May 9, 2009

அ முதல் ஃ வரை அம்மா

அம்மா!


ன்பு என்றால் அம்மா
றுதல் தருபவள் அம்மா
ரத்தத்தை பாலாக்கி தந்தவள் அம்மா
கை விளக்கியவள் அம்மா
யிரைக் கொடுப்பவள் அம்மா
ழ் உரைத்தவள் அம்மா
ன்னைப் பெற்றவள் அம்மா
ணியாய் இருந்தவள் அம்மா
யம் நீக்கியவள் அம்மா
ற்றுமை விதைத்தவள் அம்மா
ய்வின்றி உழைத்தவள் அம்மா
ஒளடதம் ஆனவள் அம்மா
கின் உறுதி அம்மா






அம்மா




பாலும் சோறும் உண்ணத் தந்து
படிக்கச் சொல்லும் அம்மா
காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக்
கட்டிக் கொஞ்சும் அம்மா


புழுதி போக்கி நீருமாட்டி
பொட்டும் வைக்கும் அம்மா
அழுதிடாமல் பள்ளிக்கூடம்
அழைத்துச் செல்லும் அம்மா

பள்ளிக்கூடம் விட்ட நேரம்
பாதி வழிக்கு வந்து
துள்ளிக் குதிக்கும் என்னைத் தூக்கித்
தோளிற் போடும் அம்மா


அம்மா இங்கே வா! வா!


அம்மா இங்கே வா! வா!
ஆசை முத்தம் தா! தா!
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு
உன்னைப் போன்ற நல்லார்,
ஊரில் யாவர் உள்ளார்?
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயமின்றி சொல்லுவேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்.

கருவறையில் காத்து
கவித்துவமாய்
என்னை பெற்ற
என் அன்பு அம்மா நீ என் அருகில் இல்லாவிடினும் உன் பாசம் என்றும் பெற்ற இந்த மகன் உனக்காக இந்த பதிவை
சமர்ப்பிக்கிறேன்

4 comments:

sarathy said...

அருமை வசந்த்...

ஆ.சுதா said...

அம்மாவின் அனபுக்கு ஈடு இனையேக் கிடையாது.
நல்லா இருக்கு.

sakthi said...

valthukal vasanth

alagana kavithai

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி சாரதி,முத்துராமலிங்கம்,சக்தி