வசந்த் Vs வசந்த்
மீண்டும் வித்யாசமா(ஆமா நீ எழுதுறதே வேஸ்ட் இதுல வித்யாசம் வேறையான்னு நீங்க சொல்றது கேக்குது)ஒரு சந்திப்பு.
சந்திக்கப்போவது இருவர், ஒருத்தர் கருத்து சொல்றேன்னு கருத்து கந்தசாமியா மாறிட்டு இருக்குற பிரபலமாகாத பதிவர் பிரியமுடன் வசந்தும் அவரோட நிழல் வசந்தும் காலாற வெளிய நடந்து போயிட்டு இருக்கும்போது இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள்...
ப்ரியமுடன் வசந்த்: என்னங்க நிழல் வசந்த் இத்தனை நாளா இல்லாமல் திடீர்ன்னு வெளியுலகைப்பார்க்கணும்ன்னு வந்துருக்கீங்க?
நிழல் வசந்த்: ஆமாப்பா உன்னோட இம்சைதாங்க முடியாமத்தான் கொஞ்சம் வெளியுலகம் பக்கம்...
ப்ரியமுடன் வசந்த்: நான் என்னய்யா இம்சை செஞ்சேன்?
நிழல் வசந்த்: வர வர நீ கருத்து கந்த சாமியா மாறிட்டு வர்ற...அது தாங்க முடியாமத்தான் உங்கிட்ட சில கேள்விகள் கேக்கலாம்ன்னு...
ப்ரியமுடன் வசந்த்:ஆமா சமூகத்துல நடக்குற சில விஷயங்களை எனக்குதெரிஞ்சத சில சொல்லலாமுன்னு...
நிழல் வசந்த்: போதும் நிப்பாட்டிக்கோ.....
ப்ரியமுடன் வசந்த் : ஏன்?
நிழல் வசந்த் : நீ சொல்றத யாரும் கேக்கப்போறாங்களா?
ப்ரியமுடன் வசந்த் : ஏன் கேக்க மாட்டாங்களா?
நிழல் வசந்த் : அம்மா அப்பா மனைவி சொல்றதையே கேக்காதவங்க வெட்டியா ப்லாக் எழுதுற நீ சொல்றதையா கேக்கப்போறாங்க . இதோ பாரு வசந்த் நான் இப்போ கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு.
ப்ரியமுடன் வசந்த் : கேளுப்பா..
நிழல் வசந்த் : உன்னோட பதிவுக்குவந்து இதுவரைக்கும் பிரபல பதிவர்கள் தினம் வந்து பின்னூட்டம் போடறாங்களா?
ப்ரியமுடன் வசந்த்:வர்றவங்க எல்லாமே பிரபலம் தானப்பா..
நிழல் வசந்த் : இந்த சமாளிப்பு எல்லாம் வேணாம்டி...சரிவுடு நான் கேக்குற சில சமுதாய கேள்விக்காச்சும் பதில் சொல்லு.
ப்ரியமுடன் வசந்த் : சரி ட்ரைப் பண்றேன்
நிழல் வசந்த் : கோவிலுக்கு போற பழக்கம் உண்டா?
ப்ரியமுடன் வசந்த்:ம்ம் உண்டு சாமி கும்பிட இல்லைன்னாலும் சைட்டடிக்கவாவது போறது உண்டு.
நிழல் வசந்த்: விளங்கும்...திருப்பதி,பழநிக்கெல்லாம் போயிருக்கியா?
ப்ரியமுடன் வசந்த்:ம்ம் போயிருக்கேன்.அத்தை பொண்ணு மஹேஷ் கூட ஒருதடவை (தப்பா நினைக்காதப்பா அவங்க அம்மா அப்பாவும் கூட வந்தாங்க)பழநிக்கு போயிருக்கேன்.அப்பறம் நித்யா கூட (இப்பயும் தப்பா நினைக்காதப்பா இது சின்ன அத்தை பொண்ணு ஒண்ணாவது படிக்கிற புள்ளை) அதுக்கு மொட்டையெடுக்க போயிருக்கேன்.
நிழல் வசந்த் : இதெல்லாம் நல்லா வக்கனையா பேசு...சரி பழநிக்கு போனியே அங்க அடிவாரத்துல இருந்து படியேறி நடந்து போனியா இல்ல மின்சார மலையேறி மூலமா போனியா?
ப்ரியமுடன் வசந்த்:விஞ்ச்லதாம்பா போனேன்
நிழல் வசந்த் : அந்த பக்கத்தூர் ரேணுகாவப்பாக்க மட்டும் தினமும் ஒருகிலோ மீட்டர் நடந்து போயி பல்ல இளிச்சுட்டு பாத்துட்டு வர்றியே இங்க மட்டும் என்ன இந்த கொஞ்ச தூரம் உன்னால படியேறி போக முடியாதாக்கும்.அதான் அந்த முருகன் அந்த ரேணுகாவ வேறொருத்தனுக்கு தாரை வார்த்து கொடுத்துட்டான்.
ப்ரியமுடன் வசந்த் : இப்போ எதுக்கு அவளப்பத்தி பேசுற? கேக்க வந்த கேள்விய மட்டும் கேளு.
நிழல் வசந்த் : மேல முருக கடவுளப்பாக்க முறைப்படி போனியா?
ப்ரியமுடன் வசந்த்: ஆமா தேங்காய்,பழம்,பத்தி,சூடன் எல்லாம் வாங்கி முறைப்படித்தான் போனேன்.
நிழல் வசந்த்: ந்தா பாரு செவுலு திரும்பிடும் நக்கலா?
ப்ரியமுடன் வசந்த் : இல்லப்பா..
நிழல் வசந்த் : கொன்னுடுவேன் உன்னைய ..அங்க கோவிலுக்கு சவுக்கு மரத்துல லைன் கட்டியிருக்குமே அதுல கால் வலிக்க வரிசையில நின்னுட்டு போனியா(அதாம்பா தர்ம தரிசனம்) இல்லை சிறப்புக்கட்டணம் செலுத்தி சீக்கிரம் சாமிய பாத்துட்டு வந்துட்டியா?
ப்ரியமுடன் வசந்த் : ஹேய் யாரப்பாத்து என்னா கேள்வி கேட்டுட்ட?
நிழல் வசந்த் : உன்னையத்தாண்டா வென்று....
ப்ரியமுடன் வசந்த் : சரி சரி பொது இடத்துல இது மாதிரி அசிங்கப்படுத்தாத,
நிழல் வசந்த் : அது அந்த பயமிருக்கட்டும்.
ப்ரியமுடன் வசந்த் : காசு குடுத்துதான் போனேன் இப்போ அதுக்கு என்ன?
நிழல் வசந்த்: சரி வெளியூருக்கு நீ போறேன்னு வச்சுக்க அங்க திடீர்ன்னு உனக்கு இயற்க்கை உபாதை வருது என்ன பண்ணுவ?
ப்ரியமுடன் வசந்த் : 1வந்துச்சுன்னா அந்த சுவத்துப்பக்கமா அடிச்சுட்டு வந்துடுவேன்.
நிழல் வசந்த் : நாய் மாதிரின்னு சொல்லு...
ப்ரியமுடன் வசந்த் : இதெல்லாம் கொஞ்சம் ஓவரு ஆமா.எல்லாரும் பண்றதத்தேன் நானும் பண்ணேன்.
நிழல் வசந்த் : 2 வந்துச்சுன்னா என்னா பண்ணுவ?
ப்ரியமுடன் வசந்த் : நகராட்சி கட்டண கழிப்பறைக்கு போவேன்.
நிழல் வசந்த்: காசு கொடுத்து கடைமைய கழிச்சுட்டு வந்துடுவ அப்படித்தான.
ப்ரியமுடன் வசந்த் : ஆமா.
நிழல் வசந்த் : அதுக்கும் முருகன காசு குடுத்து கடமையேன்னு கண்டுட்டு வர்றதுக்கும் என்ன வித்யாசம்ன்னு நீயே சொல்லுப்பா கருத்து கந்தசாமி.
ப்ரியமுடன் வசந்த் : அது வந்து அது வந்து ...
நிழல் வசந்த் : நேரமில்லைன்னு சொல்லக்கூடாது 200 கிலோ மீட்டர் தள்ளி வந்து முருகனப்பாக்குற உனக்கு ஒரு மணி நேரம் வெயிட் பண்ணி சாமிய பாக்க முடியலைல.நீதான் ரொம்ப யோசிப்பியாமே இதையும் யோசிச்சு ஒரு முடிவு பண்ணு . அப்பறம் கருத்து சொல்லு.மீண்டும் சந்திப்போம்...உங்கிட்ட இன்னும் நிறைய கேள்வி கேக்க வேண்டியிருக்கு.இப்போ வர்ட்டா......