Showing posts with label 50வது நாள் ஃப்ளாப். Show all posts
Showing posts with label 50வது நாள் ஃப்ளாப். Show all posts

June 22, 2010

நான் ஒரு விஜய் ரசிகன்...


 
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவான்னு ஈஸியா அஞ்சு வார்த்தையில சொல்லிட்டு பத்தோட பதினொன்னா நானும் உன்னோட ரசிகன்னு சொல்லிட்டு போக மனசு வரலை அதான் ஒரு சில வார்த்தைகள் இதோ....

உன்னுடைய தோட்டத்தில் வேண்டுமானால் ஐம்பது வித செடியில் ஐம்பது மலர்கள் பூத்திருக்கலாம் ஆனால் என் வீட்டு தோட்டத்தில் விஜய் என்னும் ஒரே செடியில் ஐம்பது மலர்கள் பூத்து குலுங்குகிறது...

ஒவ்வொரு தடவையும் நீ ஒவ்வொரு விதமாக பூக்கும்பொழுதும் என் ஒருவனை மட்டுமல்ல என் வீட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் சந்தோஷப்புன்னகை வரவழைத்துவிடுகிறாய்...

உன் செடியில் பூத்த அத்தனை மலர்களின் வாசத்தையும் நுகர்ந்தவன் என்கிற முறையில் சில மலர்களின் வாசனை அறவே பிடிக்காது போனாலும் அதையெடுத்து நுகர்ந்து பார்க்கமறுப்பதில்லை...உன் சில மலர்கள் நறுமணம் தரவில்லை என்பதற்க்காக என்றாவது ஒரு நாள் அனைவரும் வியக்கும் வாசனை தரப்போகும் மலரை தரப்போகும் செடியை அவ்வளவு சீக்கிரத்தில் பிடுங்கி எறிய மனமில்லை...

உன் ஒவ்வொரு மலர்வைப்பற்றிய அவதூறுகள் காற்றைவிட வேகமாக பரவியபொழுதும் அந்த அவதூறுகள் அதே வேகத்தில் காணாமலும் போகின்றன...நானும் அதை நீ பூத்திருக்கும் வனத்தின் வழியில் நடந்துபோகும்பொழுது இருக்கும் சிறு முட்களாக நினைத்து தூறப்போட்டுவிட்டு உன் அருகில் எப்பொழுதும்போல் வந்து செல்கிறேன்...

என் அம்மாவையும் சேர்த்து மொத்தம் என் தெருவிலிருக்கும் ஆறு அம்மாக்களுக்கும் நீ தான் மூத்தமகனாம் அவ்வளவு பிடிக்கிறது உன்னை அவர்களுக்கு தினமும் எப்படியும் என் வீட்டு வரவேற்பறை வரை ஐந்து முறையாவது வந்து செல்லும் உன்னை புறந்தள்ளி செல்ல மனசு வரலை...

உன்னால் மலர்ந்த மலர்களால் எந்த வித பயனில்லாத பொழுதும் மலரும் தருணத்தில் ஓராயிரம் கண்களை சந்தோஷமாய் காக்கவைத்து பூக்கின்ற அதிசிய செடியாகவே தெரிகிறாய்...முதல் பூ தந்த சந்தோஷம் வந்து போன சில நாட்களிலே உன்னில் மலரப்போகும் அடுத்த மலரைப்பற்றிய எதிர்ப்பார்ப்புகள் எக்கச்சக்கமாய் வந்து நிற்கிறது..போன ஐம்பதாவது மலர் வெகு மோசமான நறுமணத்தை தந்த பொழுது இனி உன் பக்கமே வரக்கூடாது என்ற என் முடிவு உன் அடுத்த மலரின் எதிர்பார்ப்பில் மாயமாகிறது எப்பொழுதும் போல...

உன் காதல் புன்னகை ஆண்களையே கவிழ்க்கும்பொழுது பெண்கள் சும்மாயிருப்பார்களா என்ன? மதுரையில் மதுரை மாவட்ட தலைவி உற்சாகமாய் கட் அவுட் வரை வந்து உன் மேல் இருக்கும் அன்பை வெளிப்படுத்தினார் இதுவும் கடந்து இன்னும் நிறைய கட் அவுட்களில் பெண்களை மலரச்செய்வாய் என்ற நம்பிக்கையிருக்கிறது...

இவ்வளவு சந்தோஷம் தரும் உனக்கு இன்று பிறந்தநாள் எப்பவும் போல் இதே மாதிரியே சந்தோஷமாய்  என் வீட்டில் இருக்கும் செடி போன்ற லட்சக்கணக்கான வீடுகளிலும் இருக்கும் செடிகளிலும் இவ்வாண்டும் அதி நறுமணம் தரும் மலர்கள் பூக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன்..




June 8, 2010

அஃறிணை வலைப்பதிவர்கள்....

அஃறிணை வலைப்பதிவர்கள் சிலரின் வலைத்தளங்கள் பற்றிய ஒரு பார்வை.....














May 31, 2010

ப்ளீஸ் ! இந்த புத்தகத்தை வாங்காதீங்க ...





என்ன நண்பர்களே அனைவரும் நலமா? என்னுடைய தொல்லையில்லாமல் நிம்மதியாக இருந்திருப்பீர்கள் விட்டுடுவோமா வந்திட்டோம்ல... இப்போ விடுமுறையில் நான் வாங்கிய புத்தகங்களை உங்களோடு பகிந்து கொள்கிறேன்.....

****************************************************************************************************************
என்னமோ மாதிரியிருக்கு இந்த வார்த்தை நம்மில் பெரும்பாலானோர் பயன் படுத்தும் வார்த்தையாகிப்போய்விட்டது...

இப்படித்தான் ஒருவர் மெர்க்குரி லைட் கம்பத்தின் வெளிச்சத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். என்ன சார் தேடுறீங்க என்றார் அங்கு வந்த மற்றொருவர்.அதற்கு முதலாமவர் கூறுகிறார் மோதிரம் கீழே விழுந்திடுச்சு அதைத்தான் தேடுறேன் என்றாராம் தொலைத்தவர்.அக்கரறையாக விசாரித்த இரண்டாமவர் எங்க தொலைச்சீங்க என்று கேட்க , வீட்டுகிட்ட என்றாராம் முதாலமவர் அதற்கு ஏன் இங்கே தேடுறீங்க என்றதற்க்கு இங்கேதான் வெளிச்சமாய் இருக்கிறது என்றாராம் தொலைத்தவர்

இப்படித்தான் என்னமோ மாதிரியிருக்கு மனசுகளும் அமைதியாக உட்கார்ந்து ஆழமாக கவனித்தால் ஓ... இதுதான் விஷயம் இதுக்குத்தான் இவ்வளவு நெருடலா இருந்ததா என்று தீர்வுக்கு வரலாம் வெளிச்சம் இருக்கிற இடமாகப்பார்த்து தேடுற இடமாகப்பார்த்து தேடுற மாதிரி கோயிலிலும் ஹோட்டலிலும் கடற்கரையிலும் அதை தேடினால் கடைசி வரை உங்கள் மோதிரம் கிடைக்கப்போவதில்லை....

என்பது தொடங்கி

நான் அசிங்கம் என்ற அபிப்ராயத்தோடு நீங்கள் இருப்பீர்களேயானால் உங்கள் சுற்றமும் உங்களைப்பற்றி அப்படித்தானே நினைக்கும் நீங்களே உங்களைப்பற்றி உங்கள் மனம் உடல் பற்றி தரக்குறைவாக நினைக்கும் பொழுது அடுத்தவர்கள் அப்படி நினப்பதில் ஆச்சரியம் என்ன?

உங்கள் அகம் புறம் இரண்டையும் அணு அணுவாக நீங்களே ரசியுங்கள் காதலியுங்கள் முதலில் நீங்கள் உங்களை கவுரவமாகப்பாருங்கள் ஆராதியுங்கள் இந்த உலகம் உங்களை எப்படி பார்க்கிறது என்பதன் ஆரம்ப புள்ளி உங்களிடம் இருந்துதான் தொடங்குகிறது என்று தனி மனித சுய கம்பீர விளக்கம்...

இன்னும் அன்பு செலுத்துதல்,பெறுதல்,வாழ்க்கைக்கு தேவையற்ற தாழ்வு மன்ப்பான்மையை களைதல்,எண்ணங்களை செயல்வடிவமாக்குதல்,புரிதல் பற்றியும் இன்னும் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை விஷயங்களை நீயா நானா கோபிநாத் அவர்கள் இந்த புத்தகத்தில் பகிர்ந்திருக்கின்றார்...

கண்டிப்பாக அழகான மனம் கொண்ட மனிதனாக மாற விரும்புபவர்கள் வாங்கிப்படிக்க வேண்டிய புத்தகம்....



ப்ளீஸ் ! இந்த புத்தகத்தை வாங்காதீங்க...

ஆசிரியர் : நீயா நானா கோபிநாத்

சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேசன்ஸ்
29/(7/3) 'E'பிளாக் முதல்தளம்,
மேட்லிசாலை,தி.நகர்,சென்னை - 600017

விலை : ரூ 60

புத்தகம் நியூ புக்லேண்டிலும் கிடைக்கிறது...

****************************************************************************

அடுத்ததாக ராஜ சுந்தர் ராஜன் என்பவரின் முகவீதி எனும் கவிதை தொகுப்பு...

மிகை எனும் தலைப்பில்

கேட்பதற்க்குத் துளைகள் போதும்
என்றாலும் செவி மடல்கள்
(அறுத்து விடலாமா?)

மானத்துக்கு ஆடை
அதில் ஆயிரத்தெட்டு வேலைப்பாடு.

கருக்கொண்ட பின்பும்
புணர்ச்சி

உண்டமட்டில் உயிர் தாங்காதோ
வீணையும் இசைக்கிறது...

பசித்துவம் எனும் தலைப்பில்

கன்று முட்டிப்
பால் விளைந்தது
கறவை மடியில்

பால் பறித்துப்
பணம் பண்ணின
மனித விரல்கள்

கன்றுக்காக மனமிரங்கிக்
கண்ணீர் விட வேண்டாம்

பால் தரும் வரைக்கும் பறிப்பதும்
பிறகு அப் பசுவையே கொன்று
கறி சமைப்பதும் கூட
நியாயம்தான் மனித வாழ்வில்
வயிற்றுப்பசி சாட்சியாக...

இப்படி இன்னும் நிறைய கவிதைகள் வேறொரு வடிவத்தில் கொட்டிக்கிடக்கின்றது..இழுத்து ஓங்கி கன்னத்தில் அறைகிறது இவரது கவிதைகள் கவிதையை சுவாசிப்பவர்கள் கண்டிப்பாக வாங்கிப்படிக்க வேண்டிய புத்தகம்

முக வீதி

ஆசிரியர் : ராஜ சுந்தர் ராஜன்

தமிழினி,342,டி.டி.கே சாலை

சென்னை -14

விலை : ரூ,70.00

நியூ புக்லேண்டிலும் கிடைக்கிறது...

*************************************************************************************

நீ முத்தமிட்ட
பிறகுதான்
நம்பத்தொடங்கினேன்

நீரில்
இருந்து மின்சாரம் எடுக்க முடியும்
என்பதை

---------

கேட்க திறனிழந்து
பியானோவுக்கு முன்
பீத்தோவன்

உனக்கு முன்
நான்

பியானோவிலிருந்து
வழியும் இசை
மெல்லச்சரியும்
உன் மேலாடை

--------

எதையோ நினைத்துச்
சிரித்தபடி
குளத்தில் நீ
முகம் கழுவுகிறாய்

உன் புன்னகையைப்
பொரிகளென நினைத்து
மொய்க்கின்றன
மீன்கள்

--------

என் கவிதையை விட்டு
ஓடிப்போன
வார்த்தையைத்
தேடியலைந்தேன்

மொட்டைமாடியில்
நீ பாடம் நடத்தும்
குழந்தைகளோடு உட்கார்ந்து
உன் உதடுகளையே
வேடிக்கை
பார்த்து கொண்டிருந்தது
அது


இப்படி காதல் சொட்ட சொட்ட கவிதைகளை அழகிய வண்ணப்படங்களுடன் கவிஞர்.பழநிபாரதி முத்தங்களின் பழக்கூடை எனும் புத்தகத்தில் நிறைய காதல் கவிதைகள் எழுதியிருக்கின்றார்...


முத்தங்களின் பழக்கூடை

ஆசிரியர் : பழநிபாரதி

விஜயா பதிப்பகம்

நியூ புக் லேண்டிலும் கிடைக்கிறது..

விலை ரூ . 70

*************************************************************************************

இன்னுமொரு முக்கிய விஷயம் சென்னையில் இருப்பவர்கள்
புத்தகங்கள் வாங்க டிஸ்கவரி புக் பேலஸ் சென்று வாங்குங்கள் 10% வரை பதிவர்களுக்கு டிஸ்கவுண்டும் கொடுக்கின்றார்கள்...

நான் சத்ரியன் அண்ணாவின் அறிமுகத்தின் பேரிலும் ஜமால் அண்ணா அறிமுகத்தின் பேரிலும் சென்றேன்.... அங்குதான் நம் பாரா அண்ணாவின் கருவேல நிழல் ,பரிசல் அண்ணாவின் டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும், கேபிள் சங்கரின் லெமன் ட்ரீயும் இரண்டு சொட்டு டக்கீலாவும் நிலா ரசிகனின் ஒரு வண்ணத்துப்பூச்சியின் கனவுகள் மற்றும் நண்பர் சகோதரர் தமிழ் அமுதனின் அறிமுகத்தின் பேரில் வாங்கிய ராஜீவ் காந்தி கொலை வழக்கு, இன்ன பிற நூல்களும் வாங்கினேன் அதன் உரிமையாளர் வேடியப்பன் மிகவும் அன்பாகவும் அழகாகவும் பழகுகிறார்...
விபரங்களுக்கு இவரின் இந்த தளத்திற்க்கு செல்லவும்...



*****************************************************************************************************************

இது மட்டுமல்ல இன்னும் நிறைய புத்தகங்கள் வாங்கி படித்தேன் அது பற்றிய இடுகைகளும்,
நண்பர்கள் சந்திப்பு...நன்றாக வாசிக்கவும் நண்பர்கள் சந்திப்புதான்... பதிவர் சந்திப்பு அல்ல ஏனென்றால் மூவர் சந்தித்தால் பதிவர் சந்திப்பா என்று கேட்கும் மிக நாகரீகமான மனிதர்கள் பதிவுலகில் இருக்கின்றனர்...நண்பர்கள் சந்திப்பும் அதன் புகைப்படங்களும் அது பற்றிய பதிவும் அடுத்த இடுகையில்...


*************************************************************************************

March 18, 2010

சவால் புதிர் - 1





ஒண்ணுக்கும் போலாம்
ரெண்டுக்கும் போலாம்
மூனுக்கு கூட போகலாம்
சுழியத்துக்கும் மதிப்பிருக்கு
சத்தமா பேச சொன்னாலும்

சத்தமா பேசுவாரு
சன்னமா பேச சொன்னாலும்
சன்னமா பேசுவாரு
சத்தம் போடாதேன்னா
கப்சிப்...


************************************************************************************
வேஷ்டிய


இழுத்து கட்டியிருந்தாலும்
எப்பவுமே மானம்
காத்துல பறக்குறது
ராத்திரி பகல்ன்ற
வித்யாசமே இல்லாம
இத்தனைக்கும்
இருக்குறது
வெளிச்சம் கூட வராத
அறைதான்...



************************************************************************************

அப்பன் தட்டுனாலும்

மகன் தட்டுனாலும்
ஒரே சத்தம்...
ஒரே நேரத்தில
பத்துபேர் அடிச்சாலும்
தாங்கிக்குவார்
ஆனா அழுவார்
பதிலுக்கு ஒரு அடிகூட
திருப்பியடிக்கத்தெரியாம
இவர் அழுற சத்தம்
ஊரையே கூட்டி
விருந்து வைக்கும்...

************************************************************************************

மூச்சுக்கு

இதமா இருக்கும்
மூச்சுவிடாதவருக்கு
கூட துணைக்கு போற தில்
இவருக்கு இருக்கு
மூச்சுக்கு மூச்சா
மாறப்போறவங்களுக்கு
மூச்சு சத்தம் மட்டுமே
கேட்குற நேரத்திலயும்
விடற மூச்சுக்கு சாட்சி...

************************************************************************************

முன்னாடி

பின்னாடி
ஓடுவார்
திடீர்ன்னு நிப்பார்
நிக்காம
சில நேரம்
சாவடிப்பார்
சத்தம் இல்லாம
வந்து சத்தமா சாகடிக்குறதும்
உண்டு
ஊர் ஊரா போவார்
சொந்த ஊர் கிடையாது
இவர் போகாத ஊர்
கிடையாது
டீக்கடைக்கும் போவார்
சாப்பாட்டுக்கடைக்கும் போவார்
காசிருக்கும்
சாப்பிடமாட்டார்
கூட வர்றவங்கள
நட்ட நடுக்காட்டுல விட்டுட்டு
போற வட்டக்கால்
கட்டண சத்திரக்காரர்.....

*************************************************************************************
டிஸ்கி : படத்துக்கும் புதிருக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லைன்னு நான் சொல்லித்தான் தெரியணுமா என்ன?

March 16, 2010

எழுத்தோசை தமிழரசி - 25


பதிவுலகம் பற்றிய என்னுடைய கேள்விகளுக்கு பிரபல பதிவர் கவிஞர் எழுத்தோசை தமிழரசியின் சுவையான பதிலகள்... இது ஒரு ஈ மெயில் நேர் காணல்

1.பதிவுலகத்திற்க்கு வராமல் இருந்திருந்தால் ஓய்வு நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்திருப்பீர்கள்?

தமிழரசி : இங்க பதிவில் எழுதுவதை நோட் புக்கில் எழுதிவைப்பேன்...எந்நேரமும் பாட்டு கேட்டுக் கொண்டே இருப்பேன்... நண்பர்களோடு சாட்டிங்...அப்பறம் துடைச்ச பொருளையே துடைப்பது இங்க இருக்கும் பொருளை அங்க வைப்பது அங்க இருப்பதை இங்க வைப்பது என உபயோகமான வேலைகள் தான்.....

2.நீங்கள் பதிவுலகத்தில் நுழைந்த பொழுது பதிவுலகம் இருந்த நிலைக்கும் இன்றைய பதிவுலக நிலைக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன?

தமிழரசி :காலத்தின் தன்மைக்கேற்ப தான் இதுவும் இயங்கிக் கொண்டிருக்கிறது...முன்ன இருந்த ஆர்வம் இப்ப இல்லையோ எனத் தோன்றுகிறது..புதியவர்கள் வருகை இருந்தாலும் பழைய நண்பர்கள் பெரும்பாலோர் எழுதுவதில்லை இருப்பவர்களும் நேரமின்மை சூழ்னிலை காரணமாக கணிசமாய் எழுதுவது குறைந்த மாதிரி உணர்கிறேன்.மற்றபடி இதில் வித்தியாசமாக நான் எதுவும் உணரவில்லை....

3.தங்களின் கவிதைக்கு முக்கியமான ஒருத்தர் இன்றுவரை வந்து பின்னூட்டம் இடவில்லையென்று வருந்தியது உண்டா?

தமிழரசி : கேள்வி கொஞ்சம் குழப்புகிறது..இன்றுவரை என்றால் அவர் முதல்ல இருந்தே பின்னுட்டம் இடவில்லை என்று தானே அர்த்தம்..அப்படி இருக்கும் பட்சத்தில் அதற்கு வருந்துவது முட்டாள் தனம்..தொடர்ந்து பின்னுட்டம் இட்டவர் இடவில்லை என்றால் வருந்தியிருப்பேன் வருந்தியிருக்கேன் கூட....

4.ஒவ்வொரு கவிதைக்குமான கரு தங்களுக்கு எப்பொழுது தோன்றும்?

தமிழரசி : பெரும்பாலும் என் கவிதைகள் சம்பவங்களே..பொதுவா என்னோடு பேசுவதை கூட நான் கவிதையாக்குவது வழக்கம்..

5.ஒரு சென்சிட்டிவான கவிதைஎழுதி பதிவிலிட்டதும் அதற்காக வரும் மற்றவர்களின் எதிர் கருத்துக்காக காம்ப்ரமைஸ் செய்து கொள்வீர்களா? இல்லை கோபம் வருமா? இல்லை கண்டு கொள்ளமாட்டீர்களா?

தமிழரசி : இப்படி எனக்கு நேரவில்லை.. நான் நல்லா எழுதுவதில்லை என்றும் ப்லாக் எழுதவேண்டாம் என்றும் அனானி ஒருத்தர் மட்டும் பின்னுட்டம் இட்டு இருந்தார்..இதற்காக கோபப்பட்டு எனக்காக என் நண்பர்கள் ப்ரியமுடன் வசந்த், உங்கள் ரங்கா ஆகியோர் அவரிடம் சண்டை போட்டு பேசி பின் நான் அந்த அனானியோடு சமாதானமாய் போய் பின் அவர் நண்பர் ஆனது மட்டும் நடந்திருக்கு..

6.கவிதை எழுத பிடிக்குமா? கவிதைகளை வாசிக்க பிடிக்குமா?

தமிழரசி : எழுத பிடிக்கும்.....எழுதியதை பின்னுட்டங்கள் பாராட்டிய பிறகு நிஜமாவே அவ்வளவு நல்லா இருக்கா என மீண்டும் ரசித்து படிக்க பிடிக்கும்..கவிதைகளை வாசிக்கவும் பிடிக்கும்...பெரும்பாலோனார் கவிதைகள் கண் கலங்க வைத்தும் உண்டு....

7.தங்கள் சம கால அளவில் பதிவுலகில் நுழைந்த பல பதிவர்கள் காணாமல் போய்விட்டனரே ஏன்?

தமிழரசி : அது அவர்கள் சூழ்னிலை....

8.தங்கள் சம கால பதிவர்கள் தவிர்த்து தற்பொழுது இருக்கும் பதிவுலகில் நிறைய புதியவர்கள் எழுதுகின்றனர் அவர்களில் தாங்கள் வியந்த புதியவர்கள் யார்? (எல்லோரும் என்று கூறி தப்பித்து கொள்ளகூடாது) ஏன் பிடிக்கும் அவர்களை?

தமிழரசி : ஹலோ 12 கேள்வியை எழுப்பியதும் நீங்க தானே அப்பு... நான் படித்தால் தானே?


9.ஏண்டா பதிவுலகம் வந்தோம் என்று என்றாவது எண்ணியதுண்டா?

தமிழரசி : இல்லை....பத்து பேர் அறிந்த என்னை என் எழுத்துக்களை இன்று நூறு ஆயிரம் பேர் என அறியவைத்த இந்த பதிவுலகை நான் அப்படி எண்ணியதில்லை

10.பதிவுலகம் ஒரு போதை என்ற பெரும்பான்மையானோரின் கருத்துக்கு தங்களின் பதில் என்ன?

தமிழரசி : உண்மை தான்...அது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தெளிந்துவிடும் என்பதும் உண்மையே...


11.கவிதை,,மட்டுமே எழுதி வரும் தங்களுக்கு பதிவுலகத்திலே இதுவரை யாரும் எழுதாத ஒரு புது விஷயம் எழுத வேண்டும் என்ற ஆசையுண்டா?அப்படியாயின் அதைப்பற்றி சில வார்த்தைகள்

தமிழரசி : ஆமா இதையே நான் மனசு வருந்தக்கூடாதுன்னு படிக்கிறாங்க இதில் இப்படி வேறயா? போங்கப்பா நல்லா கேக்கறீங்க கேள்வியை?


12.பொதுவாக தங்களின் நண்பர்களின் பதிவுக்கு மட்டும் சென்று பின்னூட்டமிடுகிறீர்கள் புதிய பதிவர்களின் பதிவுக்கு சென்று பின்னூட்டம் இடுவதில்லை என்ற தங்களின் மீது இருக்கும் குற்றச்சாட்டிற்க்கு நேரமில்லை என்பதை தவிர்த்து தங்களின் பதில் என்ன?

தமிழரசி : உண்மை தாங்க.. நேரமில்லை என்பது சில சமயங்கள் மட்டுமே...சோம்பேறித்தனம்,, பொறுமையின்மை என்பதே உண்மை...ஆமாம் இதுவுமா ஜனநாயக நாட்டில் குற்றச்சாட்டு...


13.தாங்கள் எழுதிய கவிதை போலவே அதாவது தங்கள் ஸ்டைலில் வேறொருவரும் அதே போன்ற கவிதை எழுதியிருப்பதாக எண்ணியதுண்டா?அப்படியிருந்தால் அந்த கவிதை பற்றி கூறவும்...

தமிழரசி : உண்டு...என் தோழியிடம் அவள் அவர் கணவருக்காக எழுதியதும் நான் என்னவனுக்காக எழுதியதும் எதிர்பாரமல் ஒரே நேரம் பதிவிட்ட போது .... இந்த சம்பவம் அவங்க என்னிடம் கோபித்ததும் உண்டு....இருப்பினும் இன்றளவும் நாங்கள் நல்ல தோழிகளாகவே இருப்பது தான்....


14.பதிவுலகம் வந்தபிறகு தங்களுக்கு நடந்த நன்மை தீமைகள் பற்றி சிறு குறிப்பு...

தமிழரசி : நன்மைகள் நிறைய நண்பர்கள் அறிவுருத்தல் அறிவுரைகள் உறவுகள் என் எழுத்துக்களில் முன்னேற்றம் இப்படி முற்றுப்புள்ளி வைக்க இயலாத நன்மைகள்,,,தீமைகள்? நினைவுக்கு வந்ததும் சொல்கிறேன்..


15.கவிதை எழுத கரு எப்படி தோணுகிறது?

தமிழரசி : சம்பவங்கள், தனிமையாக பயணிக்கும் போது கற்பனை, பார்வையில் நனைந்தவை,நண்பர்களோடு உரையாடும் போது இவைகளை எல்லாம் கவிதையாக்கிவிடுவேன்...


16.தற்பொழுது இருக்கும் பதிவுலகம் ஆரோக்கியமாக இருக்கிறதா?

தமிழரசி : இதைப் பற்றி கருத்து சொல்லும் அளவு இன்னும் நான் தெரிவும் தேர்வும் பெறவில்லை..


17.தாங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த பதிவுலக நண்பர்களுடனான நட்பு பற்றி எப்படி உணர்கிறீர்கள்?

தமிழரசி : குடும்பத்திலும் கிடைக்காத ஒற்றுமை உறவுகள் இங்கு கிடைத்திருக்கிறது...


18.தொடர்ந்து எந்த ஒரு லாப நோக்கும் இல்லாமல் முற்றிலும் பதிவர்களுக்காகவே இயங்கும் தமிழ்மணத்தினை பற்றி சில வார்த்தைகளும் தமிழ்மணத்தை அடுத்த கட்டத்திற்க்கு எடுத்து சென்று ஒரு இணைய பத்திரிக்கை போல் செயல் படுத்தலாம் என்ற கருத்துக்கு தங்களின் பதில்...

தமிழரசி : தமிழ் மணத்தில் இணைக்கும் பட்சத்தில் அனைவரும் அனைத்து பதிவுகளை படிக்க வழிவகுக்கிறது...பத்திரிக்கையாய் செயல் படுத்தலாம் என்ற எண்ணம் வரவேற்கதக்கது..மற்றும் தமிழ் மணம் பற்றி அதிகம் அறிந்துக் கொள்ளமுடியவில்லையே என்ற வருத்தம் இந்த கேள்வி உண்டாக்கிவிட்டது..


19.வாரிசு அரசியல் , வாரிசு சினிமா போன்றே தங்களுக்கு அடுத்து தங்கள் வாரிசுகளை பதிவுலகத்தில் நுழைக்கும் எண்ணம் இருக்கிறதா?

தமிழரசி : என்னை ஒழித்துக்கட்ட உள் நாட்டு சதிப்போல உள்வீட்டு சதி நடப்பதால் அப்படி எதுமில்லை யாருக்கும் ஆர்வமில்லை...

20.ரொம்ப நாளாக எழுதவேண்டும் என்று நினைத்து இன்று வரை எழுதாமலே இருக்கும் கவிதை என்று ஒன்று இருக்கிறதா?

தமிழரசி : எதுவுமில்லை...

21.இதுவரைக்கும் நீங்க வாசிச்சதிலயே பெஸ்ட் கவிதை எதுவென்றும் அது எழுதியவர் பற்றியும் சில வார்த்தைகள்..

தமிழரசி : இப்படி நிறைய இருப்பதால் எதையும் எவரையும் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை

22.கவிதையில் இருக்கும் வெண்பாக்கள் பற்றி எழுதும் ஆசையில்லியா?

தமிழரசி : மன்னிக்கவும் தமிழ் நூல்கள் படிக்கும் வாய்ப்பும் வாய்க்கவில்லை இலக்கணமும் அறியேன்..இப்படி இருக்க வெண்பா என்றால் என்ன? என உங்களையே கேட்கிறேன்....

23.கணினியில் எழுதப்பழகியபின் காகிதத்தில் எழுதுவது குறைந்துவிட்டதா?

தமிழரசி : ஆம்....மிகவும் குறைந்து விட்டது என சொல்லலாம்

24.இன்னும் சில ஆண்டுகள் கழித்து பதிவுலகம் எப்படியிருக்கும்?

தமிழரசி : நாளை? இதை அறியும் பக்குவம் வரவில்லை இப்படி இருக்க இன்னும் சில ஆண்டுகளை எப்படி என்னால் கணிக்கமுடியும்

25.புதிதாக எழுத வரும் பதிவர்களுக்கு தங்களின் அறிவுரை என்ன?

தமிழரசி : இதை இன்னும் புதிய பதிவராவே இருக்கும் என்னிடம் கேட்டால்......


இதுவரையிலும் கேட்ட கேள்விகள் அனைத்திற்க்கும் பொறுமையாக பதிலளித்த எழுத்தோசை தமிழரசி அவர்களுக்கு மிக்க நன்றிகள் தெரிவித்து கொண்டு அடுத்தடுத்து பிரபல பதிவர்களின் சுவையான கேள்வி பதில்கள் இடம்பெறும் என்பதை தெரிவித்து விடைபெறுவது உங்கள் வசந்த்....

December 17, 2009

சின்ன சின்னதாய் சில...! பார்ட் 2



நானும் என்னோட மனசாட்சியும் பேசுகிட்டே இருக்கும்போது மனசாட்சி சொல்லுது நான் சொல்லுற ஒவ்வொரு பொருளுக்கும் உன்னோட கவிதை சொல்லுன்னுச்சு அதைப்பற்றி பார்ப்போமா?

**************************************************************************************

மனசாட்சி : உன்னோட கண்ணைப்பத்தி கொஞ்சம் சொல்லேன்..

நான்:

உலகத்தை காட்டி என்னை
காட்ட மறந்தவன்...!


**************************************************************************************
மனசாட்சி: சரி நட்சத்திரம் பத்தி சொல்லேன்...

நான் :

நடை பழகும் நிலாவின்
காவல்காரன்...!


***************************************************************************************

மனசாட்சி : ஓஹ்...சரி சரி அந்த மேகம் பத்தி சொல்லேன்

நான் :

நகராத வானத்தின்
நகரும் ஆடை...!

**************************************************************************************

மனசாட்சி : ஆகா இப்டி ஒண்ணு இருக்கோ அப்போ மழைக்கு என்ன சொல்லுவ?

நான் :

மண்ணுக்கு வானம்
தந்த கொடை...!


****************************************************************************************

மனசாட்சி : அருமைப்பா சரி இந்த எறும்பு பத்தி கொஞ்சம் சொல்லேன்..

நான் :

சிக்னலில்லா
ட்ராஃபிக் ரூல்ஸின்
முன்னோடி...!

***************************************************************************************

மனசாட்சி : ஓஹ் சரி இந்த சேவல் பத்தி கொஞ்சம் சொல்லேன்

நான் :

பேட்டரியில்லா
அலாரம்...!

**************************************************************************************

மனசாட்சி : ஆமாவா? அப்போ இந்த கொலுசு பத்தி கொஞ்சம் சொல்லு

நான் :

அபாயம்,அழகு
இரண்டுக்குமான முன்னெச்சரிக்கை...!

*************************************************************************************

மனசாட்சி: ஏம்பா சரி விடு கோலம் பத்தி ரெண்டு வரி சொல்லு

நான்:

சிக்கிய
சிக்கல்...!

**************************************************************************************
மனசாட்சி : நெற்றியிலிடும் குங்குமம் பத்தி கொஞ்சம் சொல்லு...

நான் :

விதவையின்
ஏக்கம்...!


*************************************************************************************
மனசாட்சி : எல்லாத்துக்கும் விடை வச்சுருக்க காக்கா பத்தி சொல்லேன்

நான் :

சனீஸ்வர
பகவானின் ஸ்கூட்டர்...!

(சிரிக்ககூடாது ஆமா)


***************************************************************************************

மனசாட்சி : ஹ ஹ ஹா சரி சரி ஓட்டு பத்தி சொல்லேன்

நான் :

நோட்டுக்கு
மட்டும்...!

**************************************************************************************

மனசாட்சி : சரி கடைசியா காதலர்கள் பத்தி சொல்லு

நான் :

அழுகிய பழத்தில்
இருக்கும் வண்டுகள்...!


**************************************************************************************

November 9, 2009

கால் கிலோ காதல் என்ன விலை?


கால் கிலோ காதல்

என்ன விலை என்று

கடைகளில் கேட்டேன்

கிடைக்கவில்லை காதல்...


கால் வலிக்க பஸ் ஸ்டாப்பில் நின்றும்

கிடைக்கவில்லை காதல்..

பெட்ரோல் தீர மெட்ரோ பூரா சுத்தியும்

கிடைக்கவில்லை காதல்...


காற்றிடம் தெரியுமா என்று கேட்க

சுற்றிப்பார் என்று கூறி சுற்றலில் விட்டு

சுற்றி சென்றது..


சுற்றி சுற்றி கிறு கிறுத்து..

கிறுக்கனிடமும் கேட்க..

கிறுக்கிப்பார் என்று கிறுக்கினான்..

கிறுக்கி கிறுக்கி பார்த்தும்

சறுக்கி விழுந்தது தான் மிச்சம்...

கிடைக்கவில்லை காதல்...


விழுந்து எழுந்த பின் மீசையை பார்க்க

ஒட்டவில்லை மண்..

மண் ஒட்டாத மீசையையும் எடுத்து பார்த்தேன்..

ஒட்டவில்லை காதல்..


ஒட்டாத வாழ்த்து அட்டை ஒன்று அனுப்பினேன்

ஒட்டாததால் திரும்பியது..

திரும்பியதை திருப்பி அனுப்பினேன் ஒட்டாமலே

பதிவு தபாலில்...காதலுடன்..

அட்ரஸ் மாறி அண்டை தேசம்

சென்றுவிட்டது தவறுதலாய்...


அண்டை தேசத்துக்காரியா

அன்பாயிருக்கப்போகிறாள்?

அதுவும் திரும்பியது என்னிடம்

அப்பொழுதுதான் புரிந்தது

காதல் கடிதத்தின் மூலமாக ...

November 7, 2009

ஹலோ..(சண்டே எண்டெர்டெயின்மெண்ட்)

குமரன்:ட்ரிங்..ட்ரிங்..ட்ரிங்..

நாராயணன்:ஹலோ என்னா மாப்ள?எப்பிடியிருக்க?என்ன திடீர்ன்னு கால் எல்லாம் பண்ற அதிசியமா இருக்கு..

குமரன் : மாம்ஸ் எப்படியிருக்கீங்க நான் நல்லாயிருக்கேன்..திடீர்ன்னு உங்க ஞாபகம் வந்துச்சு அதான் கூப்ட்டேன்..

நாராயணன் : அப்பறம் வீட்ல மனைவிமார் குழந்தைகள் எல்லாம் எப்பிடியிருக்காங்க?

குமரன் : எல்லாம் நல்லாயிருக்காங்க மாம்ஸ் நாந்தான்..

நாராயணன் : என்னா மாப்பு நீதான்னு இழுக்குற..

குமரன் : இல்லை மாம்ஸ் அம்மா அப்பா நினைவாவே இருக்கு பாத்து ரொம்ப நாளாச்சு நாந்தான் சின்னவன் அவங்களைப்போயி பாக்கணும்ன்னு நினைக்கலை . அவங்க பெரியவங்கதானே என்னை வந்து பாக்கணும்ன்னு நினைக்கலை பாத்தீங்களா?

நாராயணன் : நீதான அவங்களோட சண்ட போட்டுட்டு போன நீதானே போய் பெரியவங்களை பார்க்கணும்..

குமரன் : அதுவுஞ்சரிதான்..இந்த கொஞ்ச நாள்ல என்னை பத்தி எதுவும் கேட்டாங்களா மாம்ஸ்..

நாராயணன் : ம்ம் கேப்பாங்க நீ என்ன பண்ற இப்போ எங்க இருக்கன்னும், உன்னோட குழந்தைகளைப்பத்தியும் விசாரிப்பாங்க..நீ பேசுறது சரியாவே கேக்கலை சிக்னல் நல்லா கிடைக்குதா?

குமரன் : என்ன மாம்ஸ் இப்பிடி சொல்லிட்டீங்க இந்த செல் போன் டவரே நான் இருக்குற இடத்துக்கு பக்கத்துல தான் இருக்கு பின்ன எப்பிடி கேக்காம போகும்..

நாராயணன் : இப்ப சரியா கேக்குது மாப்ள..அது சரி இப்ப நான் என்ன பண்ணனும்?

குமரன் : எனக்கு அப்பாவையும் அம்மாவையும் பாக்கணும் போல இருக்கு இப்ப நான் அவங்கள பாக்க வரலாமான்னு போன் பண்ணி கேட்டு சொல்றீங்களா?

நாராயணன் : சரிடா மாப்ள..கேட்டுட்டு உனக்கு போன் பண்றேன்..வச்சுடுறேன்..

குமரன் : மாத்தி எதுவும் சொல்லி திரும்பவும் பிரச்சனைய கிளப்பிடாத மாம்ஸ் சரியா உன்னோட கால்க்கு வெயிட் பண்ணிட்டு இருப்பேன்..

நாராயணன் : ஹ ஹ ஹா சரிடா..

நாரயணன் : ட்ரிங்..ட்ரிங்..ட்ரிங்..

பரமன் : ஹல்லோ..

நாராயணன் : ஹலோ மச்சான் நான் தான் நாராயணன் பேசுறேன்..

பரமன் : சொல்லு மச்சான் எப்படியிருக்க?

நாராயணன் : நான் நல்லாயிருக்கேன் மச்சான் அக்கா எப்படியிருக்கா?

பரமன் : அவளுக்கென்ன என் பாதி உசிரை எடுத்துட்டு நல்லாத்தான் கெளுத்தியாட்டமிருக்கா

நாராயணன் : மச்சான் இருந்தாலும் உன்னோட ஆட்டம் அடங்கமாட்டேன்னுது பாத்தியா?

பரமன் : உண்மையத்தன சொன்னேன்..அது சரி எதும் விஷயமில்லாம போன் பண்ண மாட்டியே இப்ப என்ன விஷயம் சொல்லு..

நாராயணன் : குமரன் போன் பண்ணுனான் மச்சான் அதான் உம்மவன்..உன்னையும் அக்காவையும் பாக்கணும் போல இருக்காம்..

பரமன் : அவந்தான் ரோஷக்காரனச்சே இப்ப என்னவாம் துரைக்கு பாசம்?

நாராயணன் : என்ன மச்சான் அவந்தான் சின்னப்பையன் நீங்களாவது விட்டுக்குடுத்து போகக்கூடாதா?

பரமன் : ம்ம் எதுக்கும் பெரியவன் கணேஷ கேட்டுட்டு சொல்றேன்...

நாராயணன் : இப்போ அவன் எங்க இருக்கான் ?

பரமன் : அவன் எங்கயாச்சும் எதுனாலும் மரத்தை ஆராய்ச்சி பண்றேன்னுட்டு ஊரெல்லாம் சுத்திட்டு இருப்பான்..

நாராயணன் : சரி மச்சான் கேட்டுட்டு எனக்கு போன் பண்ணு உம்மவன் வெயிட் பண்ணிட்டு இருக்கான்...

பரமன் : ட்ரிங்..ட்ரிங்..ட்ரிங்..

கணேஷ் : ஹலோ என்னப்பா இந்நேரத்துல கூப்டுற சாப்பாடுரெடியா?

பரமன் : தின்னிப்பயலே தின்றதுலயே இரு இப்பிடி தின்னு தின்னுதான் பானை மாதிரி வயித்த வச்சுட்டு திரியுற...

கணேஷ் : சீ போப்பா உனக்கு எப்பவுமே கிண்டல்தான்.. என்ன விஷயம்ன்னு சொல்லு?

பரமன் : எலேய் உன் தொம்பி நம்மளைப்பாக்கணுமாம் வரச்சொல்லவா?

கணேஷ் : என்னப்பா எங்கிட்ட போயி கேட்டுட்டு வரச்சொல்லுங்க..

பரமன் : என்னடா உனக்கு கோபமில்லியா?

கணேஷ் : ஏன் அவன் தான சண்டை போட்டுட்டு போனான் நானா சண்டை போட்டேன்..?

பரமன் : அதுசரி..சரிடா அப்ப அவன நாளைக்கு வரச்சொல்றேன் ஊர் ஊரா சுத்தாம நாளைக்காச்சும் வீட்ல இருடா..பின்ன திரும்பவும் சண்டை போட்டுட்டு போயிடப்போறான்..

கணேஷ் : சரி சரி..

பரமன் : ட்ரிங்...ட்ரிங்..

நாராயணன் : என்ன மச்சான் மூத்தவன்ட்ட பேசுனியா ?

பரமன் : பேசுனேன் நாளைக்கு வரச்சொல்லு மச்சான் அவன..வரும்போது பேரப்புள்ளைகளையும் கூட்டிட்டு வரச்சொல்லு..

நாராயணன் : சரி சரி தாத்தா பாசம் பொங்கி வழியுது போல வச்சுடுறேன்..

நாராயணன் : ட்ரிங் ட்ரிங்..

குமரன் : என்ன மாம்ஸ் என்ன சொன்னாரு அப்ஸ்?

நாராயணன் : ம்ம் எல்லாம் நல்ல விஷயம்தான் நாளைக்கு உன்னை வரச்சொன்னாரு க்குடவே புள்ளைகளையும் கூட்டிட்டு போ மாப்ள..

குமரன் : ரொம்ப சந்தோசம் மாம்ஸ் மாம்ஸ்னா அது நீதான் சண்டை போட்ட குடும்பத்தையும் ஒண்ணா சேத்து வச்சுட்டியே தாங்ஸ் மாம்ஸ்..நாளைக்கு அந்தப்பக்கம் நீ வந்துடாத..வந்தா கொன்ன்னே போடுவேன்...

நாராயணன் : ஹ ஹ ஹா....

(குமரன்=முருகன்,நாராயணன்=நாராயணன்,பரமன்=பரமசிவன்.கணேஷ்=விநாயகன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க)

August 7, 2009

கலைஞர் விருதுகள்



நம்ம பதிவுலகத்துல நாம கொடுக்குற பட்டாம்பூச்சி விருது ,இண்ட்ரெஸ்டிங் ப்லாக்கர் விருது மாதிரி அரசியல் உலகத்துல நம்ம கலைஞர் சில விருதுகள் கொடுக்குறார் பாருங்க முதல்ல

பச்சோந்தி விருது: அடிக்கடி கூட்டணி மாறுகிறவர்களுக்கு....


இந்த விருதை முதலில் வாங்க வருபவர் மருத்துவர் இராமதாஸ் (இவர் மாதிரி பதவிக்கும் பணத்துக்காகவும் அடிக்கடி கூட்டணி மாறுவதற்க்கு ஆளே இல்லைங்க)

இரண்டாவதாக வருபவர் வைகோ (பாவம் திங்கவும் முடியாம மெல்லவும் முடியாம திரியுறாருங்க)

மூன்றாவதாக வருபவர் டி.ஆர் (அப்போ அப்போ ல.தி.மு.க அப்பிடின்னு ஒருகட்சி வச்சுக்கிடுறார் திடீர்ன்னு தி.மு.க வுக்கு வந்துடுறார்)

அடுத்து இண்ட்ரெஸ்டிங் பொலிடிசியன் விருது: சிறந்த அரசியல் நடத்துபவர்களுக்கு?!




இந்த விருதுக்கு முதலில் தேர்வானவர்: திரு.விஜயகாந்த் (கூட்டணியே இல்லாம எல்லா தேர்தல்லயும் போட்டியிடுறதுக்கு)

அடுத்ததாக செல்வி. ஜெயலலிதா(இவங்க இல்லாட்டினா நான் எப்படி அரசியல் நடத்துறது?

அடுத்து அழகிரி (முதல் தடவையே பிரம்மாண்டமா ஜெயிச்சதுக்கு)

அடுத்தது ஸ்டாலின் (இவ்ளோ நாளா அமைதியா இருக்குறதுக்கு)

அடுத்து க.அன்பழகன் (பொறுமையா இருப்பதற்க்கு)

அடுத்து ஆற்காடு வீராசாமி(மின் பற்றாக்குறைக்கான கேள்விகளுக்கு திறமையா சமாளிச்சதுக்கு)


July 3, 2009

மனசு.....


மனசு.....





அடிக்காமலே
வலிக்கிறது

சிறகில்லாமல்
பறக்கிறது

காலில்லாமல்
குதிக்கிறது

மின்சாரமில்லாமல்
சுற்றுகிறது

மருந்தில்லாமல்
மயங்குகிறது

ஆனால்....

நீயில்லாமல்
வாழ மறுக்கிறது....


மனசு.......







June 27, 2009

ரீல் பஞ்சும்....ரியல் பஞ்சும்......

கிரிக்கெட் மைதானம்

வாழ்க்கை ஒரு வட்டம்டா. இங்கே ஜெயிக்கிறவன்

தோப்பான்.தோக்கிறவன் ஜெயிப்பான்




விமானம் :நான் இறங்கி போறவன் இல்லடா ஏறிப்போறவன்




புகைவண்டி:என் வழி தனி வழி சீண்டாத...





கால்குலேட்டர்:கூட்டி கழிச்சுப்பாரு கணக்கு சரியா வரும்



தும்மல் :நான் எப்போ வருவேன் எப்பிடி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனா வர வேண்டிய நேரத்துல கரக்ட்டா வருவேன்..




அந்தப்பறவை:இது எப்ப்டி இருக்கு



மின்சாரம் :சும்மா அதிருதுல்ல....





இதுவரைக்கும் ரீல் பஞ்ச் டயாலாக்

இது ரியல் பஞ்ச் டயலாக்

என்ன கொடும சரவணா?









May 2, 2009

சில பாடல்களும் அதன் விளக்கங்களும்

இவை அனைத்தும் நகைச்சுவைக்காகவே யாரையும் புண்படுத்துவன அல்ல


சில பாடல்களும் அதன் விளக்கங்களும்

1)நான் பாடும் மெளன ராகம் கேட்க்கவில்லையா
மெளன ராகம் எப்படிடா கேக்கும் புண்ணாக்கு?

2) ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
அடேங்கப்பா அவ்வளவு பெரிய கோப்பையா?

3) வானைத்தை பார்த்தேன், பூமியை பார்த்தேன்
முதல்ல ரோடைப்பாத்து போடா டேய் , போயி சேர்ந்திரப்போற ?

4) கங்கை யமுனை இங்குதான் சஙகமம்......
அது சரி, என் டீக்கடை முன்னாடி பாடுற பாட்டாடா இது ?

5) இது இரவா பகலா, நீ நிலவா கதிரா........
கண்ணாடியை எடுத்து போடுடா முதல்லே
..
6) மழை வருது , மழை வருது குடை கொண்டு வா.........
டேய் யார்ரா அது, வானிலை அறிவிப்பாளரை ஹீரோவா ப் போட்டது?

7)பொன்னான கைகள் புண்ணாகலாமா, உதவிக்கு வரலாமா........

உண் கருப்பான கன்னம் சிவப்பாகலாமா, செருப்படி படலாமா...
சம்மதம்தானா ?

8)என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா

அங்கே உயிர் போயிடிச்சுனு கத்தராங்க உனக்கு பாட்டா


9)காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்......

அறிவே இல்லைடா உனக்கு. தலைகீழா உக்காந்தா கடிதம் எழுதறது ?

10) அதாண்டா இதாண்டா அருணாசலம் நான்தாண்டா...........

சார், கொஞ்சம் மரியாதையா பேசுங்க....