September 20, 2009

கட்டபொம்மன் எனும் ப்லாக்கர்...(சண்டே எண்டெர்டெயின்மெண்ட்)

கட்ட பொம்மன் எனும் ப்லாக்கரும் ஜாக்சன் எனும் வாசகருக்கும் இடையே நடந்த உரையாடல்

ஜாக்சன்: நீர்தான் ப்லாக் எழுதும் ப்லாக்கர் என்பவரோ?

கட்டபொம்மன்: (லேப்டாப்பை எடுத்து ஆன் பண்ணிவிட்டுக்கொண்டு) நீர்தான் வாசகர் என்பவரோ?

ஜாக்சன்: ஏது ப்லாக் எழுதும் வரை வந்துவிட்டீர்?

கட்டபொம்மன்: நீங்கள் ப்லாக் படிப்பதாக அறிந்தேன், வந்தேன்.

ஜாக்சன்: ப்லாக் எழுத வேண்டும். அதற்கேற்ற எண்ண்ம் இல்லை உன்னிடம்!

கட்டபொம்மன்: கற்றுக்கொடுப்பது தமிழினம்! நீர் கற்றுக்கொடுக்க முயற்சிப்பது அறிவீனம்!

ஜாக்சன்: இறுமாப்பு அடங்கவில்லை.

கட்டபொம்மன்:அது என் உடன்பிறந்தது. ஒழியாது!

ஜாக்சன்: உன் மீது குற்றம் சுமத்துகிறேன்.

கட்டபொம்மன்: என்னவென்று?

ஜாக்சன்: எடுத்துரைத்தால் கணக்கில் அடங்காது.

கட்டபொம்மன்: எண்ணிக்கை தெரியாத குற்றம் போலும்.

ஜாக்சன்: எனக்கா எண்ணிக்கை தெரியாது! அகம்பாவம் பிடித்தவனே. சொல்கிறேன் கேள். உன் ப்லாக்கில் எழுதும் போஸ்டிங்குக்கு கிஸ்தி கொடுக்கவில்லை.அடுத்தவர் ப்லாக்குக்கு கமெண்ட்ஸும் போடுறதில்லை,தமிழிஷ் தமிழ்மணத்தில் ஓட்டும் போடுவதில்லை


கட்டபொம்மன்: கிஸ்தி, ஓட்டு!கமெண்ட்! வானம் பொழிகிறது, பூமி விளைகிறது! உனக்கேன் கொடுப்பது கிஸ்தி! என்னோடு கடைக்கு வந்தாயா? லேப்டாப் வாங்கி கொடுத்தாயா?இண்டெர்நெட் கனெக்சன் வாங்க உதவினாயா? ப்லாக் எழுத ஐடியா கொடுத்தாயா? தமிழிஷ்ல ஓட்டு போட்டாயா? அல்லது தமிழ்மணத்திலயாவது ஓட்டுபோட்டாயா? இல்லை ரூம் போட்டு யோசிச்சு நான் போட்ட ஒவ்வொரு போஸ்டிங்க்கும் கமெண்ட் போட்டாயா? அல்லது மாமனா? மச்சானா?அல்லது அட்லீஸ்ட் நீ ப்லாக்கரா? எதற்கு கேட்கிறாய் வரி, யாரை கேட்கிறாய் ஓட்டு? ஓடிப்போய்விடு இல்லை அனானியர்களை விட்டு உன்னைப்பற்றி தாறுமாறாக எழுதி சொல்லிவிடுவேன் ஜாக்கிரதை!

டிஸ்கி: முழுவதும் கற்பனை என்பதை தவிர வேறொன்றுமில்லை...




37 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கல் பதிவு :)

கமெண்டும் போட்டாச்சு. ஓட்டும் போட்டாச்சு :)

கலையரசன் said...

வித்தியாசமான ஹாட் ஸ்பாட்!
வருந்தி கொண்டே ரசித்தேன்..

thiyaa said...

கலக்கல் அருமை அட்டகாசம்

blogpaandi said...

சூப்பர் கற்பனை! நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

தமிழ் அமுதன் said...

//முழுவதும் கற்பனை என்பதை தவிர வேறொன்றுமில்லை...//

;;))

அன்புடன் அருணா said...

ஹஹாஹா....வசந்தின் வித்தியாசமான சிந்தனைக்கு அளவேயில்லையா????

கிரி said...

:-))

கட்டபொம்மன் என்ற பதிவர் இருக்கிறார் ;-)

லோகு said...

நெஜமாலுமே கட்ட பொம்மன்னு ஒரு பிளாக்கர் இருக்கார்.. இன்னொரு விஷயம் அவர் காவல் துறை அதிகாரி.. (ஆட்டோல்லா இல்ல, ஜீப் வரும் ) ஆல் தி பெஸ்ட்...

வித்தியாசமான கற்பனை..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓட்டுப் போடலினா புடிச்சு உள்ள வச்சிடுவீங்களோ..,

கலகலப்ரியா said...

கலக்கல் வசந்து.. ! தமிழ்மணம் ஓட்டு போட முடியவில்லை.. சற்றுப் பொறுத்து திரும்பவும் ட்ரை பண்ணுறேன்.. மன்னிச்சுக்கப்பா..

அன்புடன் நான் said...

நல்லாத்தான் இருக்குங்க...

ஹேமா said...

கற்பனை....கற்பனை.வசந்த் ஞாயித்துக்கிழமையிலாவது கொஞ்சம் ரெஸ்ட் குடுக்கலாமே.எல்லா ஓட்டும் போட்டாச்சு.

सुREஷ் कुMAர் said...

மச்சி.. வழக்கம் போல் கலக்கல் சிந்தனை..
வாழ்த்துக்கள்.. ஆமா.. கிஸ் தெரியும்.. கிஸ்தி'னா இன்னா மாமு..

Veliyoorkaran said...

மச்சி யாருமா அது கட்டபொம்மன்....எந்த படத்துல நடிசிருகாப்ள...

vasu balaji said...

இப்புடியா அனியாயம் பண்றது. :))ப்ரமாதம்

kishore said...

முடியல.. கற்பனை குதிரைய தட்டி விடுறதுக்கு ஒரு அளவே இல்லையா?

ஷங்கி said...

ஹி ஹி!!!

VISA said...

தல சூப்பர் கற்பனை. கட்டபொம்மனை பிளாக் எழுத வைத்த உமக்கு விருது கொடுக்கவேண்டும்

யாரோ ஒருவர் said...

நல்லா யோசிக்கிறீங்க. இன்னும் நிறைய எழுதுங்க.ஆமா Comment போட்டச்சு,ஓட்டும் போட்டாச்சு

சுசி said...

இதுக்குத்தான் நாலு நாள் லீவ்ல இருந்தீங்களா?

சூப்பர் வசந்த்.

கலகலப்ரியா said...

ஸ்ஸப்பா.. தமிழ்மணம் ஓட்டு போட்டச்சுபா..

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல கற்பனை.. இதுல எந்த உள்குத்தும் இல்லேயே!!!!

கவி அழகன் said...

நன்றாக உளது கற்பனை வளம் அதிகம் உங்களுக்கு

கவிக்கிழவன் http://kavikilavan.blogspot.com

கவி அழகன் said...

நன்றாக உளது கற்பனை வளம் அதிகம் உங்களுக்கு

கவிக்கிழவன் http://kavikilavan.blogspot.com

சந்தான சங்கர் said...

அலெக்ஸ் பாண்டியன்
டெலேக்ஸ் பாண்டியன்
ஆன மாதிரி
ரூம் போட்டு யோசிப்பாங்களோ!

இராகவன் நைஜிரியா said...

தமிழிஷ், தமிழ்மணம் இரண்டிலும் ஓட்டுப் போட்டாசுங்க...

நடக்கட்டும்... நடக்கட்டும்...

இப்னு அப்துல் ரஜாக் said...

ரொம்ப நன்னா இருக்கு,பேஷ் பேஷ்

Admin said...

அசத்துறிங்க வசந்த்.

Anonymous said...

போங்க வசந்த் பாராட்டி பாராட்டி போரடிச்சிடுச்சி.......

ஈரோடு கதிர் said...

கலக்கல் வசந்த்

Suresh Kumar said...

நல்லா சிரிச்சேங்க

Deepa said...

:-))

Beski said...

பின்னூட்டம், ஓட்டெல்லாம் போட்டா வரி கொடுப்பீங்களோ?

Unknown said...

நல்லா இருக்கு வசந்த் இதுவும்,கட்டபொம்மன் ஒரிஜினல் நான் இன்னும் பார்த்ததே இல்ல...எனக்கு ஓட் போடதான் மறந்து போகுது,அடிக்கடி இதுபோல ஞாபகபடுத்துங்க..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வரிக்கு வரி அல்ல, வார்த்தைக்கு வார்த்தை - சிரிப்பு சரவெடி.
அதிலும்,
//அனானியர்களை விட்டு உன்னைப்பற்றி தாறுமாறாக எழுத சொல்லிவிடுவேன் ஜாக்கிரதை!
//
வெளையாடிட்டீங்க!

Deepan Mahendran said...

வசந்த் மச்சி....
புது profile போட்டோ, (நீங்க நம்ம ஆளா)
புது போஸ்ட்...
கலக்குறீங்க போங்க...
- மச்சான்ஸ்.

ப்ரியமுடன் வசந்த் said...

தொடர்ந்து பின்னூட்டம் அளித்து ஊக்கமளிக்கும்

செந்திலண்ணே
கலையரசன்
தியா
ப்லாக் பாண்டி
ஜீவன்
அருணா பிரின்ஸ்
கிரி
லோகு
தல சுரேஷ்
ப்ரியா
கருணாகரசு
ஹேமா
சுரேஷ்குமார்
வெளியூர்காரன்
வானம்பாடிகள்
கிஷோர்
சங்கா
விசா
திருமதி.ஜெயசீலன்
சுசி
ராஜ்குமாரன்
யாதவன்
சந்தானசங்கர்
ராகவன் சார்
பீஸ் ட்ரெயின்
சந்ரு
தமிழரசி
கதிர்
சுரேஷ்
தீபா
எவனோ ஒருவன்
தாமரை மேடம்
அல்லாருக்கும் மிக்க நன்றிகள்