November 16, 2010

லிவிங் டுகெதர் கலாச்சாரம் - இதுதாண்டி விபச்சாரம்!

லிவிங் டுகெதர் என்ற ஒரு மேற்கத்திய கலாச்சாரம் நம் நாட்டிலும் பரவி வருகிறது இதை ஆதரிப்பவர்கள் நிற்க அதற்கு தக, ஆதரிக்காதவர்கள் தொடர்க அதற்கு தக...

உஷ்ஷ்.......யாருய்யாஅங்க சவுண்டு விடறது

சொக்காய பிடிச்சு தூக்கி போடுங்கடா அவன

ஒருத்தொருக்கொருத்தர் பிடிச்சுருக்குற வரைக்கும் சேர்ந்து வாழ்வோம் பிடிக்கலைன்னா பை சொல்லி பிரிஞ்சிடுவோம் இதுதான் என்னோடகொள்கை என்னோட பிள்ளைகளையும் அப்படித்தான் வாழ வைக்கப்போறேன் என்பவர்கள் கொஞ்சம் பொறுமை பொறுமையா படிங்க...
(புரியலையா மக்கள்ஸ் அதான்யா வேலுபிரபாகரனின் ரசிக குஞ்சுமணிகள் உலகம் முழுவதும் இருக்காங்களே அவங்களத்தான் என்னாது வேலு பிரபாகரன் யாரா? அவருதான்யா எல்லாரும் ட்ரெஸ் எதுவுமில்லாம ஆடலாம் திரியலாம்ன்னு சொன்ன மகா ஞானி)

லிவிங் டுகெதர்

என்னங்கடா டேய் ஃபாரின்காரன் அறிமுகப்படுத்துன சாலைவிதிகளையெல்லாம் மதிக்கவே மாட்டேன்றீங்க இந்த விஷயத்தை கப்புன்னு பிடிச்சுகிறீங்க கப்படிக்குது ராசாக்களா ஒதுங்குங்க...ஒரு நிமிஷம் சாலை விதிகளுக்கு போடப்பட்ட கோடுகள் எதற்க்கு போடப்பட்டன என்று யோசித்து பார்க்காமல் அந்த கோடுகளை மீறி அப்படித்தான் செல்லுவோம் என்பவர்கள் கண்டிப்பாய் ஒருநாள் அடிபட்டு வீழ்வார்கள்...

இன்னைக்கு ஒருத்தி நாளைக்கு ஒருத்தன் இப்படி வாழறவாழ்க்கையில சத்தியமா உண்மையான அன்பு இருக்கப்போறதில்லை காமத்துக்காக ஆணும் பணத்துக்காக பொண்ணும் போகிற தடம் புரண்ட வாழ்க்கைதான் இந்த லிவிங் டுகெதர்...

அதாவது ஒரே பெண் தரக்கூடிய சுகத்தால் அலுத்துபோய் அடுத்தடுத்தபெண்ணின் சுகத்தை தேட விரும்புவர்கள் வாழும்  வாழ்க்கை பச்சையா சொன்னா தே.......யா வாழ்க்கை..மும்பையின் ரெட் லைட் பகுதியில்  நடக்கும் ஒரு விஷயத்தை இவர்கள் இதுதான் எங்கள் புதிய கலாச்சார வாழ்க்கை என்று பேசுகிறார்கள்

டேய் நிறுத்துடா கலாச்சாரத்தை தூக்கி நிறுத்தறவனாட்டம் பேசாதன்னு சொல்றவங்களை ஒண்ணும் பண்ணிடாதீங்கப்பா ஏன்னா ரெண்டு தார வாழ்க்கை வாழற ஒரு மனிதன் ஆளும் நாட்டில்தான் நாமும் அவர்களும் இருக்கிறோம் விட்டுடுங்க பாவம்..


ஆகட்டும் சரிதான்னு வச்சுக்கோங்கய்யா நீங்க முதல்ல சேந்து வாழற வரைக்கும் இருந்த வாழ்க்கையில் பிறந்த குழந்தைகள் அதற்க்கு அடுத்து சேர்ந்து வாழற ஜோடியோடு பிறந்த குழந்தைகள் இவர்களைப்ப்ற்றி நினைத்து பார்த்தீர்களா? எல்லா குழந்தைக்கும் தனக்கு ஒரு அப்பா இருக்குறதைத்தான் விரும்புவார்கள் நிறைய அப்பாக்கள் இருந்தால் அந்த குழந்தை "சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்" அப்படின்னு அஜீத் மாதிரி பாட வேண்டியிருக்கும் ( புரியாதவர்கள் அமர்க்களம் படம் பார்க்கவும் )

இந்தியாவில் பிறந்த நான் இந்திய கலாச்சாரத்தை தமிழ் கலாச்சாரத்தை மதிக்கிறேன் அப்படி மதிக்காதவர்கள் பற்றி எனக்கொன்றும் கவலையில்லை அவர்கள் இந்தியாவில் பிறந்தவர்களாக இருக்க மாட்டார்கள் அல்லது ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்க்கை முறையில் பிறக்காதவர்களாய் இருக்க கூடும்....

கார்ட்டூன்


.
நாங்க அப்படித்தான் வாழ்வோம் என்று சொல்பவர்கள் முருகன் அருளால் நல்லபடியா வாழ வாழ்த்துகள்!


.