October 14, 2009

நேற்றைக்கான இன்றைய விளக்கம்

நேற்றைய ஐலசாவின் விளக்கங்கள் தேவையில்லாதது என்றாலும் விளக்கமளிக்க வேண்டியது என் கடமை...இது என் பார்வையில் மட்டுமே அவரவர் பார்வைக்கு வேறாக தோன்றலாம் என விளக்கம் கூறிய கடல் புறா பாலா அவர்களுக்கு நன்றி....(என்னைக்கோ ஒரு நாளைக்குத்தான் நானே கவிதை மாதிரி ஒண்ணு எழுதுறேன் அதுவும் புரியாம போயிடக்கூடாதேன்ற ஆதங்கத்தில் எழுதிய இடுகை)


பூட்டிருக்கு ஏலேலோ ஐலசா...

சாவியில்லை ஏலேலோ ஐலசா...






காலில்லை ஏலேலோ ஐலசா...
காலால வந்தது ஏலேலோ ஐலசா...




சில வானமாய் ஏலேலோ ஐலசா...
சில இரத்தமாய் ஏலேலோ ஐலசா...




கல்யாணமாகலை ஏலேலோ ஐலசா...
தோதான ஆளிருக்கு ஏலேலோ ஐலசா...




ஒரு பிறவிதான் ஏலேலோ ஐலசா...
அதிலே பல மறுபிறவியுண்டு ஏலேலோ ஐலசா...




அடிக்கு அடி வாங்குறதுண்டு ஏலேலோ ஐலசா...
அடித்தால் அழுவதில்லை ஏலேலோ ஐலசா...




பொத்தாம்பொதுவாய் ஆறு உண்டு ஏலேலோ ஐலசா...
உள்ளாற ஒண்ணுமில்லை ஏலேலோ ஐலசா...




மானமிருக்கு ஏலேலோ ஐலசா...
மனமில்லை ஏலேலோ ஐலசா...

உப்பிலனா நார்நாராய் ஏலேலோ ஐலசா...
உப்புறதில்லை ஏலேலோ ஐலசா...

(மேல் உள்ள வரிகளுக்கு படங்கள் கிடைக்க வில்லை விளக்கம் இப்போ தேவையில்லைன்னு நினைக்கிறேன்)

உதவாத கையிருக்கு ஏலேலோ ஐலசா...
உதவுறதுக்கு வழியில்லை ஏலேலோ ஐலசா...




கர்வமிருக்கு ஏலேலோ ஐலசா...
ஆனா அது தலையிலில்லை ஏலேலோ ஐலசா...




மருத்துவம் பார்க்க ஜாதியிருக்கு ஏலேலோ ஐலசா...
மருந்துக்கும் ஜாதியிருக்கு ஏலேலோ ஐலசா...





பின் நவீனமிருக்கு ஏலேலோ ஐலசா...
முன் நவீனமிருக்கு ஏலேலோ ஐலசா...


இதுக்கப்புறமும் விடை சட்டைன்னு சொல்லித்தான் தெரியணுமா என்ன...நன்றி ...

54 comments:

கலகலப்ரியா said...

அட அட.. எங்க புடிக்கிறா இதெல்லாம்... சூப்பரு.. !

Malini's Signature said...

அய்யோ அய்யோ.... இதுக்கு இவ்வளவு விளக்கம் இருக்கா?....உங்க ஊருலே போதிமரம் எதாவது இருக்கா வசந்த்?

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அடடே ! நல்ல வேளை விளக்கம் இன்று இப்பிடி விளக்கம் எழுதி விட்டாய் வசந்த்.
நான் உனக்கு என்ன ஆச்சு என்று கலங்கிப் போனேன்.

सुREஷ் कुMAர் said...

அடங்கொன்னியா.. நல்லா இருக்கு நைனா.. சாரி நேத்தின இடுகையையும் இப்போதான் படிக்கச் நேரம் கெடச்சுது.. ரெண்டையும் சேர்த்தே படிச்சாச்சு..

T.V.ராதாகிருஷ்ணன் said...

Super vasanth

Anonymous said...

//உங்க ஊருலே போதிமரம் எதாவது இருக்கா வசந்த்?//

ரிப்பீட்டேய்.

சூப்பரா இருக்கு விளக்கம். படம் பொட்டு விளக்குனதுக்கு அப்பறமும் புரியலைன்னு சொல்லொவோமா!!!!

அப்பாவி முரு said...

எப்ப ராசா ஊருக்கு போற?

பிரபாகர் said...

வசந்த்,

நேற்று நிஜமாய் புரியவில்லை. படித்து அப்படியே விட்டுவிட்டேன், பின்னூட்டமும் இடவில்லை. இன்று விளக்கத்தை பார்த்ததும்.... அற்புதம். கலக்கல் நண்பா.

பிரபாகர்.

Unknown said...

அடகடவுளே நான் ஏதோ வேற பெரிய விளக்கம் இருக்கும்னு நினைச்சு வந்தால் இப்படி ஆகிடுச்சு!எனி வே நல்லா இருக்கு வசந்த்!

velji said...

நீண்ட விடுகதை போல் தெரிகிறது!வித்யாசமான முயற்சிதான்.

ஜெட்லி... said...

rite...

Unknown said...

சூப்பரு

kishore said...

ungala nerula paartha kolaicase aagipoidumonu nenakuren

VISA said...

யாருப்பா அது சட்டைய பிச்சுகிட்டு தெருவுல ஓடுறது......

ராமலக்ஷ்மி said...

எல்லாமே ஏலேலோ ஐலசா
நல்லாருக்கு ஏலேலோ ஐலசா:))!

யோ வொய்ஸ் (யோகா) said...

வாவ் கலக்கல் வசந்த்

அட்வான்ஸ் திபாவளி வாழ்த்துக்கள்

ஈரோடு கதிர் said...

அட இதுதான் பின் நவீனத்துவம், முன் நவீனத்துவமா!!!

கவி அழகன் said...

வசந்த் முடியல இபடியோசிக்க உங்களால் மட்டும் எப்படி

vasu balaji said...

அடங்கொன்னியா. இனிமே சட்டையே போடுறதில்ல. காந்தி மாதிரியே போய்க்கிறேன். என்னா லொல்லு.தாங்கலடா சாமி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வசந்த கலக்கறீங்க. நல்ல சிந்தனை. ஆமா இத்தனை படங்களை ஒட்டறதுக்கெல்லாம் எப்படி நேரம் கிடைக்குது?

Deepan Mahendran said...

வசந்த மச்சான் விளக்கமெல்லாம் சூப்பர்...ஆனாலும் ஒரு சந்தேகம், சமீபத்துல வண்ணானுக்கு போட்ட சட்டை பேண்ட் ஏதாவது தொலஞ்சு போச்சா ?

தீப்பெட்டி said...

அடக்கடவுளே..

S.A. நவாஸுதீன் said...

சட்டைக்குத்தான் இவ்வளவு சேட்டையா? நடக்கட்டும் நடக்கட்டும்

கார்த்திகைப் பாண்டியன் said...

அடங்கோயால..பயபுள்ளைக்குள்ள இத்தனை அறிவிருக்கு பாரேன்..
:-)))

மோகனன் said...

நல்லாயிருக்குதுங்க... நானும் உங்களைப் போல எழுத முயற்சிக்கிறேன்

ஹேமா said...

அடேயப்பா இந்தக் கவிதைக்குள்ள இருந்தது ....இதுவா !உண்மையில் சொல்லாவிட்டால் புரிந்திருக்காது வசந்த்.

சத்ரியன் said...

ஐலசா...

வசந்த்,

ப்ரியமுடன் சொல்றேன். பிச்சி உதறிட்ட‌ போ.

உனக்கு கல்யாணம் ஆகுறப்போ முன்,பின் நவீனத்துல ஜன்னல் வெச்சி சட்டை தெச்சி அனுப்பி வெக்கிறன் ராசா.

(பாலா எதோ சொல்லிட்டாருன்னு இப்படி ஆரம்பிச்சிட்டிங்களே. உலகம் தாங்குமா?)

தமிழ் அமுதன் said...

ஊருக்கு வரும்போது உங்க அட்ரெஸ் கொடுங்க வசந்த்....!

Beski said...

நல்ல வேளை, விளக்கம் கொடுத்தீங்க.

இல்லன்னா வேற என்னமோன்னு நெனச்சிருப்பேன்.

நல்லாயிருக்கு.

சிங்கக்குட்டி said...

ஐயோ வசந்த்துதுது...எப்படி ராசா எப்படி.

விக்னேஷ்வரி said...

வித்தியாசமா யோசிச்சிருக்கீங்க. நல்லாருக்கு.

குறை ஒன்றும் இல்லை !!! said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!!

யாழினி said...

வசந்த் எப்படி வசந்த இப்படி எல்லாம்? கலக்குறீங்க அட்டகாசம் வசந்த் :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த வசந்த் பையன் அடங்க மாட்டான். இவனுக்கு வேட்டைக்காரன் முதல் நாள் 4 show க்கும் டிக்கெட் வாங்கி கொடுக்கலாம்.

Anonymous said...

ennada idhu orae ilasavaa irukku ena neattru Ottu Poettutu vittuttaen.
Wow sattai

சுசி said...

வசந்த்! வசந்த்!! வசந்த்!!!

ஒத்துக்கிறேம்பா... நீங்க புத்திசாலிதான்.

GEETHA ACHAL said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

நாஸியா said...

சூப்பர்!

துளசி said...

விளக்கம் சூப்பருங்கோ...

Menaga Sathia said...

ஹா ஹா நல்லயிருக்கு உங்க விளக்கம்.


இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

அன்புடன் அருணா said...

கவிதையை விட விளக்கம் அசத்தல்! பூங்கொத்து!

Sanjai Gandhi said...

ஸ்ஸ்ஸபாஆஆஆஆஆ..

SUMAZLA/சுமஜ்லா said...

உங்க கவிதையின் அ’று’த்தத்தை கேட்டு புழுக்கம் தாங்காம ஆண்கள் எல்லாரும் சட்டைய கழட்டி வீசிடுவாங்க, உங்க மேல!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

SUFFIX said...

நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!

S.A. நவாஸுதீன் said...

நண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!

கலகலப்ரியா said...

thanks for your deepavali wishes vasanth..! wish you a very bright deepavali..!

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி பிரியா

நன்றி ஹர்ஷினி அம்மா

நன்றி ஜெஸ்வந்தி

நன்றி சுரேஷ்குமார்

நன்றி டிவிஆர்

நன்றி சின்னம்மிணி

நன்றி முரு(ஏன்யா ?)

நன்றி பிரபாகர்

நன்றி தாமரைசெல்வி

நன்றி வேல்ஜி

நன்றி ஜெட்லி சரவணன்

நன்றி முகிலன்

நன்றி கிஷோர்(அவ்வ்வ்வ்வ்)

நன்றி விசா(இது முன்னாடியே யோசிச்சுருக்கணும்)

நன்றி ராமலக்ஷ்மி

நன்றி யோகா

நன்றி கதிர்

நன்றி கவிக்கிழவன்

நன்றி பாலா நைனா

நன்றி செந்தில் அண்ணா

நன்றி சிவன் :)))

நன்றி தீப்பெட்டி

நன்றி நவாஸ்

நன்றி கார்த்திகேய பாண்டியன்

நன்றி மோகனன்

நன்றி ஹேமா

நன்றி சத்ரியன்

நன்றி ஜீவன்(அட்ரஸா அவ்வ்வ்வ்வ்)

நன்றி பெஸ்கி

நன்றி சிங்ககுட்டி

நன்றி விக்னேஷ்வரி

நன்றி ராஜ்குமார்

நன்றி யாழினி

நன்றி ரமேஷ்(பொங்கலுக்கு எடுத்துகுடுத்தா வசதியா இருக்கும்)

நன்றி திருமதி ஜெய சீலன்

நன்றி சுசி(அது)

நன்றி கீதா

நன்றி நாஸியா

நன்றி துளசி

நன்றி மேனகா

நன்றி அருணாபிரின்ஸ்(ரொம்ப நாள் கழிச்சி பூங்கொத்து வாங்கியிருக்கேன்)

நன்றி சஞ்சய்காந்தி

நன்றி சுமஜ்லா

நன்றி சஃபி

நன்றி நவாஸ்

நன்றி பிரியா

ஸ்ரீராம். said...

ஹா...ஹா...இப்போதான் புரிஞ்சது...குழல் விளக்குன்னு பேரை மாத்திக்கறேன்....!

Anonymous said...

வசந்த் சர்ஷ்ட்ஸ் எல்லாம் நைஸ் கலக்‌ஷன்ஸ்....

Yousufa said...

அது விடுகதையா? அப்ப கவிதயில்லையா? சொல்ல வேண்டாமா? நான் கவிதன்னு நினைச்சு படிக்கவேயில்ல!!

அன்புடன் நான் said...

நல்லா புரிஞ்சுப்போச்சு... நல்லாத்தான் இருக்கு.

ஈ ரா said...

அருமை யான
சட்டை....
யோசித்து
நெய்திருக்கிறீர்கள்...

ஈ ரா said...

அருமை யான
சட்டை....
யோசித்து
நெய்திருக்கிறீர்கள்...

Starjan (ஸ்டார்ஜன்) said...

சூப்பர் வசந்த்