September 11, 2009

நவீன சுயம்வர கேள்விகள்

என் கனவுல வந்த இந்த கால மணமகள் என் கிட்ட கேட்ட சுயம்வர கேள்விகள்

1.பக்கத்துல முதியோர் இல்லம் இருக்கா?

2.வீட்டு வேலை செய்ய வேலைக்காரர்கள் இருக்கிறார்களா?

3.உங்க ஊர்ல எத்தனை ஜவுளிக்கடை இருக்கு?

4.குழந்தைகள் பிறந்ததும் குழந்தை வளர்ப்பு மையத்தில் விடுவதற்க்கு தங்களுக்கு ஆட்சேபணை இருக்கா?

5.பியூட்டி பார்லருக்கு மாசம் எவ்வளவு பட்ஜெட்ல ஒதுக்குவீங்க?

6. வீட்டிற்க்கு இரண்டு தொலைக்காட்சி பெட்டிகள் வேண்டும் என்ற என் கருத்துக்கு தங்கள் பதிலென்ன?

7.காதல் அனுபவம் உண்டா?

8.எங்கள் குடும்பம் அடிக்கடி வீட்டுக்கு வந்தால் தங்கள் மனது சந்தோஷப்படுமா?வருத்தப்படுமா?

9.எனது தங்கையின் திருமணச்செலவில் பங்கெடுப்பீர்களா?

10.வருடத்திற்க்கு எத்தனை சேலை அல்லது சுடி வாங்கித்தருவீர்கள்?

11.எனக்குத்தெரியாமல் என்னுடன் வரும் என் நண்பிகளை சைட் அடிப்பீர்களா?

12.திருமணத்திற்க்கு பிறகு குழந்தை பிறக்காவிட்டால் விவாகரத்து புரிவீர்களா?இல்லை வாழ்க்கையை என்னுடன் தொடர்வீர்களா?

13.அப்படி குழந்தை பிறக்கும்பட்சத்தில் பெண்குழந்தை பிறந்தால் வெறுப்பீர்களா?சந்தோஷப்படுவீர்களா?

14.ஒரு சரியான கருத்துக்காக நான் தங்கள் அம்மாவுடன் சண்டை போட்டால் நீங்கள் என் பக்கம் வாதாடுவீர்களா?இல்லை தங்கள் அம்மா பக்கம் வாதாடுவீர்களா?

15.திடீர்ன்னு என்னோட பழைய ஆண்நண்பர்கள் எனக்கு தொலைபேசியில் அழைக்கும்போது அழைப்பை துண்டித்துவிடுவீர்களா? இல்லை என்னை அழைத்து பேச சொல்வீர்களா?

16.என்னோட குடும்பம் திடீர்ன்னு கஷ்டப்படுற நிலைக்கு போயிடுச்சுன்னா நீங்க அவங்களுக்கு உதவுவீர்களா? இல்லை கண்டுகொள்ளமாட்டீர்களா?


பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க....

நான் எஸ்கேப்பு....


58 comments:

அன்புடன் மலிக்கா said...

சுவாரசியமான கேள்வி பதில்கள்
சிந்திக்கவேண்டியவைகள்தான்

Vidhoosh said...

நீங்க என்ன சொன்னீங்கன்னு சொல்லவேயில்லையே??

--வித்யா

vasu balaji said...

இதெல்லாம் கேட்டுகிட்டா தேர்ந்தெடுப்பாங்க. பிடிச்சிருக்குன்னா இதுக்கெல்லாம் சம்மதம்னு ஹிட்டன் அஜெண்டாவாச்சே. :))

வழிப்போக்கன் said...

முக்கியமான கேள்வி...

17.உங்களுக்கு சமைக்க தெரியுமா???

:)))
நல்ல பதிவு...

தமிழ் அமுதன் said...

இதுக்கெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பதிலும் பின்னாடி ஓர் பதிலும்தான் வரும்...........!

தொடர்ச்சியா கலக்குறீங்க ...! நன்றி ..!

ஈரோடு கதிர் said...

முக்கியமான கேள்வி மிஸ்ஸாயிடுச்சு வசந்த்...

கல்யாணம் பண்ணனுமா!!??
சேர்ந்து வாழ்ந்தா போதுமா!!??

துபாய் ராஜா said...

கனவுலே இம்பூபூபூட்டு கேள்வியா .... :))

கார்த்திகைப் பாண்டியன் said...

கேள்வி ரைட்டோ தப்போ.. கனவுல பொண்ணு வருதுன்னா, கல்யாண வயசு வந்துருச்சுப்பா.. ரைட்டு.. நடத்துங்க..

க.பாலாசி said...

ச்ச..ஒரு மனுஷன் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு இவ்வளவு கேள்விகளா?

முடியல...

யோ வொய்ஸ் (யோகா) said...

யாராவது உங்கள பார்த்து கேட்டதா? என்னா பதில் சொன்னீங்க

ஹேமா said...

என்ன வசந்த்,எதிர்காலத் திட்டத்திற்கு முன் ஜாக்கிரதையோ...!எதையும் எதிர்பார்த்தே இருங்க.அதிர்ச்சியா இருக்காது.

Unknown said...

சுவாரசியமாக இருக்கு உங்கள் கனவு கேள்விகள்...

அப்பாவி முரு said...

இத்தனை பேராலையே சமாளிக்க முடியலையே,

பாவம் அந்த ஒரு பொண்ணு...

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்க பதில் அடுத்த பதிவுலயா

சுசி said...

சூப்பரா எஸ்கேப்பிட்டீங்க வசந்த்.

மத்தது கேப்பாங்களான்னு தெரீல.. ஆனா இது சாத்தியம்.

//11.எனக்குத்தெரியாமல் என்னுடன் வரும் என் நண்பிகளை சைட் அடிப்பீர்களா?//

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க....///////




இந்த பதினாறும் பெற்றா சிறு வாழ்வு கூட வாழ முடியாது வசந்த் ............

உங்க பதிவு அனைத்தும் அருமை

வாழ்த்துக்கள்

சத்ரியன் said...

//பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க....

நான் எஸ்கேப்பு....//

வசந்த்..,

ஏன் அப்பு வாழ்த்து சொல்லமாட்டீங்க! எத்தன காலத்துக்கு ராச எஸ்கேப்பு?

இன்னும் நாள் இருக்கு செல்லம்!அப்ப நாங்க சொல்வோம்.பதினாறே போதுமா? இன்னும் கூட்டிக்கனுமான்னு !

நாங்க பாட்டெல்லாம் கூட பாடுவோம்."ஆடிய ஆட்டமென்ன?...."

இராகவன் நைஜிரியா said...

இஃகி, இஃகி.... சிரிப்பு சிரிப்பு வருது, சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது..

Menaga Sathia said...

எத்தனை நாளைக்கு வசந்த் எஸ்கேப் ஆகுவீங்க.என்னிக்கு இருந்தாலும் கால்கட்டு போடத்தானே போறாங்க.அப்புறம் அந்த தேவதை உங்களுக்கு சமைக்கத் தெரியுமான்னு கேட்கலையா?
//காதல் அனுபவம் உண்டா?//அவங்க மட்டும் என்னை கேட்டாங்கன்னா உங்களைப் பத்தி நான் நல்லாவே சொல்வேனே...

அமுதா கிருஷ்ணா said...

இத்தனை கேள்வி கேட்கும் வரை வாயே திறக்கவில்லையா..அப்ப நீங்க செலக்ட் ஆயாச்சு இந்த சுயம்வரத்தில!!!!all the best..கேள்விகள் ஒவ்வொன்னும் சும்மா நச்சுன்னு இருக்கு தம்பி...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//வழிப்போக்கன் said...
முக்கியமான கேள்வி...

17.உங்களுக்கு சமைக்க தெரியுமா???//

இதுதானே முதல் கேள்வியை இருக்க வேண்டும். எப்படித் தப்பிப் போச்சு????

சிங்கக்குட்டி said...

//பக்கத்துல முதியோர் இல்லம் இருக்கா//
வருடமும் வயதும் எல்லோருக்கும் ஓடும் வசந்த் :-))

Anonymous said...

உன்னை மாதிரி உஷாரா இருக்குற பார்ட்டிகதான் நல்ல வசமா மாட்டுவாங்க. சிக்கிக்கிட்டு சீக்கி அடிக்க வாழ்த்துகள் வசந்த்.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

ரைட்டு! வாழ்த்துக்கள்(?) :):):):):)

கலையரசன் said...

கல்யாண ஆசை வந்துடுச்சோ...

வால்பையன் said...

இப்படித்தான் ஆம்பளை பொய் சொல்ல ஆரம்பிக்கிறான்!

Rekha raghavan said...

அப்பா..இப்பவே கண்ண கட்டுதே...
என்ன வசந்த் கனவில் கேட்ட கேள்விக்கே இப்படி ஆயிட்டீங்களே..
நெசம்மா கேட்டா என்னா ஆவிங்களோ?

ரேகா ராகவன்.

யாழினி said...

அடக் கடவுளே! இப்படியெல்லாம் கனவு வருகுதா உங்களுக்கு? :)

Unknown said...

இது எல்லாத்துக்கும் உங்க பதில் என்னவா இருக்கும்னு கற்பனை செய்தால் ரொம்ப சிரிப்பு வருது!உங்களுக்கு நான் மெயில் பண்றேன்,சீக்கிரம் இன்விடேஷன் அனுப்புங்க!

Starjan (ஸ்டார்ஜன்) said...

நான் எஸ்கேப்பு....

அப்துல்மாலிக் said...

//குழந்தைகள் பிறந்ததும் குழந்தை வளர்ப்பு மையத்தில் விடுவதற்க்கு தங்களுக்கு ஆட்சேபணை இருக்கா?//

குழந்தை பெற்றுக்கொள்வது அவசியமா என்ற கேள்வி கேட்காம விட்டாங்களே சந்தோஷப்படுங்க‌

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னய்யா கமான்ட் போடுறது உனக்கு. சூப்பர் நு சொல்லி சொல்லி போரடிசிடுசு

Admin said...

உண்மைய சொல்லுங்க வசந்த் இது உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள்தானே.

கிரி said...

//வழிப்போக்கன் said...
முக்கியமான கேள்வி...

17.உங்களுக்கு சமைக்க தெரியுமா???

:)))//

:-)))))

Anonymous said...

1,2,3,4,5,6,11, இந்தாடியம்மா பொண்ணு எங்க வசந்த என்னன்னு நினைச்சிகிட்டு இருக்க..இந்த கேள்விக்கெல்லாம் உன்னை அடிச்சி பின்னா ஏன் இருக்கார்னா இன்னும் உன்னைய் கல்யாணம் கட்டலை ஒடிப்போயிடு.....

gayathri said...

intha kelvikalai ellam naan manapadam seithu vaithukolkiren

appa than ennavanidam ketpadarku vasathiyaka irukkm:)))))))))

Anonymous said...

7.இந்த கட்டத்தை கடக்காதவர்கள் இல்லை
8.வரலாம் இல்லாததையும் பொல்லாததையும் உனக்கு சொல்லி தராமல் இருந்தால் வரலாம்
9.கண்டிப்பா அவசியம் என்றும் பொருப்பு என்றும் செய்வார்
10.ரொம்ப முக்கியம்
12.எங்க வசந்த நீ என்னன்னு நினைச்சிகிட்ட?மனங்கள் வாழ்வது தான் வாழ்க்கை மற்றது இல்லை
13.முகம் தெரியாத தங்கையை இன்று வரை நினைத்தும் வருந்தும் எங்கள் வசந்த் எதிர்ப்பார்பதும் பெண் குழந்தயே
14.அம்மா பக்கம் பேசிவிட்டு தனிமையில் உனக்கு எடுத்து சொல்வார்..பெரியவங்க நாம தான் விட்டு தரனும் என்று அப்பறம் அம்மாவுக்கும் நீ கூட பார்த்து செய்மா அவ சின்ன பொண்ணு என்று
15.ஹாஹாஹா 11 கேள்வி வேண்டுமானால் நீ அப்படி கேட்டு இருக்கலாம் ஆனால் வசந்த் அப்படி இல்லை அழைத்து பேச சொல்வார்
16. அது உன்னோட குடும்பமில்லை நம்மோட குடும்பன்னு சொல்வார் தாங்குவார் எல்லா துன்பத்தையும்.... எங்கள் வசந்த்
16ம் பெற்று பெருவாழ்வு வாழ்வார்....

இதையெல்லாம் சொல்றீங்களே நீங்க யாருன்னு கேட்கிறியா வெறும் நட்பு தான் ஆனால் நாங்க வசந்தை இவ்வளவு படிச்சி வெச்சியிருக்கோம்.. நீயும் புரிந்து நடந்துக் கொள்....

நட்புடன் ஜமால் said...

நிறைய பேர் பதில் எதிர்ப்பார்க்கிற மாதிரி இருக்கே

----------------

பதில் கடைசியாக சொல்லிட்டார் பாருங்கோஸ்

முனைவர் இரா.குணசீலன் said...

நியாயமான கேள்விகள் தானே நண்பரே

ஜெட்லி... said...

//உன்னை மாதிரி உஷாரா இருக்குற பார்ட்டிகதான் நல்ல வசமா மாட்டுவாங்க. சிக்கிக்கிட்டு சீக்கி அடிக்க வாழ்த்துகள் வசந்த்.

//

repeatae

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கல் கேள்விகள் வசந்த் :)

S.A. நவாஸுதீன் said...

”தங்கச்சி. நீ பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க....” இதானே வசந்த் சொல்லிட்டு வந்த்தீங்க.

SUFFIX said...

கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்வளவு கேள்வியா? இதுக்கு லேபில் டிப்ஸ் & ட்ரிக்ஸ்னு கொடுத்துடுங்க வஸ்ந்த்.

அன்புடன் அருணா said...

நல்ல வேளை கனவுப் பெண் !!!!

ப்ரியமுடன் வசந்த் said...

//அன்புடன் மலிக்கா said...
சுவாரசியமான கேள்வி பதில்கள்
சிந்திக்கவேண்டியவைகள்தான்//

நன்றி மலிக்கா

-------------------------------------

//Vidhoosh/விதூஷ் said...
நீங்க என்ன சொன்னீங்கன்னு சொல்லவேயில்லையே??

--வித்யா//

நான் எதுவும் சொல்லாம எஸ்கேப்பு

நன்றி வித்யா

-----------------------------------

//வானம்பாடிகள் said...
இதெல்லாம் கேட்டுகிட்டா தேர்ந்தெடுப்பாங்க. பிடிச்சிருக்குன்னா இதுக்கெல்லாம் சம்மதம்னு ஹிட்டன் அஜெண்டாவாச்சே. :))//

ஹி ஹி

நன்றி பாலா சார்

-----------------------------------

//வழிப்போக்கன் said...
முக்கியமான கேள்வி...

17.உங்களுக்கு சமைக்க தெரியுமா???

:)))
நல்ல பதிவு...//

இந்த காலத்துல எந்த ஆம்பிளைக்கு சமைக்க தெரியாது?

நன்றி வழிப்போக்கன்

-----------------------------------

//ஜீவன் said...
இதுக்கெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பதிலும் பின்னாடி ஓர் பதிலும்தான் வரும்...........!

தொடர்ச்சியா கலக்குறீங்க ...! நன்றி ..!//

கரெக்ட்டு

நன்றி ஜீவன்

-----------------------------------

//கதிர் - ஈரோடு said...
முக்கியமான கேள்வி மிஸ்ஸாயிடுச்சு வசந்த்...

கல்யாணம் பண்ணனுமா!!??
சேர்ந்து வாழ்ந்தா போதுமா!!??//

ஆஹா இப்பிடி வேற கேப்பாய்ங்களா?

நன்றி கதிர்

-----------------------------------

ப்ரியமுடன் வசந்த் said...

//துபாய் ராஜா said...
கனவுலே இம்பூபூபூட்டு கேள்வியா .... :))//

ஆமாப்பா ஆமா...

நன்றி துபாய் ராஜா

----------------------------------------------------------------------

//கார்த்திகைப் பாண்டியன் said...
கேள்வி ரைட்டோ தப்போ.. கனவுல பொண்ணு வருதுன்னா, கல்யாண வயசு வந்துருச்சுப்பா.. ரைட்டு.. நடத்துங்க..//

சீ போங்க கார்த்தி வெக்கமா இருக்கு

நன்றி கார்த்திகேய பாண்டியன்

----------------------------------------------------------------------

//க.பாலாஜி said...
ச்ச..ஒரு மனுஷன் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு இவ்வளவு கேள்விகளா?

முடியல...//

அதெப்பிடி சீக்கிரம் பதில் சொல்ல வேண்டியிருக்கும் பாலாஜி நீங்களும்

நன்றி பாலாஜி

----------------------------------------------------------------------

//யோ வாய்ஸ் (யோகா) said...
யாராவது உங்கள பார்த்து கேட்டதா? என்னா பதில் சொன்னீங்க//

பதில் சொல்லிருந்தா நான் அவுட்

நன்றி யோகா

----------------------------------------------------------------------

ப்ரியமுடன் வசந்த் said...

//ஹேமா said...
என்ன வசந்த்,எதிர்காலத் திட்டத்திற்கு முன் ஜாக்கிரதையோ...!எதையும் எதிர்பார்த்தே இருங்க.அதிர்ச்சியா இருக்காது.//

ஆமா ஹேமா எதிர்பார்த்துட்டுத்தான் இருக்கேன்..

நன்றி ஹேமா வருகைக்கு...

----------------------------------------------------------------------

//Mrs.Faizakader said...
சுவாரசியமாக இருக்கு உங்கள் கனவு கேள்விகள்...//

நன்றி பாயிசா

----------------------------------------------------------------------

//அப்பாவி முரு said...
இத்தனை பேராலையே சமாளிக்க முடியலையே,

பாவம் அந்த ஒரு பொண்ணு...//

ஆஹா நாந்தேன் பாவம்

நன்றி முரு

----------------------------------------------------------------------

//அமிர்தவர்ஷினி அம்மா said...
உங்க பதில் அடுத்த பதிவுலயா//

இல்லை சகோ...

இதுக்கு பதிலே எங்கிட்ட இல்லை

நன்றி அமித்துஅம்மா

----------------------------------------------------------------------

//சுசி said...
சூப்பரா எஸ்கேப்பிட்டீங்க வசந்த்.

மத்தது கேப்பாங்களான்னு தெரீல.. ஆனா இது சாத்தியம்.

//11.எனக்குத்தெரியாமல் என்னுடன் வரும் என் நண்பிகளை சைட் அடிப்பீர்களா?////

அப்பிடியா அப்போ நீங்களும் உங்கள் கணவர்கிட்ட இதெல்லாம் கேட்டீங்களா பாவம்பா அவர் மாட்டிக்கிட்டு முழிக்கிறார்ன்னு நினைக்கிறேன்..

நன்றி சுசி தொடர் வருகைக்கும் கருத்துக்கும்,,,

----------------------------------------------------------------------

ப்ரியமுடன் வசந்த் said...

//உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...
பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க....///////




இந்த பதினாறும் பெற்றா சிறு வாழ்வு கூட வாழ முடியாது வசந்த் ............

உங்க பதிவு அனைத்தும் அருமை

வாழ்த்துக்கள்//

நன்றி உலவு

----------------------------------------------------------------------

//சத்ரியன் said...
//பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க....

நான் எஸ்கேப்பு....//

வசந்த்..,

ஏன் அப்பு வாழ்த்து சொல்லமாட்டீங்க! எத்தன காலத்துக்கு ராச எஸ்கேப்பு?

இன்னும் நாள் இருக்கு செல்லம்!அப்ப நாங்க சொல்வோம்.பதினாறே போதுமா? இன்னும் கூட்டிக்கனுமான்னு !

நாங்க பாட்டெல்லாம் கூட பாடுவோம்."ஆடிய ஆட்டமென்ன?...."//

நான் மாட்டிக்கிடுறதுல அவ்ளோ சந்தோஷமா சத்ரியன் உங்களுக்கு

நன்றி சத்ரியன் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

----------------------------------------------------------------------

//இராகவன் நைஜிரியா said...
இஃகி, இஃகி.... சிரிப்பு சிரிப்பு வருது, சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது..//

ஒருத்தன் துன்பப்படுறதுல உங்களுக்கு சிரிப்பாபோச்சு

நன்றி ராகவன் சார்

----------------------------------------------------------------------

//Mrs.Menagasathia said...
எத்தனை நாளைக்கு வசந்த் எஸ்கேப் ஆகுவீங்க.என்னிக்கு இருந்தாலும் கால்கட்டு போடத்தானே போறாங்க.அப்புறம் அந்த தேவதை உங்களுக்கு சமைக்கத் தெரியுமான்னு கேட்கலையா?
//காதல் அனுபவம் உண்டா?//அவங்க மட்டும் என்னை கேட்டாங்கன்னா உங்களைப் பத்தி நான் நல்லாவே சொல்வேனே...//

என்ன சகோதரி நல்லவிதமாத்தான சொல்வீங்க..

நன்றி மேனகா

----------------------------------------------------------------------

//அமுதா கிருஷ்ணா said...
இத்தனை கேள்வி கேட்கும் வரை வாயே திறக்கவில்லையா..அப்ப நீங்க செலக்ட் ஆயாச்சு இந்த சுயம்வரத்தில!!!!all the best..கேள்விகள் ஒவ்வொன்னும் சும்மா நச்சுன்னு இருக்கு தம்பி...//

நன்றிக்கா

----------------------------------------------------------------------

ப்ரியமுடன் வசந்த் said...

//ஜெஸ்வந்தி said...
//வழிப்போக்கன் said...
முக்கியமான கேள்வி...

17.உங்களுக்கு சமைக்க தெரியுமா???//

இதுதானே முதல் கேள்வியை இருக்க வேண்டும். எப்படித் தப்பிப் போச்சு????//

நன்றி ஜெஸ்வந்தி கருத்துக்கும் வருகைக்கும்

----------------------------------------------------------------------

//க. தங்கமணி பிரபு said...
இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htm



அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm



என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!//

நண்பா அனுப்பிட்டேன் நன்றி

----------------------------------------------------------------------

//சிங்கக்குட்டி said...
//பக்கத்துல முதியோர் இல்லம் இருக்கா//
வருடமும் வயதும் எல்லோருக்கும் ஓடும் வசந்த் :-))//

கண்டிப்பா

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சிங்ககுட்டி

----------------------------------------------------------------------

//வடகரை வேலன் said...
உன்னை மாதிரி உஷாரா இருக்குற பார்ட்டிகதான் நல்ல வசமா மாட்டுவாங்க. சிக்கிக்கிட்டு சீக்கி அடிக்க வாழ்த்துகள் வசந்த்.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

நன்றி அண்ணாச்சி

----------------------------------------------------------------------

//நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...
ரைட்டு! வாழ்த்துக்கள்(?) :):):):):)//

நன்றி சரவணன்
----------------------------------------------------------------------

ப்ரியமுடன் வசந்த் said...

//கலையரசன் said...
கல்யாண ஆசை வந்துடுச்சோ...//

ஆமா அது ஒண்ணுதான் எனக்கு குறையா

நன்றி மச்சான்

--------------------------------------------------------------------------

//வால்பையன் said...
இப்படித்தான் ஆம்பளை பொய் சொல்ல ஆரம்பிக்கிறான்!//

இது எல்லாமே உண்மையா இருக்கக்கூடாதுடா சாமீய்ய்..

நன்றி வால்

----------------------------------------------------------------------

//REKHA RAGHAVAN said...
அப்பா..இப்பவே கண்ண கட்டுதே...
என்ன வசந்த் கனவில் கேட்ட கேள்விக்கே இப்படி ஆயிட்டீங்களே..
நெசம்மா கேட்டா என்னா ஆவிங்களோ?

ரேகா ராகவன்.//

ஒண்ணும் ஆவாது சார்

நன்றி

----------------------------------------------------------------------

//யாழினி said...
அடக் கடவுளே! இப்படியெல்லாம் கனவு வருகுதா உங்களுக்கு? :)//

ஆமா யாழினி

நன்றிப்பா

----------------------------------------------------------------------

//Thamarai selvi said...
இது எல்லாத்துக்கும் உங்க பதில் என்னவா இருக்கும்னு கற்பனை செய்தால் ரொம்ப சிரிப்பு வருது!உங்களுக்கு நான் மெயில் பண்றேன்,சீக்கிரம் இன்விடேஷன் அனுப்புங்க!//

நீங்களுமா தாமரை

நன்றி சகோதரி

----------------------------------------------------------------------

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நான் எஸ்கேப்பு....
//

ஆஹா பார்ட்னர் கிடைச்சாச்சு

நன்றி ஸ்டார்ஜன்

----------------------------------------------------------------------

//அபுஅஃப்ஸர் said...
//குழந்தைகள் பிறந்ததும் குழந்தை வளர்ப்பு மையத்தில் விடுவதற்க்கு தங்களுக்கு ஆட்சேபணை இருக்கா?//

குழந்தை பெற்றுக்கொள்வது அவசியமா என்ற கேள்வி கேட்காம விட்டாங்களே சந்தோஷப்படுங்க‌//

ஆமா அபு அதையும் கேட்டாலும் கேப்பாய்ங்க..

நன்றி அபு

----------------------------------------------------------------------

ப்ரியமுடன் வசந்த் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
என்னய்யா கமான்ட் போடுறது உனக்கு. சூப்பர் நு சொல்லி சொல்லி போரடிசிடுசு
//

ரொம்ப நன்றி ரமேஷ் சத்தியமா

--------------------------------------------------------------------------

//சந்ரு said...
உண்மைய சொல்லுங்க வசந்த் இது உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள்தானே.//

இல்லை சந்ரு

நன்றி வருகைக்கு சந்ரு

----------------------------------------------------------------------

//கிரி said...
//வழிப்போக்கன் said...
முக்கியமான கேள்வி...

17.உங்களுக்கு சமைக்க தெரியுமா???

:)))//

:-)))))
//

நன்றி கிரி

----------------------------------------------------------------------

//தமிழரசி said...
1,2,3,4,5,6,11, இந்தாடியம்மா பொண்ணு எங்க வசந்த என்னன்னு நினைச்சிகிட்டு இருக்க..இந்த கேள்விக்கெல்லாம் உன்னை அடிச்சி பின்னா ஏன் இருக்கார்னா இன்னும் உன்னைய் கல்யாணம் கட்டலை ஒடிப்போயிடு.....//

ஆமாப்பா ஓடிப்போயிடு.....

இல்லை தமிழ் உன்னைய அடி பின்னிடுவாங்க....

நன்றி தமிழரசி

----------------------------------------------------------------------

//gayathri said...
intha kelvikalai ellam naan manapadam seithu vaithukolkiren

appa than ennavanidam ketpadarku vasathiyaka irukkm:)))))))))//

மனப்பாடம் பண்ணிக்கதாயீ..

பாவம் மாட்டிக்க போறவன்

நன்றி காயத்ரி

----------------------------------------------------------------------

ப்ரியமுடன் வசந்த் said...

//தமிழரசி said...
7.இந்த கட்டத்தை கடக்காதவர்கள் இல்லை
8.வரலாம் இல்லாததையும் பொல்லாததையும் உனக்கு சொல்லி தராமல் இருந்தால் வரலாம்
9.கண்டிப்பா அவசியம் என்றும் பொருப்பு என்றும் செய்வார்
10.ரொம்ப முக்கியம்
12.எங்க வசந்த நீ என்னன்னு நினைச்சிகிட்ட?மனங்கள் வாழ்வது தான் வாழ்க்கை மற்றது இல்லை
13.முகம் தெரியாத தங்கையை இன்று வரை நினைத்தும் வருந்தும் எங்கள் வசந்த் எதிர்ப்பார்பதும் பெண் குழந்தயே
14.அம்மா பக்கம் பேசிவிட்டு தனிமையில் உனக்கு எடுத்து சொல்வார்..பெரியவங்க நாம தான் விட்டு தரனும் என்று அப்பறம் அம்மாவுக்கும் நீ கூட பார்த்து செய்மா அவ சின்ன பொண்ணு என்று
15.ஹாஹாஹா 11 கேள்வி வேண்டுமானால் நீ அப்படி கேட்டு இருக்கலாம் ஆனால் வசந்த் அப்படி இல்லை அழைத்து பேச சொல்வார்
16. அது உன்னோட குடும்பமில்லை நம்மோட குடும்பன்னு சொல்வார் தாங்குவார் எல்லா துன்பத்தையும்.... எங்கள் வசந்த்
16ம் பெற்று பெருவாழ்வு வாழ்வார்....

இதையெல்லாம் சொல்றீங்களே நீங்க யாருன்னு கேட்கிறியா வெறும் நட்பு தான் ஆனால் நாங்க வசந்தை இவ்வளவு படிச்சி வெச்சியிருக்கோம்..
நீயும் புரிந்து நடந்துக் கொள்....//

ஆஹா அருமை தமிழரசியாரே

மிக்க நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

//நட்புடன் ஜமால் said...
நிறைய பேர் பதில் எதிர்ப்பார்க்கிற மாதிரி இருக்கே

----------------

பதில் கடைசியாக சொல்லிட்டார் பாருங்கோஸ்//

கரெக்ட்டு அண்ணா

நன்றி ஜமால் அண்ணா

----------------------------------------------------------------------

//முனைவர்.இரா.குணசீலன் said...
நியாயமான கேள்விகள் தானே நண்பரே//

ஆமா குணா நன்றி

----------------------------------------------------------------------

//ஜெட்லி said...
//உன்னை மாதிரி உஷாரா இருக்குற பார்ட்டிகதான் நல்ல வசமா மாட்டுவாங்க. சிக்கிக்கிட்டு சீக்கி அடிக்க வாழ்த்துகள் வசந்த்.

//

repeatae
//

ரொம்ப நன்றி ஜெட்லிஜி

----------------------------------------------------------------------

//ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
கலக்கல் கேள்விகள் வசந்த் :)//

நன்றி செந்தில் அண்ணா

----------------------------------------------------------------------

//S.A. நவாஸுதீன் said...
”தங்கச்சி. நீ பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க....” இதானே வசந்த் சொல்லிட்டு வந்த்தீங்க.//

கரீக்க்ட்டு நவாஸ்

நன்றி நவாஸ்

----------------------------------------------------------------------

//ஷ‌ஃபிக்ஸ் said...
கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்வளவு கேள்வியா? இதுக்கு லேபில் டிப்ஸ் & ட்ரிக்ஸ்னு கொடுத்துடுங்க வஸ்ந்த்.//

ஆஹா...

நன்றி சஃபி

----------------------------------------------------------------------

ப்ரியமுடன் வசந்த் said...

//அன்புடன் அருணா said...
நல்ல வேளை கனவுப் பெண் !!!!//

நிஜத்துலயும் இப்பிடித்தேன் கேப்பாங்களோன்னு பயமாயிருக்கு பிரின்ஸ்

நன்றி அருணா பிரின்ஸ்

பா.ராஜாராம் said...

ரூம் போட்டு யோசிப்பீங்களா வசந்த்!சிரிச்சு பூத்துக்கிட்டேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

http://sirippupolice.blogspot.com/2009/09/blog-post_13.html

Beski said...

யப்பா...
ரொம்ப கஷ்டம் மச்சி.

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி ராஜாராம்

நன்றி ரமேஷ்

நன்றி பெஸ்கி