November 11, 2009

அடல்ட்ஸ் ஒன்லி...(18+)

ஹேய் கோவக்கார ரவுடி வாராண்டி எல்லாரும் அவங்க அவங்க வீட்ல போய் ஒளிஞ்சுக்கங்க

அய்யோ முதல்ல வந்ததும் பொண்ணுக மேலதான் கைவைக்கிறான் உருப்படுவானா இவன் தள தளன்னு இருந்தா போதும் இவனுக்கு ஆசை வந்துடும் போல..ம்ம் என்ன செய்ய பூஜாவையும் தூக்கி வண்டிக்குள்ள போட்டுட்டானே..

அடுத்து எங்கயோ போறான் அய்யய்யோ குடுமிக்காரி பேச்சி மாட்டிக்கிட்டாளே..நான் என்னா செய்வேன்..எங்க போயி சொல்லுவேன்..அவளையும் தூக்கி போட்டுக்கிட்டானே வண்டிக்குள்ள..

ரங்கு மாமி உள்ளார ஓடி போயிடுன்னு சொன்னேனே கேக்கலியே இவ்ளோ பெரிய உடம்ப பார்த்துமா ஆசை வந்துச்சு இவனுக்கு கஷ்டகாலம் குண்டு மாமியையும் வண்டிக்குள்ளாற தூக்கி போட்டுட்டான்..படுபாவி..கொழுப்பெல்லாம் எடுக்கப்போறான் இன்னிக்கு...

ஆஹா ரமா இவளையுமா நான் எத்தனையோதடவை சொன்னேன் கேக்கலையே இவ தலையவே மறைக்கிற அளவுக்கு பூவச்சுட்டு திரிஞ்சா அவளும்மா போ போ போடி..உன் பூவெல்லாம் இன்னிக்கு உதிர்த்து நாசமாக்கப்போறான்...

வளர்ந்தவனுமா? இவனையுமா இவன எதுக்கு துக்கிட்டு போறான்னு தெரியலியே ஏதோ இருக்கு இவனுக்கும் அவனுக்கும் அதான் அவனையும் தூக்கிட்டான்..

வசமா மாட்டுனா உடுப்புக்காரி உமா..எத்தனை ட்ரெஸ் போட்டுகிட்டு நம்மளையெல்லாம் அழ வச்சு பாடு படுத்துனா..இன்னிக்கு அம்புட்டயும் அவிழ்த்து அவளையும் அழவைக்கப்போறான்..

அய்யோ உருட்டிவிட்டா உருள்ற மாதிரி இருக்குற பத்மாவுமா தூக்கிட்டானே என்னசெய்ய பாவம்..கசக்கி பிழியப்போறான் இன்னிக்கு...

பச்சை புள்ளை சின்னதா கொண்ட போட்டுகிட்டு திரிஞ்சுச்சு அந்த புள்ளையையும் விட்டு வைக்கலையே இவன்..ஆனாலும் இவன நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேப்பா..

போற போக்குல சின்னக்குழந்தைகளையும் ஏண்டா தூக்கிட்டு போற விட்ருடா பாவம் அதுக்கு பதிலா என்னைய வேணும்னா கூட்டிட்டு போடான்னா காறித்துப்பி என்னைய உதை உதைச்சுட்டு கட்டு கட்டா தூக்கிட்டான் அவங்களை ராஸ்கல்..

இவங்களையெல்லாம் கூட்டிட்டு போயி என்னடா செய்யப்போறன்னு கேட்டா இன்னிக்கு நல்ல விருந்துன்றான்..காய்கறிகடைக்காரன் கிட்ட...(அத்தனை காய்கறி பெயர்களும் சொல்பவர்களுக்கு ஸ்பெசல் ப்ரைஸ்)

வாசித்த அனைத்து கலைக்கண்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...

58 comments:

Raju said...

யோவ்...!

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்...... என்னமோ நினச்சுட்டேன்.

jgmlanka said...

ஆஹா.. நகைச்சுவை தூள்…
சொல்லட்டுமா காய் கறிகளை…
தக்காளி
கீரை
பூசனி
முட்டைக்கோஸ்
முருங்கை
வெங்காயம்
தேசிக்காய்
பச்சை மிளகாய்
பாவற்காய்
கரெக்டா?..

லோகு said...

தளபதி, பதினெட்டு வயசுக்கு மேல தான் காய்கறி சாப்பிடனும் உங்க கிட்ட யாரு சொன்னதுங்க??

ஈரோடு கதிர் said...

வாவ்...

கற்பனை... தூள் வசந்த்

Prathap Kumar S. said...

கற்பனை சூப்பர்...நானும் வேற என்னமோ நினைச்சட்டேன்...
இந்தா புடிங்க...விடையை..

தக்காளி,
கத்தரிக்காய்,
பூசணிக்காய்,
காலிப்ளவர்
முருங்ககைகாய்
வெங்காயம்
உருளைக்கிழங்கு
பச்சைமிளகாய்
கீரைகட்டு

பின்னோக்கி said...

டிவிஸ்ட் எழுதி எழுதி நீங்க டிவிஸ்டர் ஆகிட்டீங்க :)

கலையரசன் said...

பல்லு உள்ளவன் பட்டானி திங்குறான்...
கண்ணுள்ளவன் காய்கறி கேக்குறான்...
அறிவுள்ளவன் பதில் சொல்லுறான்...

ஹேமா said...

என்னமா ஒரு காய்கறிக் கடல் நீங்க.அதென்ன பெரியங்களுக்கு மட்டும்.சின்னப்புள்ளைங்கதான் காய்கறி நிறையச் சாப்பிடணும்.

பூசனிக்காய்,முருங்கக்காய்,வெண்டிக்காய்ன்னு அசத்திட்டீங்க வசந்து.

Beski said...

மொதல்ல தலைப்ப மாத்துங்க வசந்த்.

மனசு கேக்கல... கடைசில ஒடைஞ்சு போச்சு.

கலகலப்ரியா said...

mm.. voted... appuram padikkiren... office la.. avvv...

Unknown said...

எனக்கு அப்பபபபபபவே தெரியும்.......
ஆனா.............
ஹி ஹி...

எனக்கு ஒண்டுமே விளங்கேல....
நீங்களா வந்து பதில் போட்டாத் தான் உண்டு...

என்னால முடிஞ்சது தமிழிஷ் வாக்குப்பட்டையில ஒரு அமத்து அமத்தறது தான்.... யோசிக்க எல்லாம் முடியேல....

Anonymous said...

1. கீரை
2. தேங்காய்
3. பூசணிக்காய்
4. காலி ப்ளவர்
5. புடலங்க்காய்
6. வெங்காயம்
7. உருளைகிழங்கு
8. பச்சை மிளகாய்
9. வெண்டைகாய்
சரியா வசந்த்?

யோ வொய்ஸ் (யோகா) said...

ஐயா ராசா என்னால முடியல

S.A. நவாஸுதீன் said...

வசந்த்!

என்னாலையும் முடியல ராசா. எங்கேர்ந்துய்யா உங்களுக்கு இப்படி தோணுது

Admin said...

ஐயோ தாங்க முடியல்லடா சாமி...

அமிர்தவர்ஷினி அம்மா said...

:))

ரொம்ப யோசிக்கறீங்க.

Kala said...

வசந்த் ...ஞானம் வந்து சுத்தமா சைவமா?
காய்கறியில இந்தப்போடு.
வித்தியாசமான கற்பனை நன்று.
எல்லோரும் {முன்னாடி}விடையை
சொல்லிவிட்டார்கள் அதனால்......
ஹேமா சுட்டித்து போறார் சின்னப்பையனென்று.

Ashok D said...

என்னப்பா வச்ந்த் 18+ன்னு உள்ள வந்த காய்கறின்னு சொல்லி...ம்ம்ம்ம்ம்ம்

க.பாலாசி said...

அடப்பாவி நண்பா....18+ ன்னா நான் என்னமோ ஏதோன்னுட்டு வந்தா இப்டி சைவமா காட்டிட்டீங்க....சோ ஸ்வீட்....

நாஸியா said...

ore kari koli meena saaptu kai kari pere marandhuttu

தமிழ் அமுதன் said...

ம்ம்ம்ம்ம்ம்ம் என்னமோ போங்க ...!;;)

Anonymous said...

உன்னை தேனீ தேனியில கொட்ட.... நீ பண்ற லொல்லு தாங்கலை சாமீ......உன்னை பாராட்டி பாராட்டி..

அப்துல்மாலிக் said...

மதுர படம் பார்த்தேலா

அதுலேதான் விஜய் சொல்லுவார் ஒவ்வொரு பெயரும் மாற்றி..., சரி நீங்க விஜய் ரசிகர்னு ஒத்துக்கரேன்

ஜெட்லி... said...

சூப்பர் வஸந்த்... அக்மார்க் வஸந்த் இடுகை

Menaga Sathia said...

தக்காளி
கத்திரிக்காய்
பூசணிக்காய்
காலிபிளவர்
புடலங்காய்
வெங்காயம்
உருளை
ப.மிளகாய்
கொத்தமல்லி அல்லது புதினா அல்லது கீரை கட்டு

சரியா வசந்த்?

என்ன பரிசு?எப்போ எங்க வந்து வாங்கிக்கனும்...

வழக்கம் போல் பதிவு கலக்கல்..

அன்புடன் அருணா said...

ஸ்ஸ்ஸ்ஸ்...இப்பவே கண்ணைக் கட்டுதே!!!

புலவன் புலிகேசி said...

இதெல்லாம் ரொம்ப நக்கலு ஆமாம். காய்கறிக்கு 18 வயசாகனுமா....

பித்தன் said...

தங்கள் முதல் வருகைக்கு நன்றி vasanth

சத்ரியன் said...

//தக்காளி, கத்தரிக்காய்,பூசணிப்பழம் (சிலர் பரங்கிக்காய்- 'ன்னு சொறாய்ங்க),கா:.ளிப்ளவர்,புடலங்காய்,முட்டைக்கோசு,உருளைக்கிழங்கு,வெண்டைக்காய், பச்சைமிளகாய், கீரை.....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆ ..!

வசந்த்,
ஏன்யா இப்படி கண்டதையும் யோசிச்சு எங்க கொலைய அக்குற?

மறக்காம "மார்க்" போட்டுட்டு போங்க.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

அழைப்பே கிக்கோட.... கலக்குங்க!!!

கண்ணகி said...

ரொம்பவே லொல்லு. சிரிப்பு லொல்லு

கார்த்திகைப் பாண்டியன் said...

அட போப்பா.. ஏமாத்திப்புட்டியளே..:-))

குறை ஒன்றும் இல்லை !!! said...

அட சே..... வட போச்சே...

ரோஸ்விக் said...

18 + -னு போட்ட உடனே பாரு மேல எவ்வளவு பேரு என்னைய மாதிரியே இங்க படிக்க வந்துட்டாங்க...

நீங்க சொல்லிருக்கிற "காய்" எல்லாம் எல்லோரும் சாப்பிடலாமே....! அப்புறம் ஏன் 18+.

vasu balaji said...

ஏப்பா வசந்து. நீ போட்ட 18+ விலையத்தானே. =))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

18 காய் வரலியே..,

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வசந்த உங்க கற்பனாசக்திக்கு அளவே இல்லையா? உங்களுக்குக் "கிரியேட்டிவ் கிங்"னு ஒரு பட்டம் கொடுக்கலாம் :)

சிநேகிதன் அக்பர் said...

அடல்ட்ஸ் ஒன்லி... ன்னு தலைப்பு வச்சதுக்கு

வெஜ் ஒன்லி ன்னு தலைப்பு வச்சிருக்கலாம்.

நல்லா யோசிச்சிருக்கீங்க.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

super i really enjoy

நேசமித்ரன். said...

முடியல வசந்து முடியல

ப்ரியமுடன் வசந்த் said...

18+ அடல்ட்ஸ் ஒன்லின்ற பேருக்காகவே..உள்ளவந்து அட்டெண்டன்ஸ் போட்ட ஆயிரம் ஜோடி கண்களுக்கும் மிக்க நன்றிகள்

ஆமாப்பா இதுவரைக்கும் 300 400 அளவில் இருந்த ஹிட்ஸ் இன்னிக்கு 1000 ஐ தொட்ருக்கு கண்டிப்பா என்னோட பேருக்காக வரலைன்னு தெரியும்

பதிவில் கொஞ்சம் விரசமிருந்ததால் அப்படி பெயர் வைக்க வேண்டியதாயிற்று

அதற்க்காக அடல்ட்ஸ் ஒன்லின்ற பேர் பார்த்து ஏமாற்றமடைந்தவர்கள் மன்னிக்கவும்...

ஏனைய நண்பர்கள் பின்னூட்டத்திற்க்கு பதில் பின்னூட்டம் நாளைக்கு...

VISA said...

ஏய் கோபக்கார பிளாகர் வசந்த் வராறு எல்லாரும் சீக்கிரம் அவங்கவங்க லேப்டாப் கம்பியூட்டர ஆப் பண்ணிட்டு தூங்குங்க இல்லாட்டி இப்படி தான் அடல்ட்ஸ் ஒன்லி பதிவா எழுதி நம்மள தூங்கவிடமாட்டாரு.

சுசி said...

மரியாதையா அத்தனை காய்கறிகளையும் நீங்களே சொல்லிடுங்க....

இல்ல அந்தாள் கிட்ட சொல்லி உங்களையும் தூக்கி போட்டிட சொல்லிடுவேன், காய்கறி பைல.

பா.ராஜாராம் said...

:-))))

பித்தனின் வாக்கு said...

தக்காளி,
கத்திரிக்காய்.
முட்டைக்கோஸ்,
காலிபிளவர்,
முருங்கைக்காய்,
வெங்காயம்,
உருளைக் கிழங்கு,
வெண்டைக்காய்,
கொத்தமல்லி
கறுவேப்பிலை. (நான்)

மாம்ஸ், இது சரியா, தப்பா

Unknown said...

இது 18 + ah...... கொலவெறிய கெலப்பாதிகப்பா..

Starjan (ஸ்டார்ஜன்) said...

காய்கறியை வைச்சே பிளாக்மெயிலா ....

தக்காளி

கேரட்

பூசணிக்காய்

வெண்டைக்காய்

முருங்கைக்காய்

பச்சை மிளகாய்

கீரை

கத்தரிக்காய்

இதெல்லாம் போட்டு சாம்பார் வைச்சா அடி தூள் ..

நன்றி நண்பா ...

விக்னேஷ்வரி said...

தள தள - தக்காளி.
குடுமிக்காரி - கத்தரிக்காய்.
குண்டு மாமி - பூசணிக்காய்.
பூ வச்ச ரமா - காலி ஃப்ளவர்.
வளர்ந்தவன் - புடலங்காய்.
உடுப்புக்காரி - வெங்காயம்.
உருட்டி விட்டா உருளற - உருளைக்கிழங்கு.
பச்சப்புள்ள - பச்சமிளகாய்.
சின்னக் குழந்தைகள் - கறிவேப்பிலை, கொத்தமல்லி.

அவ்ளோ தானா... நான் பாசாகிட்டேனா வாத்தியாரே.

சிவாஜி சங்கர் said...

தலைப்ப போட்டு ஏமாத்திறீங்களே தல....

வெண்ணிற இரவுகள்....! said...

புதுமையாய் ஒரு புதிராய் இருந்தது ....எனக்கு சாப்பிட மட்டுமே தெரியும் வசந்த்

வெண்ணிற இரவுகள்....! said...

புதுமையாய் ஒரு புதிராய் இருந்தது ....எனக்கு சாப்பிட மட்டுமே தெரியும் வசந்த்

சீமான்கனி said...

yennatha solla...super...vazhakkam polava thool....mudiyala samiyovvvvvvvvvvvvvvvvvvv....

வால்பையன் said...

முடியல!

கடைக்குட்டி said...

அட என்னங்க...

உங்க மேல இருந்த நம்பிக்கைய...

காப்பாத்திட்டீங்க... (வேற என்னத்த சொல்ல...??)

துபாய் ராஜா said...

நல்லாத்தான் யோசிக்கறீங்க.... :))

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி ராஜூ

நன்றி ஞானம்

நன்றி பூங்கோதை (ஓரளவு எல்லாமே சரி)

நன்றி லோகு (சும்மா)

நன்றி கதிர்

நன்றி பிரதாப் (கரெக்ட்டு)

நன்றி பின்னோக்கி

நன்றி கலையரசன்

நன்றி ஹேமா

நன்றி அதிபிரதாபன்

நன்றி பிரியா

நன்றி கனக கோபி

நன்றி திருமதி ஜெயசீலன்(கரெக்ட்டுங்க ரெண்டு தப்பு)

நன்றி யோகா

நன்றி நவாஸ்

நன்றி சந்ரு

நன்றி அ.அ.

நன்றி கலா :)

நன்றி அசோக்கு

நன்றி நாஸியா :)

நன்றி ஜீவன்

நன்றி தமிழரசி :)

நன்றி அபு :)

நன்றி ஜெட்லி சரண்

நன்றி மேனகா மேடம் (ஒண்ணுதப்பு)

நன்றி பிரின்ஸ் :)

நன்றி புலிகேசி

நன்றி பித்தன்

நன்றி சத்ரியன் :)))

நன்றி சரவணக்குமார்

நன்றி வாத்துக்கோழி

நன்றி கார்த்தி :)

நன்றி ராஜ்குமார்

நன்றி ரோஸ்விக்

நன்றி வானம்பாடிகள் பாலா சார்

நன்றி சுரேஷ் தல

நன்றி செந்தில் அண்ணே :)))

நன்றி அக்பர்

நன்றி கவிஞன்

நன்றி விசா:)

நன்றி பா.ரா.

நன்றி சுசி :))

நன்றி பித்தனின் வாக்கு சுதாகர்(சரி)

நன்றி பேநாமூடி

நன்றி ஸ்டார்ஜன்

நன்றி விக்னேஷ்வரி (புடலங்காய் இல்ல)

நன்றி சிவாஜி சங்கர்

நன்றி வெண்ணிற இரவுகள் :)

நன்றி சீமாங்கனி

நன்றி வால்

நன்றி கடைக்குட்டி

நன்றி துபாய்ராஜா

SUFFIX said...

ஹா..ஹா...வசந்த், செம த்ரில்!!