

ப்ரியமுடன் வசந்த் said...

ராஜேஸ்வரி

ரசனைக்காரி நன்றிங்க மேடம்

:)

************************************

சொர்ணா

டி ஏன் உங்க குரூப்பு பண்ற அட்டகாசமெல்லாம் தெரியாத மாதிரி சொல்றீங்க இருங்க இருங்க உங்களுக்கு இது போல பயப்படாத மணமகன் அமைய வாழ்த்துக்கள் அப்போ தெரியும்...

இன்னிக்கு உங்க ப்லாக் போட்டோ சூப்பரு...

:))

***********************************

சத்ரியன்

சரிங்ணா நன்றிங்ணா

:))

***********************************

தேனம்மை

சரிங் தேனம்மா

நன்றி..

:)

***********************************

தியா

நன்றி

:)

***********************************

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி பூங்குன்றன்

:))

பாஸ்கரன் said...

தாங்க முடியல!!!

அது என்ன ஆண்களுக்கும் அதே 33% தானா?