Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

December 25, 2010

காதற்காடு காதல்சாமி காதல்சாரத்தை கட்பண்ணிட்டாருப்பா!

காதலியல்

காதல் சும்மா எடுத்தார் கைப்பிள்ளை மாதிரி யார்வேண்டுமானலும் காதலிக்கலாம், காதல் திருக்குறள் மாதிரி பொதுவுடைமை. ஆனால் அதை எடுப்பதற்க்கு முன்னால் அது தரக்கூடிய வலி சந்தோஷம் துக்கம் இழப்பு எல்லாத்தையுமே தாங்கிக்கொள்ளக்கூடிய மனநிலை நம்மிடம் இருக்கிறதா என்று ஒரு முறைக்கு பலமுறை காதல்மீட்டர் மூலம் அறிந்துகொண்டு எடுக்கவேண்டும்..

என்னடா இது காதல்மீட்டர் கேள்விப்படாத மீட்டரா இருக்கே அப்படின்றவங்களுக்கு இந்த மீட்டரைப்பற்றி சொல்லி விடுகிறேன்.இந்த காதல்மீட்டர்  உங்கள் உடம்பில்தான் இருக்கிறது . ஏதாவது ஒரு காதல் ஜோடியை வழியில் பார்த்ததும் உங்களுக்கும் அதே போல் காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் வருமாயின் காதல் மீட்டர் வொர்க் ஆகுதுன்னு அர்த்தம். மாறாக ச்சீய்ய் இதெல்லாம் ஒரு பொழப்புன்றவங்களுக்கு அந்த மீட்டரே வேலை செய்யவில்லையென்று வைத்துக்கொள்ளலாம்.

ஆனால் எனக்கு காதலர்களைப்பார்த்தால் மட்டுமில்லாமல் எதைப்பார்த்தாலும் காதல் ஃபீவர் அதிகமாகிவிடுகிறது என்னோட காதல் மீட்டர் அளவுக்கு மீறியே வேலைசெய்கிறது அதனால் ஏற்பட்ட பின்விளைவுகளே பின்வருவன.. ( முடியலைல)






பழநிக்குச்சென்று
முருக பெருமானைப்பார்த்து 
முருகா போற்றியென்று
சொல்வதற்க்கு பதில்
கவிதா போற்றியென்று
சொன்னதும் முருகன்
வேலையெடுத்து
குத்திடுவேன் ஓடிவிடு 
என்பதுமாதிரியே
போஸ் கொடுக்கிறார்..

கடைக்குப்போய் 
கால்கிலோ கத்தரிக்காய்
என்ன விலைன்னு
கேட்டு வாங்கிவாடான்னு
அம்மா சொன்னதும்
கடைக்குச் சென்று
கடைக்காரரிடம் 
கால்கிலோ காதல்
என்ன விலையென்று 
கேட்டு மானம் போகிறது...

புறநானூறு
எழுதியவர்களைப்பற்றி
பாடம் நடத்திக்கொண்டிருக்கும்
தமிழாசிரியரிடம்
ஏன் ஐயா காதல்நானூறென்று
யாரும் எழுதவில்லை
என்று கேட்டு காதலியின் முன்
ஆசிரியரிடம் குட்டு 
வாங்கியதுதான் மிச்சம்...

காதலியும் நானும்
ஒரே பேருந்தில்
அருகருகே அமர்ந்து
பயணித்து கொண்டிருக்கும்
பொழுது எங்கப்பா போகணும்
என்று கேட்டுவரும்
நடத்துனரிடம்
காதலூருக்கு ரெண்டு டிக்கெட்
என்றேன் உடனே அவர்
பயணச்சீட்டுக்கு பதில்
வசைச்சீட்டு கொடுத்து
மானத்தை பேருந்தில் ஏற்றுகிறார்...

கணக்குப்பாடத்தில்
கணக்குகளை விரைவில்
போட்டு முடிப்பதற்க்கு
கால்குலேட்டர்
இருக்கின்ற மாதிரி
என்னுடைய காதல்பாட
கணக்குகளை சீக்கிரம்
போட்டு முடிக்க ஒரு
காதல்குலேட்டர்
இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்டா
என்றேன் நண்பனிடம்
துப்பிவிட்டான்...

என்னுடைய பிறந்தநாளுக்கு
புத்தாடை உடுத்தி 
கொண்டாடிய நான்
என் காதல் பிறந்தநாளுக்கு
காதலுக்கு புத்தாடையெடுக்க
துணிக்கடைக்கு சென்றேன்
யாருக்கு துணி என்ன சைஸ்
என்ற சேல்ஸ்மேனிடம்
ஒரு வயது காதலுக்கு
என்றேன் சேல்ஸ்மேனும்
துப்பிவிட்டான்..

காதலியை நினைத்து
ஒரு வேலைகூட
செய்யாமல் வீட்டின்
மூலையில் உட்கார்ந்திருந்தேன்
என்னடா ஆச்சு என்று 
கேட்ட அப்பாவிடம்
காதற்காடு காதல்சாமி
காதல்சாரத்தை
கட்பண்ணிட்டார்ப்பா
அதான் உடம்பு வேலை
செய்யமாட்டேன்னுது
என்று சொன்னதும்
அவரும் அவர் பங்கிற்க்கு
துப்பிவிட்டார்...

வாடா இன்னிக்கு 
எங்கயாவது வெளியில போகலாம்
என்று காதலி சொன்ன சந்தோஷத்தில்
நண்பனை அலைபேசியில் அழைத்து
மச்சி இன்னிக்கு 
சரக்கடிக்கப்போறேண்டா அதனால 
காலேஜ்ல வாத்தியார் கேட்டா
நான் லீவ்ன்னு சொல்லிடு என்றேன்
எந்த பார் என்ன சரக்கு 
சைட் டிஷ் என்ன ஆர்டர் பண்ணப்போற
நானும் வர்றேன்டா என்று 
ஆவலாய் கேட்ட நண்பனிடம்
காதல் பாருக்கு போய்
காதல் பிராண்ட் சரக்கு அடிக்கப்போறேன் 
சைட் டிஷ் காதலிதாண்டா என்று
சொல்லி முடிப்பதற்க்கு முன்பே
அருகில் அமர்ந்திருந்த காதலியும்
துப்பிவிட்டாள்...

இப்படி
எதைப்பார்த்தாலும்
காதலாய் தோன்றி 
காதல்பித்து பிடித்து திரியும்
உன்னை என்ன செய்யலாமென்று
என்னிடம் கேட்ட அம்மாவிடம்
காதல்பாக்கத்திலிருக்கும்
காதல் ஆஸ்பிட்டலுக்கு
போய் செக் பண்ணிட்டு
வர்றேன்ம்மா என்றேன்
அம்மாவும் துப்பிவிட்டார்...

இப்பொழுது உங்கள் முறை வரிசையாக துப்பிவிட்டு செல்லவும்...

.


November 8, 2010

பின்னூட்டம் போட்டு விளையாடலாம் வாங்க பாஸ்!

நீண்ட நாட்களாக தேடி தேடி அலுத்துப்போய் கிடைக்காத ஒரு விஷயம் கிடைத்தால் வரும் புன்னகையே ப்ரொஃபைல் போட்டோவின் புன்னகைக்கு அர்த்தம்...

ஆம் நீண்ட நாட்களாக பின்னூட்டத்தில் புகைப்படங்கள் வரவைப்பது எப்படி என்று தேடி தேடி அலுத்து சேய் என்னடா இது இவ்ளோ பிரயாசப்பட்டு கிடைக்காமப்போயிடுச்சே என்று நினைத்து கொண்டிருந்தேன். நேற்று தற்செயலாக நீச்சல்காரன் (பெயரே வித்தியாசமாக இருக்கிறதல்லவா ஆம் அவரின் பதிவுகளும் கூட வித்தியாசமாகவே இருக்கும் ) பின்னூட்டத்தில் படங்கள் வேண்டுமா? என்று ஒரு பதிவெழுதியிருந்தார்.அப்பொழுது மலர்ந்த புன்னகைதான் அது.பின்ன ஆசைப்பட்டது கிடைத்தால் எவ்வளவு ஆனந்தம் .

உடனே என்னுடைய வலைப்பூவில் செயற்படுத்தி பார்க்கலாம் என்றால் நேற்று மண்டை லேப்டாப்பின் ஸ்கிரீனுக்குள் போகாததுதான் மிச்சம்.அவர் தந்த நிரலி வேலை செய்யவில்லையென்று பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தேன் . உடனே என்னை மெயிலில் தொடர்புகொண்டு என்னுடைய வலைப்பூவிற்கேற்ற நிரலி செய்து கொடுத்தார் இன்று வந்ததும் அதை செயல் படுத்தி பார்த்ததும் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தேன்.

இந்த முறையை உங்கள் பிளாக்கிலும் செயல்படுத்த நீச்சல்காரனின் இந்த பின்னூட்டத்தில் படங்கள் வேண்டுமா லிங் சென்று பார்த்து கொள்ளுங்கள்
மிக்க நன்றி நீச்சல்காரன்...


இனி அதை இந்த பதிவின் பின்னூட்டத்தில் செயல்படுத்தி பார்க்க...

படங்கள் பின்னூட்டத்தில் வர..
[im]________[/im] கோடிட்ட இடத்தில் தங்களுக்கு தேவையான படத்தின் முகவரி கொடுக்கவும்....

எடுத்துக்காட்டாக

நட்புடன் ஜமால் - இவர் சின்ன வயசுல இப்படித்தான் இருப்பாராம் 
[im]http://img1.loadtr.com/b-411981-Funny_Baby.jpg[/im]

பன்னிக்குட்டி ராம்சாமி யாருன்னு தெரியுமோ?
[im]http://static.whatsontv.co.uk/images/07420_125735_117248.jpg[/im]


என்னை திட்டணும்னா


நன்றி சொல்ல

[im]https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9ZAazSePTlK3WmBFRh82ZQFqiCo9IRg86mrtF8khIXbXBPXpHpBwwflBOqz7Fj88u7F9zYeDiPTlebKAJPm_m01fOCepE1zS_saU61zytu5xGX2WiorR8qPKyl0WgkSvbTSxFwpGNVY0/s1600/tamil+thanks.gif[/im]

[im]http://sanbruno.ca.gov/Library/Newsletter/2008/May%25202008/thankyou.jpg[/im]

வாழ்த்துகளுக்கு 

[im]http://www.orkutpapa.com/scraps/ra-sunbird-congratulations.gif[/im]




இதே படங்கள் ஓட 
[ma][im]________[/im][/ma] கோடிட்ட இடத்தில் படத்தின் url முகவரி கொடுக்கவும்...


[ma][im]http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNcQwdGzqbI/AAAAAAAAEZo/yLz1o4O7zyM/s1600/vas.JPG[/im][/ma]


ஓடும் எழுத்துக்களுக்கு


[ma]________[/ma] கோடிட்ட இடத்தில் தங்களுக்கு தேவையான வார்த்தைகளை சேர்க்கவும்...

[ma]அட்ராசக்க அட்ராசக்க அட்ராசக்க[/ma]

மேலே நீலக்கலரில் ஹைலை செய்திருக்கும் எழுத்துக்களை அப்படியே பின்னூட்டப்பொட்டியில் இடவும் .காசா பணமா பின்னூட்டம் போட்டு விளையாடுங்க ஃப்ரண்ட்ஸ் நன்றி! அதுமட்டுமில்லாம இந்த முறை எனக்கு கமெண்ட் போட்டவங்களுக்கு ஸ்பெசலா நன்றி சொல்லப்போறேன் ம்ம்!

November 2, 2010

நீயா நானா கோபிநாத்துடன் பெட்ஸ்!

                      வெல்கம் டூ லயன் டேட்ஸ் சிரப்பின் நீயா நானா கோபிநாத்தின் அன்பு வணக்கங்கள் . அதாவது இந்த உலகம் நமக்கானதே என்ற ஒப்பீனியன் நமக்கு எப்பொழுதுமே இருந்தது உண்டு.நம்ம ஜெனரல்லா என்ன நினைக்கிறோம்ன்னா நம்ம மட்டும்தான் இங்க வாழ்றதுக்காக இருக்கிறோம் அப்டின்னு சொல்லி நம்ம தேவைக்கு என்ன என்ன வேண்டுமோ அதெல்லாத்தையுமே செய்யுறோம் , காட்டை அழிக்கிறோம்,பூமியை தோண்டுறோம்,ஆனா இந்த உலகத்தில் மனிதனைத்தவிர வாழ்றதுக்கு எல்லா ஜீவராசிகளுக்கும் உரிமை இருக்கிறது அதிகாரம் இருக்குன்றதை நாம மறக்கிறது இல்லை அப்படிப்பட்ட அந்த ஜீவராசிகள் மனிதனிடம் வளர்ப்பு பிராணிகளாக இருப்பதே சிறந்தது என்று வாதாட ஒரு சாரரும் ( வெடக்கோழி வெண்மதி, மீசைக்காரன் பூனை, கெடா கஜா,பசு பானு, நாய் நாதன் ) இல்லையில்லை நாங்கள் நாங்களாவே வாழறதுதான் சிறந்தது என்று வாதாட ஒருதரப்பினரும்( சிங்கம் சீனி, புலி புல்லட்,கொசு கோவிந்தன்,நரி நம்பி, மங்கி பிங்கி) வந்திருக்கின்றனர்..




கோபிநாத் : வந்திருப்பவர்கள் அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.

வெடக்கோழி வெண்மதி : நான் வெடக்கோழி வெண்மதிங்க கோழிபுரத்தில இருந்து வந்திருக்கேன்.

மீசைக்காரன் பூனை : நான் மீசைக்காரன் பூனைங்க உங்க வீட்டுல இருந்துதான் வந்திருக்கேன்.

கோபிநாத் : ஆஹா வாங்க சார் நான் கூட வழிதெரியாம வராம போய்டுவீங்களோன்னு நினைச்சேன்!

மீசைக்காரன் பூனை : உங்க அளவுக்கு இல்லைனாலும் கொஞ்சூண்டு மூளை எனக்கும் இருக்கே நீங்க புறப்படும்போதே உங்க கார் பேக் சீட்ல ஒளிஞ்சுகிட்டேனே!

கோபிநாத் : அது சரி!!!

கெடா கஜா : நான் கெடா கஜாங்க ஆட்டுக்கார அலமேலு வீட்ல இருந்து வந்திருக்கேன்.

பசு பானு : நான் பசு பானுங்க ராமராஜன் வீட்ல இருந்து வந்திருக்கேன்.!

நாய் நாதன் : நான் நாய் நாதன் நாதன் நாதன் கடிபுரத்திலிருந்து வந்திருக்கேன்.!

கோபி நாத் : நாய் நாதன் உங்க பெயர் வித்யாசமா இருக்கே ஏன் இந்த பெயர் ?

நாய் நாதன் : நாதனை திருப்பி போட்டீங்கன்னா தன்நா நாக்கு இல்லாம நானில்லை இதுதான் என் பெயருக்கு விளக்கம்.

கோபி நாத் : ரொம்ப அழகா சொன்னீங்க நாய் நாதன், எதிர் தரப்பும் தங்களை அறிமுகப்படுத்திக்கங்க.

எதிர்தரப்பு கோஷ்டியினரில் புலி புல்லட் "எங்களைப்பார்த்தாலே எல்லாருக்கும் தெரியும் அதனால அறிமுகம் தேவையில்லையென்று நினைக்கிறோம் இல்லையா சிங்கம்?" என்று தன் கோஷ்டியைப்பார்த்து கேட்க அனைவரும் கோரஷாக ஆமாம் என்றனர்

கோபி நாத் : ஆஹா என்ன ஒரு ஓற்றுமை எதிர் பார்ட்டிகள் கொஞ்சம் உஷாராவே இருங்கப்பா! சரி விஷயத்திற்க்கு வருவோம் நீங்க சொல்லுங்க வெடக்கோழி வெண்மதி வீட்டில் வளர்ப்பு பிராணியா வளர்வதில் தங்களுக்கு இதுவரை எந்த ஒரு சங்கடமான , வருத்தமான சூழலே வரவில்லையா?

வெ.வெண்மதி : 99% எங்களுக்கு வளர்ப்பு பிராணியாக வளர்வதில் எந்த ஒரு சங்கடமும் ஏற்படுவதில்லை பொதுவாக சொல்லப்போனால் காட்டில் தேடி தேடி உணவுகளை உண்ணுவது மிக கஷ்டம் அதையும் மீறி ஏதாவது ஒரு விளை நிலத்தில் நாங்கள் போய் இரை தேடப்போகையில் தோட்டத்துக்காரனிடம் பிடிபட்டால் அவன் எங்களை அடித்து குழம்பு வைத்துவிடுவான் அதுதான் கஷ்டப்பட்டு ஏன் உயிரை விட வேண்டும் இஷ்டப்பட்டு உயிரை விடுவோமே என்ற எண்ணம்தான் .அந்த ஒரு பர்சண்டேஜ் தொந்தரவு பக்கத்துவீட்டில் வளரும் சேவல் சேனாதிபதிகளால் ஏற்படுவது அது சகஜம்தானே!

கோபி நாத் : அப்போ உயிர் போனாலும் வளர்ப்பு பிராணியா வளர்ந்து உயிரை விடறதுல உங்களுக்கு இஷ்டம்ன்னு சொல்றீங்க சரி மிஸ்டர் புலி புல்லட் , வெடக்கோழி வெண்மதியோட கருத்துக்கு உங்க பதிலென்ன?

புலி புல்லட் : அந்த வெடக்கோழி வெண்மதிய நீங்க இல்லாட்டி இப்பவே இங்கயே கடிச்சு சாப்பிட்டுடுவேன் ஏதோ நீங்க இருக்கீங்கன்றதால விடறேன் அவங்க சொல்றாங்க கஷ்டப்பட்டு உயிரை விடறத விட இஷ்டப்பட்டு உயிரை விடறதுதான் சரின்னு, வீட்டுல வளர்றதால நிறைய தமிழ் படம் பார்க்குறாங்க போல அதான் சூர்யா கஜினி படத்துல சொல்ற டயலாக்கெல்லாம் வருது அவங்களோட கருத்து முற்றிலும் தவறுங்க கஷ்டப்பட்டு நமக்கு நாமே உணவு தேடி அதை உண்டு வாழ்றதுதாங்க மிகவும் மகிழ்ச்சியானது அது மட்டுமில்லாம யாருக்கும் அடிமையா வாழறதுல எனக்கு சுத்தமா இஷ்டம் இல்லீங்க.

கோபிநாத் : சபாஷ் புலி புல்லட் மிகவும் அழகான ஒரு கருத்தை சொன்னீங்க. ஆமா அவங்க வீட்டுல வளர்ந்ததால கஜினி படம் பார்த்தாங்க நீங்க கஜினி படம் பார்த்தீங்க?

புலி புல்லட் : உலகம் முழுவதும் வெற்றிகரமான நூறாவதுநாள்ன்னு தானே போஸ்டர் அடிக்கிறாங்க ஹிஹிஹி

கோபி நாத் : குசும்பு பிடிச்சவரா இருப்பீங்க போலயே புலி புல்லட் ?!! சரி மிஸ்டர் மீசைக்காரன் பூனை, புலி புல்லட் அருமையா அவரோட விவாதத்தை ஆரம்பிச்சு வச்சுருக்கார் அதுக்கு உங்களுடைய வாதம் என்ன?

மீ.கா.பூனை : அடடா நடிப்புல சிவாஜிகணேஷன் தோத்துடுவார் போங்க இந்த புலி புல்லட்டும் அவனோட சாதிக்கார பயலுகளும் பண்ற அட்டகாசம் தாங்க முடியாம மனிதர்கள்கிட்ட வளர்ப்பு பிராணியா இருக்குறதுன்னு முடிவு பண்ணுனேமே!

கோபிநாத் : இதென்ன புதுக்கதை புலிபுல்லட் என்ன பண்ணுனார்?

மீ.கா.பூனை : அதை எப்படி என் வாயால சொல்லுவேன் அதோ அங்க ஒழிஞ்சு நின்னு பாத்துகிட்டு இருக்குற கஸ்தூரி மான் கிட்ட கேளுங்க அவங்களே சொல்லுவாங்க!

கோபிநாத் : மைக்க கஸ்தூரி மான்கிட்ட கொடுங்க.

கஸ்தூரி மான் : ஆமாங்க காட்டுல இந்த புலி குரூப் பண்ற அட்டகாசத்துல என்னோட சொந்தபந்தம் நிறையபேரை நான் இழந்துட்டேன் இவன் இங்க வந்து நடிக்கிறான் இவனோட பொழுதுபோக்கே தன்னோட காட்டுல வாழுற தன்னைவிட வலிமை குறைந்த மிருகங்கள அடிச்சு சாப்பிடறதுதான் இவன் எல்லாம் வீரத்தப்பத்தி பேசவந்துட்டான் பெருசா தூ!

கோபிநாத் : அட டா ப்ச் என்ன புலி இவ்ளோ மோசமானவரா நீங்க? உங்ககிட்ட பேசறதே தப்பு போல அடுத்து மிஸ்டர் நரி நம்பி அவர்களே, கஸ்தூரிமான் இவ்ளோ கொடுமையா உங்க குரூப்னால பாதிக்கப்பட்டுருக்காங்களே சக இனத்தவர்களை நீங்களே கொடுமைப்படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்?

நரி நம்பி : அது வந்து சார் நான் என்ன சொல்ல வர்றேனா நீங்க முதல்ல யோக்கியமா உங்க சக மனிதர்களில் பணவசதி குறைந்தவனை பணக்காரர்கள் அடிமைப்படுத்துவது, சுகத்துக்காக கணவனையே விஷம் வச்சு கொல்றது ,  பணத்துக்காக குழந்தைன்னு கூட பார்க்காம கொல்றது இதைவிட நாங்கள் செய்வதொன்றும் பெரிய கொடுமையில்லையே?

கோபிநாத் : மிஸ்டர் நரி நீங்கள் டாபிக்கை திசை திருப்புறீங்க ! உங்க தந்திர புத்தியை காட்டிட்டீங்களே! ம்ம்ம்ம் மிஸ்டர் கெடா கஜா நரியுடைய வாதத்திற்க்கு உங்களுடைய கருத்து என்ன?

கெடா கஜா: அந்த நரிப்பய வடைக்காக காக்கவ ஏமாத்துனவன்தானே இதவிட இன்னும் தந்திரமாவே பேசுவான்!

கோபிநாத் : ஹ ஹ ஹா! சூப்பர் கஜா! மிஸ்டர் .கொசு கொவிந்தன் நீங்க என்னசொல்லப்போறீங்க?

கொசு கோவிந்தன் : எனக்கு இந்த வளர்ப்பு பிராணியா இருக்க விருப்பம்தான் ஆனா வளர்ப்பு பிராணியா வளர்க்க நீங்க ரெடியா?

கோபிநாத் : ஆவ்வ்வ்வ் நீங்க எவ்வளவு போராட்டம் பண்ணுனாலும் அதுமட்டும் முடியவே முடியாது தல நீங்க உங்க விருப்பப்படியே இருங்க வீணா உங்களை வளர்ப்பு பிராணியா வளர்க்கலாம்ன்னு அட்வைஸ் பண்ணி ஊர் மக்கள்கிட்ட அவமானப்பட நான் விரும்பல இவ்ளோ நேரம் பொறுமையா நீங்க உட்கார்ந்ததுக்கே பெரிய கும்புடுண்ணே!

கொசு கோவிந்தன் : பார்த்தீங்களா நான் அளவுல சிறியவன் தான் ஆனா உங்களையே பயமுறுத்தி வச்சுருக்கெனே இதுதான் எனக்கு கிடைச்ச வெற்றி !

கோபிநாத் : அது சரி ! யாருப்பா அங்க ஸ்டேஜ் உதவியாளர் அந்த டார்டாய்ஸ் எடுத்து கொளுத்துங்களேன்! அடுத்து மிஸ்டர் பசு பானு இவ்ளோ அமைதியா உட்கார்ந்திருக்கீங்களே உங்களுடைய கருத்துகளை பகிருங்களேன்!

பசு பானு :  எனக்கு இந்த சண்டை இரத்தம் இதெல்லாம் பிடிக்காதுங்க என்னை வளர்க்குறவங்களுக்கு எந்த துன்பமும் நான் கொடுக்குறது கிடையாது நானுண்டு புல்லுண்டுன்னு இருக்கேன் எனக்கும் அவங்க தொந்தரவு கொடுக்குறது இல்லை அதுமட்டுமில்லாம வருடம் முழுதும் அவங்களுக்கு பண்ற உதவிக்காக வருடத்தில் ஒருநாள் எங்களை கொண்டாடுறாங்க அந்த சந்தோஷம் போதும்ங்க எனக்கு வளர்ப்பு பிராணியா வளர்றதுலதான் இஷ்டம்!

கோபிநாத் மற்றும் பசுபானு குரூப் அனைவரும் கைதட்டுகின்றனர்.

கோபிநாத் :மிக சிறப்பான கருத்து பானு சபாஷ்! ம்ம்ம் அடுத்து இந்த எதிர் கோஷ்டிக்கு மட்டுமில்ல காட்டுக்கே ராஜாவான சிங்கம் சீனி உங்களுடைய கருத்தைத்தான் எல்லாரும் எதிர்பார்த்துகிட்டு இருக்கோம் ம்ம் சொல்லுங்க!

சிங்கம் சீனி : இந்த நிகழ்ச்சியோட ஸ்பான்ஸர் யாரு சார்?

கோபிநாத் : லயன் டேட்ஸ்

சிங்கம் சீனி : டேட்ஸ் மனிதர்கள் சாப்பிடறது மனிதர்கள் சாப்பிடற டேட்ஸ்க்கே என்னுடைய லோகோ தேவைப்படற அளவுக்கு என்னுடைய வலிமை இருக்கு . இந்த வலிமை எங்க இருந்து வந்தது? காட்டுல தனியா அலைஞ்சு ஓடியாடி திரிஞ்சதுனால வந்ததுதான் இதே நானும் வீட்டுல வளர்க்குற பிராணியா இருந்திருந்தா இந்த பசு பானு மாதிரி உணர்ச்சியில்லா ஜடமாத்தான் இருந்திருப்பென் எனக்கு வீட்டுல வளர்ற பிராணிகளைப்பார்த்து பரிதாபம்தான் வருது சார் அவங்க எல்லாருக்கும் ராஜா என்ற முறையில் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து என்னுடைய விவாதத்தை முடித்து கொள்கிறேன்.

கோபிநாத் : மிகவும் அழகாக ராஜாவிற்கே உரிய துடுக்குடன் பேசினீர்கள் சிங்கம் சீனி சபாஷ்! இறுதியாக நாய் நாதன் உங்களுடைய கருத்தையும் பதிவு செய்யுங்க..

நாய் நாதன் : என்ன சார் சொல்ல சொல்றீங்க இன்னைக்கு மதியம் என்னை விட்டுப்போட்டு ஊருக்கு போயிட்டார் என்னோட எஜமான். நீங்க கூப்பிட்டீங்கன்னு நான் வீட்டை விட்டுட்டு இங்க வந்துட்டேன் எனக்கு இப்போ ஒரே கவலை வீட்டுல யாரும் புகுந்து எதையும் திர்டிடுவாங்களோ இல்லையோன்னு என்னை விட்டுடுங்க சார் எனக்கு விசுவாசத்தை விட வேற ஒண்ணும் தெரியாது நான் ஒண்ணும் ஏமாத்தியோ அடுத்தவங்க வயித்துல அடிச்சோ வாழலை சாப்பாடு போடறாங்க அதுக்கேத்த மாதிரி நான் அவங்களோட உடைமைகளை பாதுகாப்பா பார்த்துகிடறேன் சுருக்கமா சொன்னா உழைச்சு சாப்பிடறேன் சார் எனக்கு இது பிடிச்சிருக்கு .ஒண்ணே ஒண்ணு சொல்றேன் எங்க வாழ்றோம்ன்றது முக்கியமில்ல சார் எப்படி வாழ்றோம்ன்றதுதான் முக்கியம் நன்றி சார்

கோபிநாத் மற்றும் சிங்கம் குரூப் நாய் குரூப் அனைவரும் பலமாக கைதட்டுகின்றனர் .

கோபிநாத் : அட்டகாசம் நாய் நாதன் பார்த்தீங்களா சிங்கம் சீனி உங்களையே ஆச்சரியப்படுத்திட்டார் இதுதானுங்க உண்மை.  வளர்ப்பு பிராணியா இருக்கீங்களோ இல்லையோ வாழ்றதுல ஒரு நேர்மை வேண்டும்.அதுமட்டுமின்றி எங்கு வாழுகிறோம் என்பது முக்கியமல்ல எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம் என்பதை தெரிவித்துகொண்டு . மிகச்சிறப்பாக விவாதம் செய்த நாய் நாதனுக்கு வசந்த் & கோ வழங்கும் ஒரு மினி டாய்லெட் பரிசளிக்கப்படுகிறது வாழ்த்துகள் நாய் நாதன்.

முற்றும்





,

October 31, 2010

எப்படி எப்படி சமஞ்சது எப்படி?

கவிஞர் வாலி எழுதிய வரலாற்று புகழ் வாய்ந்த இந்த பாடலையொட்டி நடந்த விவாதங்கள்

எப்படி? எப்படி? சமஞ்சது எப்படி?
எப்படி? எப்படி? சமஞ்சது எப்படி?

சக்கரவள்ளிக் கிழங்கு மாமா சமஞ்சது இப்படி
சக்கரவள்ளிக் கிழங்கு மாமா சமஞ்சது இப்படி

முந்தா நாளு வானம் மாமோய் தூரல் போடும் நேரம்
ஊதாப்பூவப்போல பூத்து உட்கார்ந்தேனே தூரம்

அது எப்படி? எப்படி? சமஞ்சது எப்படி?
சக்கரவள்ளிக் கிழங்கு மாமா சமஞ்சது இப்படி

சந்தையில சுத்துறயே எதுக்கு?
நீயும் ஜொள்ளு விட்டு பார்த்திடணும் அதுக்காக

சில்லறைய கேக்குறயே எதுக்கு?
கடன் சொல்லிவிட்டுப் போயிடுவ அதுக்காக

என்னாட்டமா ஏழைக்கெல்லாம் ரேட்டு ரொம்ப ஜாஸ்திதான்
எல்லாத்தையும் இங்கே வுட்டா சோறு தண்ணி நாஸ்திதான்

அட வெட்டியாக என்ன பேச்சு 
வெலவாசி ஏறிப்போச்சு 
நானும்தானே வாழணும்
பக்கம் வந்த மாமா
இதுக்கு பேரம் பேசலாமா?
பாக்குப்பாய போட்டு
நீயும் பயாஸ்கோப்பு காட்டு

எப்படி? எப்படி? சமஞ்சது எப்படி?
அப்படி அப்படி சமஞ்சது அப்படி

சப்பரம் போல் ஆடுறியே எதுக்கு?
நித்தம் சாமி வந்து ஏறிடணும் அதுக்காக

தொப்புளத்தான் காட்டுறியே எதுக்கு?
மாமன் பம்பரம்தான் விட்டுடணும் அதுக்காக

சும்மானாச்சும் பாக்கும்போது சூட்டை நீயும் ஏத்துற
சாரயத்தை கண்ணு மேல வச்சு ஆளு மேல ஊத்துற

அட காய்ஞ்ச மாடு கம்புலதான்
பாய்ஞ்சது போல் தெம்புலதான் 
நீயும் மேயப்பாக்குற
மூட்டை தூக்கும் மாமோய்
அழகு மானை தூக்கலாமா?
ஹேய் மாமன் வீரம் என்ன
அதைத்தான் நானும் பார்க்கலாமா?
சங்கதியெல்லாம் தெரிஞ்சும்
ஏன்யா சொதப்புற இப்படி?
சங்கதியெல்லாம் தெரிஞ்சும்
ஏன்யா சொதப்புற இப்படி?
சொர்க்க வாசல் கதவு உனக்கு கிட்டத்தானே இருக்கு
உள்ள வந்து பாரு கிடைக்கும் தேவைப்பட்ட சரக்கு

எப்படி? எப்படி?
அது அப்படி அப்படி
எப்படி? எப்படி?
அது அப்படி அப்படி











































September 17, 2010

அப்டேட்ஸ்

கோழி அப்டேட்ஸ்

பொறிச்சது பிடிக்குமா வறுத்தது பிடிக்குமா என்றேன் கோழியிடம் இரண்டையும் கொறிப்பதுதான் பிடிக்கும் என்கிறது பொல்லாக்கோழி..

ஆடு அப்டேட்ஸ்

இப்போ எல்லாம் நீங்க எனக்கு புல் மட்டும்தான் போடறீங்க என்று கோபித்த ஆடிடம் நீ மட்டும் என்னவாம் எது கொடுத்தாலும் புழுக்கை மட்டும்தான் போடற அதான் என்றேன்..

மாடு அப்டேட்ஸ்

நீ எல்லாத்தையும்ம் முட்டுவியாமே என்னையும் முட்டிடாதே என்றேன் மாடிடம் சே சே நான் குட்டிச்சுவரையெல்லாம் முட்டுவதில்லை என்கிறது மாடு

ஈ அப்டேட்ஸ்

இந்த ரோட்டுல போற வர்றவங்க ஒருத்தர்விடாம ஒரு இடம் விடாம சுத்துறியே இது என்ன உங்க பாட்டன் போட்ட ரோடா இப்படி உரிமை எடுத்துகிற என்றேன் ஈயிடம் இல்லை இது ஈரோடென்றது ஈ

நாய் அப்டேட்ஸ்

எனக்கு எத்தனை கால்ன்னு கரெக்ட்டா சொல்லு என்ற நாயிடம் ஏன் நாலுதான் இதிலென்ன சந்தேகம் உனக்கு என்றேன் இல்லை ஒரு கால்தான் என்று இளித்தது தமிழ் படித்த நாயாய் இருக்கும்போல...

எலி அப்டேட்ஸ்

பொறியில் சிக்கிய எலியிடம் பார்த்தியா உன்னை எப்படி பொறி வச்சு பிடிச்சேன் என்றேன் பதிலுக்கு பார்த்தியா உன்னை எப்படி பொறி பிடிக்க வச்சேன் என்று சொல்லி சிரிக்கிறது எலி

குரங்கு அப்டேட்ஸ்

உனக்கும் எனக்கும் ஒரு விஷயத்தில் ஒத்துபோவதே இல்லை என்றது குரங்கு எப்படி என்றேன் உனக்கு வேடிக்கை பார்க்க பிடிக்கும் எனக்கு வேடிக்கை காட்ட பிடிக்கும் என்றது

கொசு அப்டேட்ஸ்

ஏன் இப்படி என் இரத்தத்தை உறிஞ்சி உறிஞ்சு குடிக்கிற என்றேன் கொசுவிடம் நீ சொறிஞ்சு சொறிஞ்சு சாகத்தான் என்றது கொசு...

(கீழே கோடிட்ட இடத்தை நிரப்புக)

யானை அப்டேட்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


குதிரை அப்டேட்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


புலி அப்டேட்ஸ்

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


August 7, 2010

கவிஞருடன் ஒருநாள் !!!!

கவிஞர் : சித்திரையிரவின்
                     நித்திரை கலைந்திருக்கிறேன்
                     நித்திரையில் வந்தவளால்
                     புண்பட்ட இதழ் இதமடைய
                     சூடான தேநீர் தருவாயா?
                     தந்தால் சொல்கிறேன்
                     நித்திரையில் வந்தவள்
                     யாரென்று!

கவிஞர் மனைவி : தூ காலங்காத்தாலே ஆரம்பிச்சுட்டீகளா ராஸா? எந்திரிச்சு பல்லு கூட விலக்கலை ஊத்தவாய்ல கவிதை சொல்ல ஆரம்பிச்சுட்டாரு...போங்க போயி பல் விலக்குங்க அப்புறம் டீ சாப்டலாம்...

கவிஞர் : ஏன் விலக்குகிறேன்
                     என்றே தெரியாமல் தினமும்
                     விலக்குகிறேன்
                     விரல் வலிக்க
                     விலக்கி விலக்கி
                     பார்த்தும் விலகவில்லை
                     பற்கள் இது என்ன மரபோ?

கவிஞரின் மனைவி : செருப்பு நேத்து ராத்திரி தின்ன பிரியாணி வாய்ல நின்னு ஊசிப்போய் இங்க கப்படிக்குது சீக்கிரம் பல்ல விலக்கிட்டு வாருமய்யா!

கவிஞர் : சூடான தேநீர் கேட்டேன்
                     சூடான்காரன் தேநீர்
                     கொடுக்கிறாய் ஏன்?
                     பாலில் தேநீர் உருவாக்கும்
                     வித்தை கற்கவில்லையா
                     பெண்ணே?

கவிஞரின் மனைவி : வெங்காயம் பால்காரனுக்கு மூணு மாச கடன் பாக்கி இதுல பால் டீ வேணுமாம்ல குடுத்தத குடிச்சுட்டு வேலைக்கு கிளம்ப வேண்டிய வேலைய பாருங்க ராஸா!!!!

கவிஞர் : ஒரு வாளி கடலில்
                     நான் குளிக்கும்
                     ஆனந்த குளியலே
                     ஒரு கவிதையாய்...
                     ஒருவேளை
                     ஆனந்த விகடனில்
                     வருமோ?

கவிஞரின் மனைவி : பிபிசியில வரும் பிச்சுபுடுவேன் பிச்சு குளிச்சுட்டு சீக்கிரம் வாங்க சாப்பாடு எடுத்து வச்சுருக்கேன் தின்னுட்டு கிளம்புங்க...

கவிஞர் : இலைச்சோறு
                     சாப்பிடாமல்
                     இளைத்துவிட்டேன்
                     என்கிறேன்
                     நீயோ பழைய
                     சோறு சாப்பிடுங்கள்
                     பருத்து விடுவீர்கள்
                     என்கிறாய் எந்த ஊர்
                     நியாயம் இது?

கவிஞரின் மனைவி : மீந்தது யார் தின்னுவா உங்களை தவிர ? என் ராசா இல்ல மதியானத்துக்கு சூடா கொடுத்தனுப்புறேன் சாப்பிட்டு கிளம்புங்க என் கண்ணுல்ல...

கவிஞர் : பொடி போட்டுக்கொண்டே
                     பொடிநடையாய்
                     நடக்கிறேன்
                     பொறம்போக்கு
                     வீட்ல சொல்லிட்டு
                     வந்துட்டியா?
                     என்கிறான் சைக்கிள்
                     ஓட்டும் பொடிப்பையன் !

மனைவியின் மனசாட்சி : பிசினாரி காசு கொடுத்து பஸ்ல போக மாட்டீங்களாக்கும்?

கவிஞர் : ஓடிபோய் பஸ் ஏறி
                     பிடிங்க துட்டு
                     கொடுங்க சீட்டு
                     என்றேன் ஓட்டுனரிடம்
                     யோவ் கண்ணாடிய சரியா
                     போடுமய்யா நடத்துனர்
                     பின்னாடி இருக்கார்
                     என்றவரிடம்
                     எப்படிச்சொல்வேன்
                     மனைவியின் பிக்கல்
                     தாங்காமல் மேலோகத்திற்க்கு
                     செல்ல சீட்டு கேட்டது
                     அவரிடம் தானென்று !

மனைவியின் மனசாட்சி : சார் அவருக்கு ஒரு சீட்டு கொடுத்துடுங்க சார்!!!!!

முற்றும்...




.

June 28, 2010

என் பூரிக்கட்டையே என் பூரிக்கட்டையே

எல்லாருக்கும் வணக்கம் இந்த பாடலை ஒரு முறை கேட்டுவிட்டு அந்த மெட்டிலே கீழுள்ள பாடல்களை வாசிச்சுட்டு எப்பிடி மேட்ச் ஆச்சா இல்லியான்னு சொல்லுங்க ஃப்ரண்ட்ஸ்....




வீடியோ ஓபன் ஆகதவங்க இங்க கிளிக்குங்க...


*******************************





என் பூரிக்கட்டையே என் பூரிக்கட்டையே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் கோதுமை என்று தெரிந்தும் நீ
ஏன் உருண்டையொன்று கேட்கிறாய்
வட்டங்கள் கோளங்கள் இரண்டில்
என்ன தரப்போகிறாய்
உருட்டுவதை உருட்டிவிட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்?


- கோதுமை

**********************************************************








என் தோசைக்கல்லே என் தோசைக்கல்லே
என்னை என்ன செய்யப்போகிறாய்?
நான் இட்லி மாவு என்று தெரிந்தும் நீ
ஏன் தோசை சுடப்போகிறாய்?
வெங்காய தோசை,மசால் தோசை இரண்டில்
என்ன சுடப்போகிறாய்
சுடுவதை சுட்டுவிட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்?


- இட்லி மாவு


*********************************************************








என் மிக்ஸியே என் மிக்ஸியே
என்னை என்ன செய்யப்போகிறாய்?
நான் தக்காளி என்று தெரிந்தும் நீ
ஏன் அரைக்கப்பார்க்கிறாய்?
தக்களிச்சட்னி, காரசட்னி இரண்டில்
என்ன அரைக்கப்போகிறாய்?
அரைப்பதை அரைத்துவிட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்?


- தக்காளி

*********************************************************



என் கொடநாடே என்கொடநாடே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் அரசியல்வாதியென்று தெரிந்தும் நீ
ஏன் என் கையில் சிக்கினாய்?
களிக்கஞ்சி , ஜெயில் கம்பி இரண்டில்
என்ன தரப்போகிறாய்?
தருவதை தந்துவிட்டு
ஏன் இன்னும் என்னிடமே இருக்கிறாய்?


- ஜெ.ஜெ.


*********************************************************




என் மட்டையே என் மட்டையே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் பந்தென்று தெரிந்தும் நீ
ஏன் அடிக்கப்பார்க்கிறாய்?
சிக்ஸர்கள்,பவுண்டரிகள் இரண்டில்
என்னத்தரப்போகிறாய்?
அடிப்பதை அடித்துவிட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்?


- பந்து

*********************************************************






என் போலீஸே என் போலீஸே
என்னை என்ன செய்யப்போகிறாய்?
நான் சாமானியன் என்று தெரிந்தும் நீ
ஏன் லஞ்சம் கேட்கிறாய்?
அபராதமா, அவமானமா இரண்டில்
என்னத்தரப்போகிறாய்?
வாங்குவதை வாங்கிவிட்டு 
ஏன் இன்னும் கேட்கிறாய்?


- சாமானியன்

*********************************************************












என் கீ போர்டே என் கீ போர்டே
என்னை என்ன செய்ய போகிறாய்?
நான் பிளாக்கர் என்று தெரிந்தும் நீ
ஏன் வேலைசெய்யமறுக்கிறாய்?
கவிதைகள், காமெடிகள் இரண்டில்
என்ன தரப்போகிறாய்?
எழுதியவை எழுதியபின்
ஏன் பப்ளிஷ் ஆக மறுக்கிறாய்?

- பிளாக்கர்

********************************************************




என் ஈழமே என் ஈழமே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நன் தமிழன் என்று தெரிந்தும் நீ
ஏன் உயிரை கேட்கிறாய்?
மண்ணா, மரணமா இரண்டில் 
எதை தரப்போகிறாய்?
தருவதை தந்துவிட்டு
ஏன் இன்னும் உயிர்பலிகள் கேட்கிறாய்?


- ஈழத்தமிழன் (மன்னிக்கவும்)

*********************************************************