Showing posts with label விடு கவிதை. Show all posts
Showing posts with label விடு கவிதை. Show all posts

October 30, 2010

மெகு..மெகு..லகி..மகி..மா..



எங்கள் வானம் எங்கள் பூமி
இப்பிரபஞ்சமே எங்களால் நிரம்பியது
நிரப்ப முடியா மடல் ஓட்டைகளையும்
நிரப்பி அவைகளுக்கு
தலையணையாய் 
நாங்கள்...

கனவுகள் வர
காரணகர்த்தா நாங்கள்
சுகத்தையும் துக்கத்தையும்
உணர்ந்து அனுபவிக்க
படைக்கப்பட்ட கிரீச் கிரீச்
நாங்கள்...

அதிர்வுகளால்
வானத்தையும் இதயத்தையும்
வலியில்லாமல்
உடைத்துப்போடும்
வலிமை எமக்குண்டு ...

உயிர் உருவாகும்போது
பிரியும்போதும் வாழும்போதும்
தேவைப்படும் காப்பீடு தேவையற்ற
களப்பணியாளர்கள்
நாங்கள்...

கோபமோ தாபமோ
எந்த உணர்வாயினும்
அதை நொடியில் 
எங்கள் வசமாய் மாற்றிவிடும்
மாற்று சக்தி நாங்கள்..

ஓராயிரம் நாளங்களுடையவனை 
படைத்தவனும் பிரம்மா!  
ஏழே ஏழு உறுப்புகளை
உடைய எம்மை 
படைத்தவனும் பிரம்மா!


எம்மை பிடிக்காதவர்கள் 
இவ்வுலகில் கிடையாது 
அப்படி பிடிக்காமல்
போயிருப்பின் அவர்கள்
உணரும் திறன் 
இழந்திருப்பவர்களாயிருக்கலாம்...

அந்தோ எம்மை உணர
முடியாமல் படைக்கப்பட்டவனே
இப்பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட
மிகச்சிறந்த
துரதிர்ஷ்டவாதி... 
அனுதாபங்கள் அவர்களுக்கு..

உணர்ந்து அனுபவிப்பவர்களுக்கு
நாங்கள்
மெகு மெகு லகி மகி மா....
மெகு மெகு மகி லகி மா....



,

March 1, 2010

விடுக(வி)தை (அ) பின்நவீனம்....ஹும்...


பொய்மன சட்டியால்
காற்றையன் கடவுள்
நுனிசிற்றான் கொய்த
தொட்டார் கொண்டு
சிற்றாரில்லா கூம்பு

சிக்கிய உயிர்நூல் நெய்து
வந்தவழி திரும்பா
வலியில்லாமல் வழிசெய்து
சக்கரப்பரப்பைடைந்து
ஆவியாய் அடங்கிபோய்

சுற்றிவரும் ஓலைப்பாயினின்று
சிற்றுளை வழியெ மூச்சடக்கி
முட்டிமோதி அமிழ்த்து
அதிலும் அடங்கிபோய்

கட்டியவனை தாண்ட
இருப்பில்லாத அளவில்
கோடில்லா துறவால்
துள்ளிப்பாய்ந்து உயிருக்கு உயிராய்

உயிர்கொடுத்த உயிருக்குள்
உயிராய் கசக்கி பிழிந்து
துகளாய் மண்டையாய்
வாயில் தேனாய்...!


October 14, 2009

நேற்றைக்கான இன்றைய விளக்கம்

நேற்றைய ஐலசாவின் விளக்கங்கள் தேவையில்லாதது என்றாலும் விளக்கமளிக்க வேண்டியது என் கடமை...இது என் பார்வையில் மட்டுமே அவரவர் பார்வைக்கு வேறாக தோன்றலாம் என விளக்கம் கூறிய கடல் புறா பாலா அவர்களுக்கு நன்றி....(என்னைக்கோ ஒரு நாளைக்குத்தான் நானே கவிதை மாதிரி ஒண்ணு எழுதுறேன் அதுவும் புரியாம போயிடக்கூடாதேன்ற ஆதங்கத்தில் எழுதிய இடுகை)


பூட்டிருக்கு ஏலேலோ ஐலசா...

சாவியில்லை ஏலேலோ ஐலசா...






காலில்லை ஏலேலோ ஐலசா...
காலால வந்தது ஏலேலோ ஐலசா...




சில வானமாய் ஏலேலோ ஐலசா...
சில இரத்தமாய் ஏலேலோ ஐலசா...




கல்யாணமாகலை ஏலேலோ ஐலசா...
தோதான ஆளிருக்கு ஏலேலோ ஐலசா...




ஒரு பிறவிதான் ஏலேலோ ஐலசா...
அதிலே பல மறுபிறவியுண்டு ஏலேலோ ஐலசா...




அடிக்கு அடி வாங்குறதுண்டு ஏலேலோ ஐலசா...
அடித்தால் அழுவதில்லை ஏலேலோ ஐலசா...




பொத்தாம்பொதுவாய் ஆறு உண்டு ஏலேலோ ஐலசா...
உள்ளாற ஒண்ணுமில்லை ஏலேலோ ஐலசா...




மானமிருக்கு ஏலேலோ ஐலசா...
மனமில்லை ஏலேலோ ஐலசா...

உப்பிலனா நார்நாராய் ஏலேலோ ஐலசா...
உப்புறதில்லை ஏலேலோ ஐலசா...

(மேல் உள்ள வரிகளுக்கு படங்கள் கிடைக்க வில்லை விளக்கம் இப்போ தேவையில்லைன்னு நினைக்கிறேன்)

உதவாத கையிருக்கு ஏலேலோ ஐலசா...
உதவுறதுக்கு வழியில்லை ஏலேலோ ஐலசா...




கர்வமிருக்கு ஏலேலோ ஐலசா...
ஆனா அது தலையிலில்லை ஏலேலோ ஐலசா...




மருத்துவம் பார்க்க ஜாதியிருக்கு ஏலேலோ ஐலசா...
மருந்துக்கும் ஜாதியிருக்கு ஏலேலோ ஐலசா...





பின் நவீனமிருக்கு ஏலேலோ ஐலசா...
முன் நவீனமிருக்கு ஏலேலோ ஐலசா...


இதுக்கப்புறமும் விடை சட்டைன்னு சொல்லித்தான் தெரியணுமா என்ன...நன்றி ...

October 13, 2009

ஏலேலோ ஐலசா...

ஏலேலோ ஐலசா ...ஏலேலோ ஐலசா...


பூட்டிருக்கு ஏலேலோ ஐலசா...
சாவியில்லை ஏலேலோ ஐலசா...

காலில்லை ஏலேலோ ஐலசா...
காலால வந்தது ஏலேலோ ஐலசா...

சில வானமாய் ஏலேலோ ஐலசா...
சில இரத்தமாய் ஏலேலோ ஐலசா...

கல்யாணமாகலை ஏலேலோ ஐலசா...
தோதான ஆளிருக்கு ஏலேலோ ஐலசா...

ஒரு பிறவிதான் ஏலேலோ ஐலசா...
அதிலே பல மறுபிறவியுண்டு ஏலேலோ ஐலசா...

அடிக்கு அடி வாங்குறதுண்டு ஏலேலோ ஐலசா...
அடித்தால் அழுவதில்லை ஏலேலோ ஐலசா...

பொத்தாம்பொதுவாய் ஆறு உண்டு ஏலேலோ ஐலசா...
உள்ளாற ஒண்ணுமில்லை ஏலேலோ ஐலசா...

மானமிருக்கு ஏலேலோ ஐலசா...
மனமில்லை ஏலேலோ ஐலசா...

உப்பிலனா நார்நாராய் ஏலேலோ ஐலசா...
உப்புறதில்லை ஏலேலோ ஐலசா...

உதவாத கையிருக்கு ஏலேலோ ஐலசா...
உதவுறதுக்கு வழியில்லை ஏலேலோ ஐலசா...

கர்வமிருக்கு ஏலேலோ ஐலசா...
ஆனா அது தலையிலில்லை ஏலேலோ ஐலசா...

மருத்துவம் பார்க்க ஜாதியிருக்கு ஏலேலோ ஐலசா...
மருந்துக்கும் ஜாதியிருக்கு ஏலேலோ ஐலசா...

பின் நவீனமிருக்கு ஏலேலோ ஐலசா...
முன் நவீனமிருக்கு ஏலேலோ ஐலசா...


விளக்கம் தர யார் வேண்டுமானாலும் அழைக்கப்படுகிறார்கள்