Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

January 23, 2012

மூடு பனி [U/A]



இருவரும் ஒருமுறை பக்கதிலிருக்கும் மலைப்பிரதேசம்  மூணார் சென்றிருந்தோம் குளிரானது காற்றுடன் கைகோர்த்திருந்த வேளை நாங்களும் கைகோர்த்தபடி பனிமூட்டத்தை ரசித்துக்கொண்டிருந்தோம். ''இவ்வளவு அருகில் நான் மூடுபனியை பார்த்ததில்லை'', என்றவளிடம் ''நான் கிட்டதட்ட மூடு பனியோடதான் வாழ்க்கையே நடத்திக்கொண்டிருக்கிறேன்'', என்றேன் அவளுக்கு விளங்கவில்லை என்னது என்றாள் . ''நீ என்கிட்ட இருக்கிறப்போ எனக்கு உன்னைத்தவிர வேறு எதுவுமே தெரிவதில்லை அதான் மூடுபனின்னு சொன்னேன்'', என்றதும் என் கன்னத்தில் மென் முத்தமிட்டாள். இன்னொரு அர்த்தமும் இருக்கிறது சொல்லவா என்றேன் ம் என்றவளிடம் ''நீ எப்பவும் குளிர்ச்சியா இருக்க, ஆனா இப்போகூட அந்த அந்த ஹிப் தெரியாம சேலை கட்டி எப்பவும் இழுத்துப்போர்த்திட்டு இருக்க இல்ல அதான் நீயொரு மூடுபனின்னு சொன்னேன்'', என்றதும் ச்சீய்ய் என்ற சின்ன சிணுங்கலுடன் ''மூடுடா பன்னி'' என்று நக்கலாய் கண்ணடித்து சிரிக்கிறாள் .

மற்றொரு நாள் அலுவலகத்தில் லஞ்ச் டைமில் தலைவியின் மொபைலுக்கு அழைத்து ''இன்றைக்கு நீ கொடுத்தனுப்பிய லஞ்ச் சூப்பர்டி என்று சொல்லிவிட்டு என்ன பண்ணிட்டு இருக்க?'' ,என்றேன். பதிலுக்கு,''சும்மாதாங்க கார்ட்டூன் பார்த்திட்டு இருக்கேன்'' என்றவளிடம், என்னடி இது ஒரு குழந்தைக்கு தாயாக போற இன்னும் கார்ட்டூன் பார்த்திட்டு இருக்க உனக்கு கொஞ்சம் கூட ஷையா இல்லியா?, என்றேன். இல்லியே என்றவள், ''நீங்க இந்த Pooh கார்ட்டூன் பார்த்தா அப்படி சொல்ல மாட்டீங்க  என்றாள். ஓஹ் அப்படியென்ன இருக்கிறது அந்த Pooh கார்ட்டூனிடம்?, என்றதும், அது அப்படியே உங்களைப்போலவே செம்ம க்யூட்ங்க அதானென்று இழுத்தாள்.... அடிப்பாவி என்னை ஒரு நிமிஷத்துல கார்ட்டூன் ஆக்கிட்டியேடி இரு இப்போவே பார்க்கிறேன் என்று இணையத்தில் Pooh கார்ட்டூன் தேடி கண்டுபிடித்து வீடியோவை ஓடவிட்டேன் வீடியோ ஓடிய சில நிமிடங்களில் நான் சிரித்த சிரிப்பில் அலுவலகமே அதிர்ச்சியடைந்ததென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். மாலை அலுவலகம் முடிந்ததும் ரெடிமேட் ஷோரூம் சென்று Pooh கார்ட்டூன் அணிந்திருந்த அதே கலரில் சட்டை இல்லையில்லை பிளவுஸ் பீஸ் வாங்கி சென்று அதே போல அணிந்து அவள் முன் நின்று இப்போ சொல் ஷையா இருக்கா இல்லியா என்றதும்தான் தாமதம் என்னை பார்த்ததும் குபீரென்று சிரித்துக்கொண்டே வெட்கத்தை வீடெங்கும் சிதறவிட்டுக்கொண்டிருந்தாள் நான் அதை சேகரித்துக்கொண்டிருந்தேன்.


இன்னொரு நாள் மாலை நேரம் வீட்டில் இருந்த சமயம் குளித்துமுடித்து மல்லிப்பூவும் வாசமுமாய் வீட்டை அதகளப்படுத்திக்கொண்டிருந்தாள் நான் ''மல்லிகமொட்டு மனசத்தொட்டு இழுக்குதடி மானே'' என்ற பாடலை பாட ஆரம்பித்திருந்தேன் அய்யடா ஆரம்பிச்சுட்டார்யா பாட்டு வாத்தியார் என்று நக்கலடித்தவளை இன்றைக்கு ஒரு வழி பண்ணிவிடுவது என்றபடி மேலும் பாட ஆரம்பித்திருந்தேன் இடையில் வரும் பாடி வச்சு பாடி வச்சு பதுக்கிவச்சதெல்லாம் காதலிக்க காதலிக்க வெளஞ்சு வந்ததென்னவென்று பாடியபடியே அவளைப்பார்த்து கண்ணடித்தேன் ச்சீய் என்றவள் இந்த கவிஞர்கள் சுத்த மோசம் எப்படிலாம் டபுள்மீன் பண்றாங்க என்றாள் எல்லாம் நம்மளைப்போன்றவர்களுக்காகத்தான் என்றதும் ம்க்கும் உங்களைப்போன்றவர்களுக்கென்று சொல்லுங்கள் என்றாள் அப்படியும் வைத்துக்கொள்ளலாம் என்றபடி பூவரசம் பூவுக்குள்ள இருப்பதென்ன சொல்லு பூப்பறிக்கும் மாப்பிள்ளைக்கு பசிக்குதம்மா நில்லு மேற்கொண்டு பாடலை பாட ஆரம்பிக்கவும், அதற்க்குமேல் அங்கு நின்றால் ஒரு வழி பண்ணிவிடுவேனென்று நினைத்திருப்பாள் போலும் ஒரே ஓட்டமாய் உள் அறைப்பக்கம் ஓடியவளை விரட்டிப்பிடித்தேன் அறையெங்கும் வளையல் மெட்டுச்சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது...

இன்னொரு சமயம் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் . வாக்குவாதம் முற்றி பிறந்தவீட்டுக்கு பெட்டியும் கையுமாக கிளம்ப ஆரம்பித்திருந்தாள்  . நிலைமையை சமாளிக்க இறுதியில் ''நீ சரியான கல்நெஞ்சக்காரி அதான் என்னை விட்டு போற இல்ல'', என்றேன். என் முகத்துக்கு நேரே வந்தவள் ''உங்க நெஞ்சைத்தொட்டு சொல்லுங்க நான் கல்நெஞ்சக்காரியா?'' என்றபடி கண்களில் கண்ணீர் மிதக்க கேட்டவளை நான் ஏன் என் நெஞ்சை தொட்டு சொல்லணும் ''நீயே தொட்டுப்பார்த்துக்கோ நீ கல் நெஞ்சுக்காரியா இல்லையாவென்று சிரிப்பை அடக்க முயன்று தோற்று சிரித்துவிட்டேன்''. புரிந்துகொண்டவள் ஆவேசத்துடன் உங்களை உங்களையெல்லாம் என்று சொல்லியபடி கையிலிருந்த பெட்டியை என் காலில் டொப்பென்று போட்டுவிட்டு இப்போ சொல்றேன்  ஆமா நான் கல் நெஞ்சக்காரிதான் என்றவளின் கோபம் பறந்து தாபமாகியிருந்தது.

நேற்று ஹேய் செல்லம் தலைவர் படம் பார்த்துட்டேன்டி சூப்பரா இருக்கு நாளைக்கு சண்டேதானே ரெண்டுபேரும் மேட்னி ஷோ போகலாம் ரெடியா இருடி என்றேன் தேவியிடம் பதிலுக்கு அவள் அடடா நீங்களாச்சு உங்க தலைவராச்சு உங்க தலைவர் படத்தை மனுஷி பார்ப்பாளா? அடுத்த மாசம் எங்க தலைவர் படம் ரிலீஸ் அப்போ போகலாம் சரியா என்றபடி எப்படி என் நோஸ் கட்? என்றாள், என்ன இப்படி டபக்கென்று தலைவரப்பற்றி தப்பாக சொல்லிவிட்டாள் என்று அவளின் நோஸ்கட்டை வைத்தே அவளுக்கு நோஸ்கட் கொடுக்கலாமென்று அவளிடம், இங்க பாரு தலைவர் படத்துல ஒரு அறிவு பூர்வமான கொஸ்டின் ஒன்னு இருக்கு அதுக்கு பதில் சொல்லிட்டா உன் தலைவர் படத்துக்கு ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ போகலாம் சரியா? என்றேன் சரி என்றவள் என்ன கொஸ்டின்? என்றாள் அது வந்து ஒன்னும் இல்ல கிஸ் அடிக்கும்போது மூக்கும் மூக்கும் இடிச்சுக்குமான்ற ஒரு சின்ன கேள்விதான் ஓஹ் என்று மோவாயில் கை வைத்து யோசித்தவள் நிறைய கமல் படத்துல கூட பார்த்திருக்கேன் ஆனா சரியா தெரியலியே என்றாள் நான் சொல்லவா என்றேன் ம்ம் கிட்ட வாயேன்டி என்றபடி ஒரு ஃப்ரெஞ்ச் கிஸ்ஸடித்ததும் ''இட்ச்சிக்கும்'' என்று ஈனஸ்வரத்தில் சொல்லினாள்... தலைவா யூ ஆர் கிரேட்..




நன்றி..

December 12, 2011

'காமன்' வெல்த் (U/A)



ஒரு நாள் இருவரும் வெளியிலிருக்கும் ஒரு பார்க்கில் சந்தித்து கொண்ட பொழுது அவள் கையிலிருக்கும் மச்சத்தை பார்த்துவிட்டு ஹைய்யோ இத எப்படி கவனிக்காமல் போனேன் எங்கே சொல் உன் உடம்பில் எத்தனை மச்சம் இருக்கிறதென்று? என்று அவளிடம் கேட்டேன் ஏன் கேட்கறடா என்று வினவியவளிடம் சும்மா ஒரு லவ் நாலேட்ஜிற்க்குத்தான் சொன்னால்தான் என்னவாம் என்றேன் சிணுங்கியபடியே மொத்தம் பத்து இருக்கிறது என்றாள் எங்கெல்லாம் என்றேன் ஆச தோச நீயே கண்டுபிடிச்சுக்கோ என்றாள் பாவம் நீயாகவே சொல்லிவிட்டாயென்றால் உனக்கு நல்லது இல்லையென்றால் எனக்கு நல்லது ம்ஹூம் சொல்லமாட்டேன் என்றாள் அப்படியா மேடம் அப்போ நம்ம மேரேஜிற்க்கு பிறகு நானே கண்டுபிடித்துக்கொள்கிறேன் ஆனால் ''நான் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு மச்சங்களையும் வரிசையாக இணைக்கும்படி என் உதட்டால் உன் உடம்பில் மச்சக்கோடு வரைவேன் பரவாயில்லையா?'' என்றேன் ஆஆங் அதெப்படி முடியாது என்றாள் அப்போ சொல் என்றேன் ம்ஹூம் என்றாள் அப்போ மச்சக்கோடு ஒகேவா என்றேன் ஒகே என்றாள் கீழ் உதட்டை கடித்தபடியே..

திருமணத்திற்க்கு பிறகொரு நாள் புத்தம் புதிய ஒரு சேலை அணிந்துகொண்டிருந்தவள் என்னருகில் வந்து இந்த காட்டன் சாரி எனக்கு நல்லா இருக்கா என்று வினவினாள் சூப்பரா இருக்கு ஆனால் ''உனக்கு கூந்தல் சேலைதான் கொள்ளையழகு'' என்றதும் கூந்தல் சேலையா? என்று ஆச்சரியத்தோடு வினவியவளிடம் அதான் கண்ணே நேற்றைக்கிரவில் ''உன் உடம்பெங்கும் விரவியிருந்த உன் கூந்தலைத்தான் சொன்னேன்'' என்றபடி அவளை கட்டியணைத்தேன் ச்சீய் சரியான காட்டான்டா நீ என்று என்னிடமிருந்து விடுவித்துக்கொண்டு ஓடியவளை கூந்தல் சேலை அணிவிக்க வெகு நேரமாயிருக்கவில்லை..

மறுநாள் , குளித்துமுடித்துவிட்டு ஈரம் சொட்ட சொட்ட தலையை சிலுப்பியபடி சிணுங்கல்முகத்துடன் என்னிடம் வந்தவள் உனக்கு கொஞ்சமாவது சென்ஸ் இருந்தா இப்படிலாம் பண்ணுவியா நீ என்றாள் என்ன சொல்ற நீ ? ம் ஆமாம் உடம்புல சுடு தண்ணீர் விழுந்ததும் ஒரே எரிச்சல் என்னவென்று பார்த்தால் உடம்பெல்லாம் உன் நகக்கீறல் முதலில் உன் நகத்தை வெட்டிவிட வேண்டும் என்றாள் சிணுங்கலுடனே ஓஹ் அதுவா? அது ''நேற்றைக்கு நாம் கலந்துகொண்ட காமன்வெல்த் கேம்ஸில் நீ வாங்கிய பரிசுகள்'' கண்ணே என்றதும் இன்னும் வெட்கப்பட்டு சிரித்தாள் ஈரக்கூந்தல் அள்ளிமுடித்தவளை இன்னொரு காமன்வெல்த் கேம்ஸிற்க்கு தயார் படுத்தினேன்.

இன்னொரு நாள் பகல் பொழுதில் என் மடியில் தலை வைத்து படித்திருந்தவள் என்னிடம், நான் சாரிகட்டுறது பிடிச்சிருக்கா இல்லை சுடிதார் போட்டிருப்பது பிடிச்சிருக்கா என்றாள் சாரிதான் என்றேன் ஏன் என்றாள் சேலையில்தான் உன் வனப்பான பிரதேசங்கள் என்னை இன்புறச்செய்கின்றன என்றபடி உனக்கெது சவுகர்யமாக இருக்கிறது என்று வினவினேன் சுடிதார் என்றாள் ஏன்? என்றதும் , ''உங்களோட ப்ராபர்டிஸ் எல்லாம் பத்திரமா பாதுகாப்பா இருக்க ஹெல்ப் பண்ணுதே '' என்று வெட்கியவளை அடிக்கள்ளி என்றபடி அவள் உதட்டில் மென் முத்தமிட விடுங்க பட்டப்பகலிலேவா என்றாள் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமென்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்றதும் சிவந்த அவள் முகம் இன்னும் சிவக்க ஆரம்பித்தது..

ஒரு நாள் மாலைப்பொழுதில் நான் புத்தகம் படித்துக்கொண்டிருக்கையில் என் நெற்றியில் முத்தமிட்டவள் நீங்க எனக்காக எழுதிய கவிதைகள் அத்தனையும் ஏன் அந்த கருப்பு வண்ணத்திலிருக்கும் டயரியில் எழுதினீர்கள் எல்லோரும் வெள்ளை டயரியில்தானே எழுதுவார்கள் என்றாள் அதுவா ''நீ இந்த விமானத்தில் இருக்கும் கருப்புப்பெட்டி கேள்விப்பட்டிருப்பாய் விமானம் விபத்துக்குள்ளானால் அந்தகருப்புப்பெட்டியிலிருக்கும் ரகசியத்தை அனைவரும் தெரிந்துகொள்வார்கள் அதுபோலவே நான் உன் மேல் வைத்திருக்கும் அத்தனை காதலையும் இந்த கருப்புடயரி ரகசியமாய் வைத்திருக்குமென்றேன்'' , உணர்ச்சிவசப்பட்டவள் மிக தைரியமாக ஃப்ரெஞ்ச் கிஸ் ஒன்று கொடுத்தபடி என்னை வாரியணைத்தாள்.

மங்கிய நீல நிற இரவு விளக்கில் இருவரும் ஆதாம் ஏவாளாய் இருக்கையில் சின்ன சின்னதாய் காதல்ஸ்வரங்களாய் அவளின் கொலுசும் வளையல்களும் சத்தங்கள் எழுப்பிக்கொண்டிருந்தன இந்த கொலுசும் வளையலும் ஏன் சத்தம் போடுகிறதென்று தெரியுமாவென்றேன் இல்லையே என்றாள் நான் உன்னிடம் சரணடைந்துவிட்டதை பார்த்த கேலிச்சிரிப்புதான் அது என்றேன் ஓஹ் அப்படியா என்றவளிடம், கலைந்து போடப்பட்ட ஆடைகளை காட்டி ' அவங்க நம்ம மேல கோபமா இருக்காங்கபோல' என்றேன் சிரித்தபடி ஏன் அப்படி சொல்றீங்க என்றாள் அவங்கள நம் விளையாட்டில் சேர்த்துக்கொள்ளவில்லையே அதுதான் காரணமாயிருக்கும் என்றதும் க்ளுக்கென்று சிரித்தவளும் நானும் மீண்டுமோர் கள்ளாட்டம் விளையாட ஆரம்பித்திருந்தோம்..



October 14, 2011

கற்பனை செய்யாமல் கட்டிலில் ஏறாதே..! (U/A)


நாயகன் கிஷோருக்கும், நாயகி ஜமுனாவுக்கும் இடையில் நடக்கும் காதல் உரையாடல்கள்..!


ஹேய் கிஷோர் என்னப்பா நீ இன்னிக்கு நம்ம கல்யாண நாள் , நான் இங்க நம்ம வீட்டுல ரொம்ப நேரமா தனியா உனக்காக காத்துக்கிட்டு இருக்கேன் நீயென்னடான்னா ஆடி அசைஞ்சு வர்ற என்னைப்பார்த்தா உனக்கு பாவமா தெரியலியான்னு ஜமுனா கேட்கவும் , ம்ஹ்ஹும் ''உன்னைப்பார்த்தா எனக்கு பேரழகியாத்தான் தெரியுது, பாவமா தெரியலியேன்னு'' கிஷோர் சொல்லவும் ஏற்கனவே கோபத்தில் இருந்த ஜமுனாவின் முகம் சிவந்தது , ஹைய்யோ உனக்கு வெட்கப்படவெல்லாம் தெரியுமா? என்று கிஷோர் சொன்னதும் நீ என்னை எவ்ளோ ஐஸ் வச்சாலும் இன்னிக்கு உனக்கு தரவேண்டிய வழக்கமான லஞ்சம் கிடையவே கிடையாது ஐ ஹேட் யூ என்றவாறே விறு விறுவென்று சமையலறை நோக்கி நடக்க ஆரம்பித்த ஜமுனாவை பின் தொடர்ந்தபடியே சென்ற கிஷோர் ''ஓஹ் பார்ட்டி நல்ல பார்ட்டிதான் ஓஹ் பியூட்டியின்னா பியூட்டிதான் பின்னழகை காட்டி சின்ன பையனைத்தான் வாட்டி செல்லும் மஞ்சள் நிலா என்னைக்கொல்லாதே'' என்ற இதயம் திரைப்படத்தில் வரும் பாடலை பாடவும் எவ்வளவு வேகமாக நடந்தாளோ அவ்வளவு வேகத்தில் திரும்ப வந்து அவனை கட்டிப்பிடித்துக்கொண்டாள் இந்த சின்ன சந்தோஷத்திற்க்கு பாட்டெல்லாம் படிக்க வச்சுட்டியே செல்லம் என்று கிஷோர் சொல்ல, அதுக்கு பரிசா இந்தா வச்சுக்கோ வழக்கமா தர்ற லஞ்சம்தான் ஆனா இது கொஞ்சம் ஃப்ரஞ்ச் மெத்தட் என்று ஜமுனா சொல்லவும் ஓஹ் ''ஆனா இது கையூட்டு கிடையாது வாயூட்டு'' ஹ ஹ ஹா என்று சிரிக்க ஆரம்பித்தான் கிஷோர் அதிகப்படியாக வெட்கப்பட்டுக்கொண்டிருந்தாள் ஜமுனா..!!!!

ஹாலில் உட்கார்ந்திருந்த கிஷோர் ஹேய் ஜம்  இன்னிக்கு ஜம்ம்னு இருக்க என்னடி விசேஷம் என்றான் ஒன்னுமில்லை என்றவளிடம் இங்க பாரு நான் உன்னோட பெயரை சுருக்கி எவ்ளோ அழகா ஜம் ஜம்ன்னு கூப்பிடறேன் நீ என்னோட பெயரை செல்லமா சுருக்கி கூப்பிட மாட்டியா? ஓஹ் அப்படியா? சரி கூப்பிடறேன் கிஷ் என்று கூப்பிட்டு முடிந்ததும் நாக்கை கடித்துக்கொண்டு அய்யய்யோ நீ ப்ளான் பண்ணித்தான் என்னை அப்படி கூப்பிடச்சொன்ன இல்ல நான் கூப்பிட மாட்டேன்ப்பா இப்போவே உன் இம்சை தாங்கலை அப்படி கூப்பிட ஆரம்பிச்சா எத்தனை தடவை கூப்பிட்டேனோ அத்தனை கிஷ் கொடுத்து என்னை ஒரு வழி பண்ணிடுவ ஆள விடு சாமி என்று ஜமுனா ஓடி ஒழிய சரி சரி இப்போ இரண்டு தடவை கூப்பிட்டதுக்கு என்ன பண்றது என்று கிஷோர் கிண்டல் பண்ணியபடியே அவளை நோக்கி சென்று அந்த இரண்டு கிஷ்சும் பெற்றுக்கொண்டான்..!

ஒரு விளையாட்டு இருக்குஅதில் நான் ஜெயித்தால் நான் சொல்லுவதெல்லாம் நீ கேட்க வேண்டும் நீ ஜெயித்தால் நீ சொல்வதெல்லாம் நான் கேட்ப்பேன் என்று கிஷோர் ஜமுனாவிடம் சொல்லவும் என்ன விளையாட்டு என்று ஆர்வமாக கேட்டவளிடம் ''உனக்கு பிடிச்ச Munch சாக்லேட் இருக்கு இல்லியா அதை அப்படியே முழுசா வாய்ல இருந்து வெளிய எடுக்காம கைகளால் தொடாம கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டு முடிக்கணும் ரெடியா?'' என்றான் சரி என்றவளிடம் லேடீஸ் ஃபர்ஸ்ட் என்றபடி ஒரு சாக்லேட் எடுத்து  கொடுத்தான் வாயில் சாக்லேட் வைத்து சாப்பிட ஆரம்பித்தவள் ஒரு லெவலுக்கு மேல் சாப்பிட இயலாமல் முழித்தவளிடம் கேன் ஐ ஹெல்ப் என்றான் ம்ம்ம் என்ற சத்தம் மட்டும் வந்தது சாக்லேட்டின் மறுமுனையை கிஷோர் சாப்பிட ஆரம்பிக்க சாக்லேட் தீர ஆரம்பித்திருந்தது இருவரின் உதடுகளும் இணையும் வேளையில் அவர்கள் முத்த சாக்லேட் சாப்பிட ஆரம்பித்திருந்தார்கள்..! 

அழகான விடியலுக்கு பின் நன்றாக தூங்கிக்கொண்டிருந்த ஜமுனாவின் அருகில் அமர்ந்து அவளின் முகத்தில் விழுந்திருந்த தலை முடியை ஒதுக்கிவிட்டபடி இருந்தான் கிஷோர் ஜமுனாவோ விசும்பியபடியே இருந்தாள் , அறையில் ''இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ'' பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது பாடலின் இடையில் ''மானிடப்பிறவி என்னடி மதிப்பு உன் கால் விரல் நகமாய் இருப்பதே சிறப்பு'' என்ற வரியோடு தானும் பாடினான் கிஷோர் அதெப்படி முடியும் என்று சிணுங்கலாய் கேட்டவளிடம் போர்வையை விலக்கி உன் கால்களைப்பார் என்றான் அவளின் இரண்டு கால்களின் பெருவிரல் நகங்களிலும் அவனுடைய சின்ன ஸ்டாம்ப் சைஸ் பாஸ்போர்ட் புகைப்படத்தை ஒட்டியிருந்தான் அதைப்பார்த்து ஹைய்யைய்யோ என்றபடியே ஏன் இது மாதிரிலாம் பண்ற கிஷோர் ப்போ எனக்கு வெட்கமா இருக்கு என்றபடி அவன் கன்னங்களில் செல்ல முத்தமிட்டு தோள்களில் சாய்ந்து கொண்டாள்..!

கிஷோர்  ஜமுனா இருவரும் ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்து அலை பாயுதேவில் வரும் சிநேகிதனே சிநேகிதனே பாடல் பார்த்துக்கொண்டிருந்தனர் அதில் ஷாலினி பாடும் பாடல் வரிகளை அவளிடம் சொல்லி விளக்கிக்கொண்டிருந்தவன் ''உப்பு மூட்டை சுமப்பேன்'' என்ற வரிகளை சொன்னதும் சிரிக்க ஆரம்பித்தாள் ஜமுனா என்னால முடியாதுப்பா நீ என்னை விட 30 கிலோ ஜாஸ்தி என்றாள், நீ சுமக்காட்டின்னா என்ன நான் உன்னை உப்பு மூட்டை சுமப்பேனே என்றான் பதிலுக்கு வீ வில் ட்ரை என்றான் ஜமுனாவைப்பார்த்து ம்ஹ்ஹும் மாட்டேன்ப்பா நீ தூக்கி கீழ டொம்முன்னு போட்டாலும் போட்ருவ, இல்லம்மா அப்டிலாம் பண்ண மாட்டேன் என்றவனின் ஆசைக்கு கட்டுப்பட்டவளை உப்பு மூட்டை சுமந்து நேராக பெட்ரூம் சென்றவன்  டொம்மென்று பெட்டில் விட்டான் செல்ஃபில் இருந்த ஆலிவ் ஆயிலை எடுத்தவனிடம் எதுக்கு இப்போ அது என்றாள், ''ஐவிரலிடுக்கில் ஆலிவ் எண்ணை பூசி சேவகம் செய்ய வேண்டும்'' என்று பாட ஆரம்பித்திருந்தான் அவள் ஹைய்யைய்யோ என்றபடி அவனிடமிருந்து விலகி ஓடி கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்தாள்...!


September 28, 2011

ப்ரிய சிறைகள்..!





 
ஒத்திகை..!


தற்சமயம் 
நமக்கான வாழ்க்கையை
நம் இருவர் மனங்களும்
ஒத்திகை
பார்த்துக்கொண்டிருக்கின்றன
நீயும் நானும் அதை வேடிக்கை
பார்த்துக்கொண்டிருக்கிறோம்..!

----------------------------


 

ப்ரிய சிறைகள்..!


உனக்கான ப்ரியங்களை
நான் என்னிடமிருந்து
விடுவித்துக்கொண்டிருக்கிறேன்
நீ மறுபடியும் உன்னிடம்
அவற்றை சிறைபிடித்துக்
கொண்டிருக்கிறாய்..!




----------------------------



டிட்டோ...!

உனக்கேற்றபடி நான் 
எனக்கேற்றபடி நீ
நமக்கேற்றபடி காதல்
முதற்க்கொண்டு 
அத்தனையும்..!


( Note : இவையும் இனி வருபவையும் என் Engagementற்க்கு பிறகான கவிதைகள் ) 

September 18, 2011

ஜோ'வென பெய்யும் மனமழை -1




என் மனதிற்க்கு
பிடித்தவர்கள்
நிறைய பேர்
இருக்கிறார்கள்
என் மனதை பிடித்தவள்
நீ மட்டும் தான்..!

----------------------------------------



அழகான வாழ்க்கை வண்டி
ஓட்டுவதற்கு தேவையான
அத்தனை விஷயங்களிலும்
நீ என் சாயலையும்
நான் உன் சாயலையும்
கொண்டிருக்கிறோம்..!

----------------------------------------



ஊரே எனக்கு
வைத்திருந்த பட்டத்தை
நீயும் சொன்னபோது
அளவில்லா ஆனந்தம்
காதல் மன்னனாம் நான்..!
----------------------------------------


செடி கொடிகளுக்கு
அருகே நின்று விடாதே
தேரென்று நினைத்து
அவை உன் மீது
படர்ந்துவிடலாம்..!

----------------------------------------



நீ இல்லாமலே
என்னைச்சுற்றி
லாவண்டர் வாசம்
வீசுகிறது அதுதான்
உன் வாசமாய் 
இருக்கக்கூடும்..!

----------------------------------------


உன்னை
கிளி மாதிரி
என்று சொல்லி
என்னை
ஜோசியக்காரன்
ஆக்கிவிட்டார்கள்
என் அம்மா..!

----------------------------------------


நீ பேசும்பொழுது
குயில்களும்
உடன் கூவுவது
எனக்கென்னவோ
குயில்களின்
பின்னணி இசையில்
நீ பாடுவது போன்றுதான்
இருக்கிறது..!

----------------------------------------

August 5, 2011

ஞாயிறு பொழுதும் உன்னோடு..! (U/A)



அலாரம் இல்லாத ஞாயிறில் நீண்ட தூக்கம் நாயகனது பழக்கம் , ஆனால் திருமணத்திற்கு பிறகு மிருதுளாவோடான ஞாயிறுகள் சுவாரஸ்யம் மிகுந்தவைகளாக இருப்பதினால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உற்சாகத்தோடு எழும்பிவிடுகிறான் , ஒரு ஞாயிறு நாயகனுக்கும் மிருதுளாவுக்கும் நடக்கும் சுவாரஸ்யங்களின் கற்பனைகள் இதோ.. கொஞ்சம் அப்படி இப்படின்னு இருக்கும் ரசிகர்களே டேக் கேர் ..!!!!

*******************************************************

காலை 7 மணி 

ஹேய் மிர்து இங்க வாயேன் என்றேன் என்ன என்று கொஞ்சலாக வினவியவளிடம், இல்ல இன்னிக்கு சண்டே தெரியும்ல என்றேன் கண் சிமிட்டியபடி , தெரியும் தெரியும் அதான் பயமா இருக்கு என்றபடி ''வெட்கத்தை முக முழுக்காட்சியாக ரிலீஸ் செய்கிறாள்''. ம்ம் பின்ன ஆக வேண்டியதை பார்ப்போமே என்றேன் ஸ்ஸ்ஸப்பா இன்னிக்கு உன்னோட சமையலை சாப்பிடணும்ன்னு விதி வேற வழி ஆரம்பிடா ஆரம்பி இன்று உன்னுடைய மெனுவில் காலை டிஃபன் என்ன என்று வினவியவளிடம் ''எனக்கு டிஃபன் நீதான்'',  உனக்கு சூடா நெய் தோசையும் , தக்காளி சட்னியும் , தேங்காய் சட்னியும் , தால் பவுடரும் வித் காஃபி ஒகேவா மிர்து? என்றதும் '' என் டிஃபன் ஒகே ஆனா உனக்கு சொன்ன டிஃபன் கிடைக்காது கிடைக்காது முதுகுல டின்னுதான் கிடைக்கும்'', ஆமா ஆளப்பார் ஆள, ''சரி விடு லஞ்சா இருந்துட்டுப்போ'' என்றேன்,  'அட ராமா' என்று தலையில் கைவத்தவளிடம் ம்ஹ்ஹும் 'அட காமா' ன்னு சொல்லிப்பார் அட்டகாசமா இருக்கும் என்றதும்  ரைட்டு இன்னிக்கு மதியம் டிவிடில 'வாரணம் ஆயிரம்' படம் பார்க்கலாம்ன்னு இருந்தேன் நீ 'தோரணம் ஆயிரம் 'அப்படின்ற நடக்கட்டும் நடக்கட்டும் மகனே உன் சமர்த்து என்று வெட்கசிரிப்பு சிரிக்கிறாள்.

காலை 10 மணி

நான் சோஃபாவின் ஹேண்டில் பக்கம்  அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தேன் , அருகில் வந்து அமர்ந்த மிருதுளா ''தோசையில என்னடா கலந்த ஒரே கிறக்கமா இருக்கு'', என்றபடி என் மடியில் தலைவைத்து கால் நீட்டி சொகுசாக டிவி பார்த்தவளிடம் ஒன்னும் இல்ல ''கொஞ்சம் அன்பு அதிகமா கலந்திட்டேன் போல'' அதான் என்றேன். டிவியில் சாமி திரைப்படத்தில் விக்ரம் த்ரிஷா நடித்த இவன்தானா என்ற பாடல் ஓடிக்கொண்டிருந்தது விக்ரம் திரிஷா தக்காளிபழம் சீன் வந்ததும் 'அய்யய்யோ' என்றேன் , ஏண்டா என்னாச்சு என்று கேட்டவளிடம் , ''இன்னிக்கு தக்காளி சட்னி வைக்கிறப்போ இந்த சீனை மிஸ் பண்ணிட்டேனே மிருதுளா மிஸ் பண்ணிட்டேனே'', என்றதும் 'ச்சீய்ய் எப்போ பாரு இதே நினைப்புத்தானா உனக்கு' சரி சரி இன்னிக்கு லஞ்ச் டின்னர் எதுலயுமே தக்காளி வாசமே இருக்கக்கூடாது புரிஞ்சதா? ரைட்டு தக்காளி இல்லைனா என்ன ட்ரம்ஸ்டிக் சேர்த்திடறேன் என்றதும்தான் தாமதம் என்ன நினைத்தாளோ தெரியவில்லை ஓடிச்சென்று ஃப்ரிட்ஜில் இருக்கும் ட்ரம்ஸ்டிக் அத்தனையையும் டஸ்ட் பின்னில் போட்டுவிட்டு ''இப்போ என்ன பண்ணுவ இப்போ என்ன பண்ணுவ''  என்று வக்கனை காட்டுகிறாள்..!

பிற்பகல் 1 மணி

'மிருதுளா லஞ்ச் ரெடி சாப்பிடலாமா'' என்றேன் ம்ம் ஒரு மணி நேரத்துல குளிச்சிட்டு வந்திடறேன் என்றாள் ஏண்டி குளிக்கிறதுக்கு ஒரு மணி நேரம் அப்படின்றது உனக்கே ஓவரா இல்லையா? என்றேன், என்னையென்ன உன்னை மாதிரி நினைச்சியா ''தேவதையாக்கும் நான்'' ஒரு மணி நேரம் வெயிட் பண்ண முடிஞ்சா வெயிட் பண்ணு இல்லைனா துன்னுட்டு குப்புறபடுத்து தூங்கிடு ஐ டோண்ட் கேர்ன்னு சாதாரணமா சொன்னவளின் தந்திரம் வெகுவாகவே புரிந்தது , என்னை இந்த பகலில் தூங்க வைத்திட வேண்டுமென்ற அவளின் ஆசையை தகர்க்கவும் எனக்கும் தெரியுமென்பது அவளுக்கெப்படி தெரியும், இன்று இவள் என்னதான் செய்கிறாள் என்று பார்ப்போமே என்று நினைத்தபடி தூங்குவது போல் பாசாங்கு செய்தேன், உடை மாற்றிவிட்டு வந்தவள் என்னை நோக்கி வரும் சத்தம் கேட்கிறது கொரட்டை சத்தத்தை அதிகப்படுத்தினேன் கிட்ட வந்தவள்  என் தலையை கோதியபடி 'சமர்த்து தூங்கிட்டான்' என்று குதூகளித்தவளை, அப்படிலாம் நினைச்சுடாத என்றபடி எழுந்து வா சாப்பிடலாம் என்று அழைத்து சென்று திகட்ட திகட்ட அத்தனை உணவுகளை பரிமாறினேன். 'நீ சாப்பிட்டயா? என்று கேட்டவளிடம், இல்லை ''நீ சாப்பிடாம நான் எப்படி சாப்பிடறதாம்'' என்றதும் நான் எதிர்பார்த்தபடியே 'லஞ்சாக ப்ரஞ்சு முத்தம் கிடைத்தது'.

மாலை 6 மணி

வா வெளில ஷாப்பிங் போகலாம் என்று அவளை பைக்கில் அழைத்து சென்றேன் அவள் நிறத்துக்கேற்ற இளஞ்சிவப்பு நிற சுடிதார் அணிந்திருந்தாள் என் ட்ரெஸ் எப்படிடா இருக்கு என்றவளிடம் , 'இப்போ நீ தேவதை', 'இந்த பைக் தேர்' , 'நான் தேரோட்டுபவன் ', ''தேவதையுலா வருகிறாள் வழிவிடுங்கள் என்றபடிதான் ஹாரன் ஒலிக்கிறது'', ''சாலைகளின் ஓரத்தில் இருக்கும் ஒவ்வொரு பூக்களும் உன்னிடம் அழகுபிச்சையேந்தி கையேந்தி நிற்கின்றன'' , ''செல்லும் வழியெங்குமிருக்கும் பாதைகளின் பெயர்களெல்லாம் தேவதைவீதி 1, தேவதை வீதி 2,  தேவதை வீதி 3 என்றபடி பெயர் மாறுகின்றன'' , ''துணிக்கடை பொம்மைகள் சந்தோஷப்பட்டுக்கொள்கின்றன தனக்கு பதில் இன்னொருத்தி வந்துவிட்டாளென்று'' , உன் வாசம் கலந்த காற்று ஊரெங்கும் உன் அழகை பரப்பி ''உன் அழகுபரப்பு செயலாளர் தான் தான் என்று நிரூபிக்கிறது'' , இப்படி சொல்லி அவளின் அத்தனை வெட்கத்தையும் ஒரே நாளில் அனுபவித்தேன். வீட்டிற்கு வா உனக்கு இருக்கு மவனே என்றவளிடம் அதான் எனக்கு தெரியுமே தெரியுமே என்றதும் ''எமகாதகன்டா நீ'', என்றவளிடம் இல்லை ''காமகாதகன்'' என்றதும் தொடையில் நறுக்கென்று கிள்ளிவிட்டாள் ..! 




இரவு 9 மணி

''மணி 9 ஆச்சு சரி வா டின்னர் சாப்பிடலாம்'', என்றேன். டின்னர்தான் வெளியில சாப்பிட்டோமே இன்னும் என்ன டின்னர் ? ஹும் அது என்ன டின்னர் அதுல ''நிறமில்ல சுவையில்ல, திடமும் இல்ல'',  இப்போ நான் கொடுக்கிற டின்னர்ல '' நிறம் நீ இருக்க , சுவையாய் முத்தம் இருக்க, திடமாய் நான் இருக்க'', 'இனிக்க இனிக்க பசியாறலாம் வா',  என்றேன் . 'எப்படிடா இப்படி எல்லாத்தையும் கவிதையாவே பேசற எனக்கு உன்னைப்பார்க்க பார்க்க பொறாமையா இருக்கு உனக்காக நான் ஒன்னுமே செய்யலை சொல்லலைன்றதும் வருத்தமா இருக்கு, என்றவளின் தலை கோதி அட லூசு ''திருமண வாழ்க்கையில் யாராவது கணவன் மனைவி இரண்டு பேரில் யாராவது ஒருத்தர்தான் ரசிகனாக இருக்க முடியும்'', இப்போ இங்க நமக்குள்ள நடக்குற திருமண வாழ்க்கையில ''நான் உன்னோட ரசிகன் எப்பவும் உன்னை மட்டுமே ரசிக்கும் ரசிகன்'', என்று விளக்கமளித்ததுதான் தாமதம் கையைப்பிடித்து விறு விறுவென்று இழுத்துச்சென்று 'டின்னர்  பரிமாறினாள்' ..


திரும்பவும் வாசிக்கணும்னா இதோ இந்த பாடலை கேட்டபடியே வாசியுங்கள் Enjoy The Holiday..!








May 28, 2011

ரதி வீதி - பாகம் 1


அழகி, பேரழகி, தேவதை, நிலா இந்த வார்த்தைகளுக்கு பொருந்திய உன்னுடைய அழகை மேற்க்கொண்டு விவரிக்க வார்த்தைகளற்று திரியும் எனக்கும் நீ சரியாய் பொருந்திப்போனதுதான் ஆச்சரியம்.

குட்டிக்குட்டி பெண் குழந்தைகளை தன் மடியில் அமர்த்தி தன்னுடைய இறக்கையிலிருந்து ஒரு இறகை பிய்த்து குழந்தைகளுக்கு தந்து அவர்களையும் தேவதைகளாய் ஆக்குகிறாள் தேவதையொருத்தி, என்னை உன் கையிலிருந்து கோடாரி பெற்றுக்கொள்ளும் விறகுக்காரனாவது ஆக்கிவிடு என்ற மாத்திரத்தில் தன்னுடைய இறகால் வருடிக்கொடுத்து என்னை தேவதை தாசனாக்கிவிட்டாள்.

காய்ச்சல் இருமல் தும்மல் போன்ற உணர்வுகளைப்போல் உன்னைப் பார்க்கும்பொழுதெல்லாம் வரும் ஒருவித மயக்க உணர்வுக்கு பெயர் தேடிக்கொண்டிருக்கிறேன் கிடைத்தபாடில்லை , நீயே சொல்லிவிடு என்றால் ஐ லைக் யூ என்று சொல்லிப்போகிறாய்.

கவிதையில் உவமை சம்மனமிட்டு அமர்ந்து கவிதையோடு சேர்ந்து தானும் அழகாவது போல் உன் முகத்திலிருக்கும் மூக்குத்தியும் உன்னோடு சேர்ந்து அழகாகிறது.

பிரிக்க முடியாதது எதுவென்ற உன் திருவிளையாடல் கேள்விக்கு உன்னையும் அழகையும் என்ற பதில் சொல்லி உன்னிடம் ஆயிரம் முத்தங்கள் வாங்கலாமென்று பார்த்தால் நெற்றியில் ஒற்றை முத்தமிட்டுவிட்டு நெற்றியிலிட்டாலும் முத்தம் முத்தமே  என்று ஏக வசனம் பேசுகிறாய்.

நாளைக்கு சென்னை போகிறேன் என்றவளிடம் அப்போ நாளையிலிருந்து நீ இருக்கும் வரை அது சிங்காரச்சென்னையல்ல சிங்காரிச்சென்னை என்று சொல்லி ஒரு கட்டியணைப்பு பரிசில் பெற்றேன்.

ஹோம்சிக் வந்து விடுமுறை கேட்டால் உடனே விடுப்பளித்துவிடும் மேலாளரிடம் உன்சிக் வந்திருப்பதை சொன்னால் மட்டும் முறைக்கிறார், அவருக்கெப்படி தெரியும் இரண்டு சிக்கும் நீதான் என்று.

கோவில் பிரகாரத்தைச்சுற்றியிருக்கும் ரத வீதிகள் எல்லாம் நீ நடந்து வரும்பொழுது  ரதிவீதிகளாக மாறிப்போகின்றன. 

May 20, 2011

ரதி பதியன் - ஒரு காதலியின் புலம்பல் !!!





ஒரு நாள் வானவில்லை வரைந்து காட்டுகிறேன் வா என்று ஓவிய அறைக்கு கூட்டிப்போனான் அங்குள்ள சுவரில் வானவில்லை அழகாய் வரைந்தான் ஆனால் அவன் வரைந்ததில் ஆறு வண்ணங்கள்தான் இருந்தன என்னடா வானவில் வண்ணங்கள் ஏழுதானே நீ ஆறல்லவா வரைந்திருக்கிறாய் மஞ்சள் நிறம் எங்கே என்று கேட்டேன் அதுவா இப்படி கிட்ட வா என்று சொல்லியபடி மஞ்சள் நிற இடத்தில் என்னை நிரப்பி இப்பொழுது பார் ஏழு வண்ணமும் இருக்கிறதா இல்லையா என்றவனை கன்னாபின்னாவென்று கட்டிக்கொண்டேன். இவன் இப்பொழுது மட்டுமல்ல நிறைய முறை இப்படித்தான் "அழகிய நட்சத்திரங்களுடன் கூடிய வானத்தை வரைந்துவிட்டு நிலவை வரையாமல் அதற்கு பதில் என்னை நிறுத்தி வைப்பான், வெறும் இலை , தண்டுடன் கூடிய செடியை வரைந்துவிட்டு மலருக்கு பதில் அங்கே என்னை நிரப்புவான் " இப்படி இவனுடைய லூசுத்தனமான அழகான செயல்களாலயே எனக்கு இவனை நிறைய பிடித்துப்போகிறது.

அன்று வெள்ளிக்கிழமை என்பதால் அருகில் ஆற்றையொட்டி இருக்கும் சிவன் கோவிலுக்கு இருவரும் சென்றோம் . நான் பச்சைக்கலரில் பட்டுச்சேலை அணிந்திருந்தேன் அவனும் பட்டு வேஷ்டி பட்டுச்சட்டையுடன் கம்பீரமாகவே என்னுடன் வந்தான். கோவிலுக்குள் செல்வதற்கு முன் ஆற்றில் கை கால்களை அலம்ப வேண்டும் என்ற சாஸ்திரப்படி ஆற்றில் நான் இறங்கியதுதான் தாமதம் அருகிலிருந்த அவன் "பச்சைப்பட்டு உடுத்தி அழகி ஆற்றில் இறங்கிவிட்டாள்" என்று கத்தி கூப்பாடு போட்டதில் சுற்றியிருப்பவர்கள் ஒரு மாதிரியாக பார்க்க எனக்கோ வெட்கம் தாங்க முடியாமல் அப்படியே அவனை ஆற்றில் தள்ளிவிட்டுவிட்டேன் தொப்பல் தொப்பலாக நனைந்து போனான். நானும்தான் அவனுடைய அதீத அன்பில் தொப்பல் தொப்பலாக நனைந்து போயிருக்கிறேன்.

இவன் முகத்தில் ஓவியம் வரையும் கலை கற்றிருக்கிறான் என்பது எனக்கு வெகு நாட்களுக்கு பின்பு தெரிய வந்த பொழுது எங்கே என் முகத்தில் ஓவியம் வரையேன் என்றேன் . உன்னுடைய முகம் கொஞ்சம் தட்டையாக இருப்பதால் உலக வரைபடத்தை வரைகிறேன் என்று அட்லஸை என் முகத்தில் வரைய ஆரம்பித்தான் . வரைந்து முடித்ததும் என்ன்னை நிலைக்கண்ணாடி முன்னாடி முன் கூட்டிச்சென்று காட்டினான் . சும்மா சொல்லக்கூடாது அழகாக சின்ன சின்ன தீவுகள் முதற்கொண்டு எதுவும் விடாமல் எல்லாவற்றையும் மூக்கிலிருந்து மேற்புற பகுதிகளிலேயே வரைந்து முடிந்திருந்தான். ஒரே ஒரு தப்பு செய்திருந்தான் அண்டார்டிகா கண்டத்தை வரையாமல் அந்த இடத்தில் சின்ன சின்ன பென்குவின்களை வரைந்திருந்தான் . எங்கடா அண்டார்டிகா கண்டம் காணோம் ஒரே பென்குவினா இருக்கு என்றேன் மெல்ல சிரித்துக்கொண்டே "உன் உதடும் அதற்கு கீழும் எல்லாமே குளிர் பிரதேசம்தானே" அதான் அப்படியே விட்டு விட்டேன் என்றவனை என்ன செய்யலாம் என்று நினைத்து கொண்டிருக்கும் பொழுதே என் முகத்திலிருந்த ஒரு பென்குவின் அவன் முகத்திற்கு இடம் மாறியிருந்தது.

எங்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து இவனுடைய என் வீட்டிற்கு வந்ததும் வீட்டில் சிற்சில மாற்றங்கள் செய்ய ஆரம்பித்திருந்தான். அதில் முதலாவதாக வீட்டின் முகப்பில் அவன் பெயர்போட்டு இல்லம் என்று இருந்த பலகையை எடுத்துவிட்டு ரதிவீடு என்று மாற்றியிருந்தான். வரவேற்பறையில் தேவதை உலாவும் இடம் என்று எழுதியிருந்தான்.  " ரகு பதி என்ற அவன் பெயரை ரதிபதி என்று சட்டப்படி பெயர் மாற்றுவதற்குரிய விண்ணப்பங்களை வாங்கி வந்திருந்தான்" . ஏண்டா இப்படி லூசுத்தனமா எதுனாலும் செய்துட்டு இருக்க என்றேன் எல்லாம் என் தலையெழுத்து என்று நெற்றியை பிடித்தவனின் கைகளை தட்டி விட்டேன் நெற்றியில் என் பெயரை எழுதி வைத்திருக்கிறான். இப்போ சொல்லுங்கள் இவனுக்காக என் உயிரை தரலாமா இல்லையா அதுதான் இவனுக்கு ஒரு குழந்தை பரிசாக தரலாமென்று முடிவெடுத்துவிட்டு அதை அவனிடம் சொன்னால் "ரோஜா பதியன் மாதிரி ரதி பதியன் போடலாமென்கிறாய் சரி வா என்று குதூகலப்படுகிறான்".

இவன் ஓவியன் மட்டுமல்ல சிலநேரங்களில் அழகான கவிதைகளும் எழுதுவான் ஒரு நாள் இவனுடைய லூசுத்தனமான செயல்களை என் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை வாயில் வைத்து கடித்தபடி ரசித்துக்கொண்டிருந்தேன் அப்பொழுது அவன் எழுதிய கவிதை 

"கழுத்தில் போட்டிருந்த
தங்க சங்கிலியை 
வாயில் வைத்து 
கடித்துக்கொண்டிருக்கிறாள் 
இனம் இனத்தோடுதான் 
சேரும்"

இப்படி என்னை மட்டுமே ரசிக்கும் என்னை மட்டுமே தன் உலகமாய் எண்ணி வாழும் இவன் எனக்கு கிடைக்க நான் கொடுத்துதான் வைத்திருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு அவனிடம் ஏண்டா இப்படி இருக்க என்று செல்லமாய் கேட்டு அவன் நெற்றியில் மென் முத்தம் பதித்தேன்..! 

April 18, 2011

முத்தப்பால் - முத்தக்குறள்கள் (U/A)


முத்தப்பால் 




முத்தம் முதல இன்ப மெல்லாம் காதலி
பகவன் முதற்றே உலகு

முத்தமிட சத்தமின்றி முத்தமிட்ட பின்
பெறுக அதற்கு தக

முத்தப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
காமன் அடிசேரா தார்

காதலித்த பொழுதின் பெரிதுவக்கும் தன்முத்தத்தை
முதல்முத்தம் எனக்கேட்ட காதலி,

முத்தம் உயிருக்குள் உய்க்கும் முத்தமிடாமை
உயிரையும் எடுத்து விடும்

யாகாவா ராயினும் இதழ்காக்க காவாக்கல்
சோகப்பர் கற்பிழுக்குப் பட்டு

முத்ததோடு ஒத்த கூடல் பலகற்றும்
கல்லார் அதிர்ஷ்டமிலா தார்

முத்தம் எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
துன்பம் இலாத இன்பம்

எல்லா முத்தமும் முத்தமல்ல காதலர்க்கு
இதழ் முத்தமே முத்தம்

தொட்டணைத் தூறும் முத்தம் மாந்தர்க்கு
உணர்ச்சியை தூறும் காமம்

முத்தத்துள் முத்தம் இதழ்முத்தம் அம்முத்தம்
முத்ததிற்க் கெல்லாம் தலை

இதழுக்கு முத்தமில்லாத பொழுது சிறிது
கன்னத்திற்கும் ஈயப் படும்

எம்முத்தம் யார்யார்வாய் கொடுப்பினும் அம்முத்தம்
மெய்முத்தம் காண்ப தறிவு

உடலால் ஆகாதெனினும் முத்தம் தன்
மெய்வருத்த உணர்ச்சி தரும் 



- முத்தள்ளுவர்




,