May 2, 2009

இவங்க எல்லாம் பாடினா என்ன பாட்டு பாடுவாங்க?

பாட்டு வாத்தியார்: நிலவே நிலவே ஸ ரி க ம ப த நி ஸ பாடு...........

ஆங்கில வாத்தியார்: A B C நீ வாசி எல்லாம் என் கைராசி................

பைத்தியக்காரன்: ஐயையோ ஐயையோ புடிச்சிருக்கு! எனக்கும் ரொம்ப புடிச்சிருக்கு.......

டப்பிங் ஆர்டிஸ்ட்: நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்......

வக்கீல்: பொய் சொல்ல இந்த மனசுக்குத் தெரியவில்லை சொன்னால் பொய் பொய் தானே............

குடிகாரன்: (குடிவகையைப் பார்த்து) என்னைக் கொஞ்சம் மாற்றி என் நெஞ்சில் உன்னை ஊற்றி நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே............

டெண்டுல்கர் பாடினால் "அடிச்சால் சிக்ஸரு.... எடுத்தால் செஞ்சுரி.........."

தோனி பாடினால்
: பறக்கும் பந்து பறக்கும், அது பறந்தோடி...

பசியோடிருக்கும் பாம்புகள் பாடினால்?

'தண்ணி கருத்திருச்சு - புள்ள
தவள சத்தம் கேட்டிருச்சு'

பால்காரர் பாடினால்:

தரைமேல் பிறக்கவைத்தான் - எங்களைத்
தண்ணீரால் பிழைக்க வைத்தான்

6 comments:

vadivelmurugan said...

கடைசி இரண்டு பாட்டுக்களும் ரொம்ப பிரமாதம்.
சகாதேவன்

sakthi said...

பசியோடிருக்கும் பாம்புகள் பாடினால்?

'தண்ணி கருத்திருச்சு - புள்ள
தவள சத்தம் கேட்டிருச்சு'

wow

nalla karpanainga

keep it up

தேவன் மாயம் said...

குடிகாரன்: (குடிவகையைப் பார்த்து) என்னைக் கொஞ்சம் மாற்றி என் நெஞ்சில் உன்னை ஊற்றி நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே............
///
ரொம்ப நல்லா இருக்கு!!

முனைவர் இரா.குணசீலன் said...

ரொம்ப நல்லாருக்கு........
மனம் விட்டுச் சிரித்தேன்

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி வடிவேல்,சக்தி,தேவன்மயம்,குணசீலன்

தீப்பெட்டி said...

எப்படி பாஸ்.. இப்படியெல்லாம்....
புல்லரிக்குது...