September 18, 2011

ஜோ'வென பெய்யும் மனமழை -1




என் மனதிற்க்கு
பிடித்தவர்கள்
நிறைய பேர்
இருக்கிறார்கள்
என் மனதை பிடித்தவள்
நீ மட்டும் தான்..!

----------------------------------------



அழகான வாழ்க்கை வண்டி
ஓட்டுவதற்கு தேவையான
அத்தனை விஷயங்களிலும்
நீ என் சாயலையும்
நான் உன் சாயலையும்
கொண்டிருக்கிறோம்..!

----------------------------------------



ஊரே எனக்கு
வைத்திருந்த பட்டத்தை
நீயும் சொன்னபோது
அளவில்லா ஆனந்தம்
காதல் மன்னனாம் நான்..!
----------------------------------------


செடி கொடிகளுக்கு
அருகே நின்று விடாதே
தேரென்று நினைத்து
அவை உன் மீது
படர்ந்துவிடலாம்..!

----------------------------------------



நீ இல்லாமலே
என்னைச்சுற்றி
லாவண்டர் வாசம்
வீசுகிறது அதுதான்
உன் வாசமாய் 
இருக்கக்கூடும்..!

----------------------------------------


உன்னை
கிளி மாதிரி
என்று சொல்லி
என்னை
ஜோசியக்காரன்
ஆக்கிவிட்டார்கள்
என் அம்மா..!

----------------------------------------


நீ பேசும்பொழுது
குயில்களும்
உடன் கூவுவது
எனக்கென்னவோ
குயில்களின்
பின்னணி இசையில்
நீ பாடுவது போன்றுதான்
இருக்கிறது..!

----------------------------------------

6 comments:

ஸ்ரீராம். said...

காதல் மழை...

சுசி said...

மனமழை ஜில்னு இருக்கு. உங்க ரெண்டு பேர் மனம் போலவே :))

வெளங்காதவன்™ said...

///செடி கொடிகளுக்கு
அருகே நின்று விடாதே
தேரென்று நினைத்து
அவை உன் மீது
படர்ந்துவிடலாம்..!
////

செம க்ளாஸ் மச்சி!

இமா க்றிஸ் said...

'ஜோ'!!! ;)

//உன்னை
கிளி மாதிரி
என்று சொல்லி
என்னை
ஜோசியக்காரன்
ஆக்கிவிட்டார்கள்
என் அம்மா..!
//
அடடா! ;)

middleclassmadhavi said...

வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_28.html - உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். முடிந்த போது பார்க்கவும்.

Thanglish Payan said...

Awesome !!!!

Awesome !!!

Superb Kavithai...