Showing posts with label என்ன லேபிள்ன்னு எனக்கே தெரியலை. Show all posts
Showing posts with label என்ன லேபிள்ன்னு எனக்கே தெரியலை. Show all posts

August 7, 2010

கவிஞருடன் ஒருநாள் !!!!

கவிஞர் : சித்திரையிரவின்
                     நித்திரை கலைந்திருக்கிறேன்
                     நித்திரையில் வந்தவளால்
                     புண்பட்ட இதழ் இதமடைய
                     சூடான தேநீர் தருவாயா?
                     தந்தால் சொல்கிறேன்
                     நித்திரையில் வந்தவள்
                     யாரென்று!

கவிஞர் மனைவி : தூ காலங்காத்தாலே ஆரம்பிச்சுட்டீகளா ராஸா? எந்திரிச்சு பல்லு கூட விலக்கலை ஊத்தவாய்ல கவிதை சொல்ல ஆரம்பிச்சுட்டாரு...போங்க போயி பல் விலக்குங்க அப்புறம் டீ சாப்டலாம்...

கவிஞர் : ஏன் விலக்குகிறேன்
                     என்றே தெரியாமல் தினமும்
                     விலக்குகிறேன்
                     விரல் வலிக்க
                     விலக்கி விலக்கி
                     பார்த்தும் விலகவில்லை
                     பற்கள் இது என்ன மரபோ?

கவிஞரின் மனைவி : செருப்பு நேத்து ராத்திரி தின்ன பிரியாணி வாய்ல நின்னு ஊசிப்போய் இங்க கப்படிக்குது சீக்கிரம் பல்ல விலக்கிட்டு வாருமய்யா!

கவிஞர் : சூடான தேநீர் கேட்டேன்
                     சூடான்காரன் தேநீர்
                     கொடுக்கிறாய் ஏன்?
                     பாலில் தேநீர் உருவாக்கும்
                     வித்தை கற்கவில்லையா
                     பெண்ணே?

கவிஞரின் மனைவி : வெங்காயம் பால்காரனுக்கு மூணு மாச கடன் பாக்கி இதுல பால் டீ வேணுமாம்ல குடுத்தத குடிச்சுட்டு வேலைக்கு கிளம்ப வேண்டிய வேலைய பாருங்க ராஸா!!!!

கவிஞர் : ஒரு வாளி கடலில்
                     நான் குளிக்கும்
                     ஆனந்த குளியலே
                     ஒரு கவிதையாய்...
                     ஒருவேளை
                     ஆனந்த விகடனில்
                     வருமோ?

கவிஞரின் மனைவி : பிபிசியில வரும் பிச்சுபுடுவேன் பிச்சு குளிச்சுட்டு சீக்கிரம் வாங்க சாப்பாடு எடுத்து வச்சுருக்கேன் தின்னுட்டு கிளம்புங்க...

கவிஞர் : இலைச்சோறு
                     சாப்பிடாமல்
                     இளைத்துவிட்டேன்
                     என்கிறேன்
                     நீயோ பழைய
                     சோறு சாப்பிடுங்கள்
                     பருத்து விடுவீர்கள்
                     என்கிறாய் எந்த ஊர்
                     நியாயம் இது?

கவிஞரின் மனைவி : மீந்தது யார் தின்னுவா உங்களை தவிர ? என் ராசா இல்ல மதியானத்துக்கு சூடா கொடுத்தனுப்புறேன் சாப்பிட்டு கிளம்புங்க என் கண்ணுல்ல...

கவிஞர் : பொடி போட்டுக்கொண்டே
                     பொடிநடையாய்
                     நடக்கிறேன்
                     பொறம்போக்கு
                     வீட்ல சொல்லிட்டு
                     வந்துட்டியா?
                     என்கிறான் சைக்கிள்
                     ஓட்டும் பொடிப்பையன் !

மனைவியின் மனசாட்சி : பிசினாரி காசு கொடுத்து பஸ்ல போக மாட்டீங்களாக்கும்?

கவிஞர் : ஓடிபோய் பஸ் ஏறி
                     பிடிங்க துட்டு
                     கொடுங்க சீட்டு
                     என்றேன் ஓட்டுனரிடம்
                     யோவ் கண்ணாடிய சரியா
                     போடுமய்யா நடத்துனர்
                     பின்னாடி இருக்கார்
                     என்றவரிடம்
                     எப்படிச்சொல்வேன்
                     மனைவியின் பிக்கல்
                     தாங்காமல் மேலோகத்திற்க்கு
                     செல்ல சீட்டு கேட்டது
                     அவரிடம் தானென்று !

மனைவியின் மனசாட்சி : சார் அவருக்கு ஒரு சீட்டு கொடுத்துடுங்க சார்!!!!!

முற்றும்...




.