December 31, 2011

தந்தை சொல் மிக்கதொரு மந்திரமில்லை..

இப்பொழுது எல்லாம் பணத்திற்க்கு பதில் நிறைய கிரெடிட் கார்ட்கள் பயன்படுத்துகிறோம் இல்லையா? கிரெடிட் கார்ட் இல்லாத காலத்திலும் அல்லது கிரெடிட் கார்ட் இல்லாத குடும்பத்திற்க்கும் இருந்த, இருக்கின்ற ஒரே கிரெடிட் அப்பாதான் . எனக்கு பணத்திற்க்கு மட்டுமல்ல புத்திமதிகளுக்கும் அறிவுரைகளுக்கும் கூட என் அப்பாதான் கிரெடிட் கார்ட்.என்னோட அப்பா பாக்கெட்ல எப்பவும் நிறைய பணம் வைத்திருப்பார். அவருடன் வெளியில் செல்லும் பொழுதுகளில் கடை வீதிகளில் இருக்கும் கடைகளில் முதல் கடையில் வாங்கிய பொருள் ஐம்பது ரூபாய்க்கும் குறைவாகவே இருந்தாலும் ஐநூறு ரூபாய் தாளை எடுத்து நீட்டுவார் அவர்கள் கொடுக்கும் மீதி சில்லரையை வாங்கி வைத்துக்கொண்டு அடுத்தடுத்த கடைகளிலும் அதேபோல நூறு ரூபாய் தாளையோ ஐநூறு ரூபாய் தாளையோ கொடுத்து சில்லரை வாங்கிக்கொள்வார் , ஏம்ப்பா அதான் சில்லரை வைத்திருக்கிறீர்களே பின் ஏன் மீண்டும் மீண்டும் சில்லரையாக சேர்க்கிறீர்கள் என்றால் அவசர ஆத்திரத்திற்க்கு பயன்படுத்துவதற்க்கு சில சமயம் சில்லரை இல்லாமல் போய்விடும் அதற்க்காக நான்கைந்து கடைகள் ஏறி இறங்குவதைவிட நம்கையில் சில்லரையிருந்தால் அலைய வேண்டியிருக்காதென்பார். அப்பொழுதிருந்து அதேதான் நானும் பின்பற்றுகிறேன் என் பாக்கெட்டில் பணம் இருக்கிறதோ இல்லையோ நிறைய சில்லரைகள் இருக்கும். அதன் பயன்பாடு அவசர ஆத்திரத்திற்க்கு மட்டுமல்ல மாதக்கடைசியிலும் உதவியிருக்கிறது.

என்னுடைய அப்பா எல்லாவிதத்திலும் திறமையானவராயிருந்தாலும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் முடிவெடுப்பதில் அவருக்கு சிறு மன உளைச்சல் உண்டு . என் கைபிடித்து சாலையை கடக்க முயற்சிக்கும் பொழுது  அவர் படும் பாடு சொல்லி மாளாது அதுபோன்ற தருணங்களிலும் சில வேறு விஷயங்களிலும் அப்பாவிடம் எதிர்த்து அல்லது கடிந்து கொண்டிருக்கிறேன். சில சமயம் அமைதியாகிவிடுவார் சில சமயம் கோவித்துக்கொள்வார் கோவித்துக்கொண்டு சிலநாட்கள் அப்பாவும் நானும் பேசாமலும் இருப்போம் அச்சமயங்களில் நான் என்னுடைய அறையில் எதாவது புத்தகம் படித்துக்கொண்டிருப்பேன் வெளியிலிருந்து பாட்டுச்சத்தம் கேட்கும் அப்பாதான் பாடிக்கொண்டிருப்பார் ''ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ? இல்லையொரு பிள்ளையென்று ஏங்குவோர் பலரிருக்க இங்கு வந்து ஏன் பிறந்தாயோ'' வென்று அம்மாவும் அப்பாவும் சிரித்துக்கொண்டிருப்பார்கள் நான் உடனே வெளியில் சென்று ஏன் பெத்தீங்க என்பேன். இதற்காகத்தானடா என்று வாங்கிவந்த எனக்குபிடித்த பால்கோவாவை எடுத்து நீட்டி கன்னங்களில் தடவிக்கொடுப்பார் . பால்கோவாவிற்கு இல்லையானாலும் அப்பாவின் அந்த அன்பிற்க்கு சரண்டராகிவிடுவேன்.

அப்பா பாடல்கள் நன்றாக படிப்பார் பழைய பாடல்கள் விரும்பி கேட்பார் சந்தோஷமான நேரங்கள் துன்பமான நேரங்கள் அதனதன் நேரங்களுக்கேற்ப அப்பா படிக்கும் பாடல்கள் இருக்கும் சந்தோஷமான பாடல்கள் படிக்கிறாரென்றால் அப்பா சந்தோஷமாக இருக்கிறார் என்று கொள்ளலாம். வருத்தமான பாடல்கள் படிக்கிறாரென்றால் அப்பா கோபத்திலிருக்கிறாரென்றும் கொள்ளலாம். பெரும்பாலும் அப்பா சந்தோஷமான பாடல்கள் படிக்கும்பொழுதே எனக்கு ஆக வேண்டிய காரியங்களை சாதித்துக்கொண்டிருக்கிறேன். அப்பாவின் உடன் பிறந்தோர் அப்பாவுடன் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம் . என்னுடைய பாட்டனார் என் அப்பாவின் தந்தை கடைசி வரையிலும் எங்களுடன்தான் இருந்தார். பாட்டையா தன்னுடைய பிற மகன்களைபற்றி வருத்தப்படும்பொழுது ''ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி ஒரே ஒரு ராணி பெற்றால் ஒன்பதுபிள்ளை அந்த ஒன்பதிலே ஒன்றுகூட உருப்படியில்லை'' என்ற பாடலை அப்பா பாட்டையாவிடமும் பாடிக்காட்டுவார் கூடவே அம்மாவும் பாடுவதுண்டு, வாஸ்தவம்தான்ப்பா என்று பேச்சை முடித்துக்கொள்வார் பாட்டையா.இப்பவும் அந்த பாடல் பார்க்கும்பொழுதெல்லாம் அப்பா ஞாபகம் வந்து கண்கலங்கிவிடுகிறது இந்த பதிவு கூட அந்த பாடல் கேட்டுக்கொண்டேதான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..



அப்பா திருமணத்திற்க்கு முன்பு சென்னையில் பல வருடங்கள் வேலை செய்திருக்கிறார். நடிகர் ராஜசேகர் எங்கள் ஊர்க்காரர் ஒருவரின் உறவினர் என்பதால் ராஜசேகரின் கெஸ்ட் ஹவுஸ் ரூமில் தங்கி வேலை செய்திருக்கிறார் ராஜ சேகர் தம்பி செல்வாவை சிறுவயதில் அப்பா தூக்கி விளையாடியிருப்பதாக கூறுவார். அப்படி அங்கு வேலை செய்து கொண்டிருந்த சமயம் அப்பாவுடன் அப்பாவின் நண்பர் ஒருவரும் ஒரே அறையில் தங்கியிருந்து பணிபுரிந்திருக்கின்றனர். அந்த நண்பர் ஒரு நாள் சமயம் பார்த்து அப்பாவிடமிருந்த நகைகள் உடைகள் பணம் அத்தனையையும் திருடிக்கொண்டு தலை மறைவாகிவிட்டாராம். அந்த படிப்பினையை என்னிடம் நண்பர்களிடம் பழகுவது தப்பல்ல ,நண்பர்களின் குணம் அறிந்து பழகு , நம்மிடம் நல்லவிதமாக பழகிவிட்டு நமக்கு பின்புறம் போய் நம்மை பற்றி குறை பேசுபவர்களும் உண்டு அதனால் ''ஊரெல்லாம் எனக்கு நண்பர்களிருக்கிறார்கள் என்ற பெருமையை விட நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற நாலு நண்பர்கள் இருந்தால் போதும்'' என்பார் . அவர் சொன்னதன் படி இதுவரை என்னுடைய நண்பர்கள் எண்ணிக்கை ஏழைத் தொட்டிருக்கிறது. அவர்கள் ஒவ்வொருவரின் எண்ணிக்கையிலும் ஒன்று கூடியிருக்கிறது.

அப்பா எனக்கு நிறைய பொருட்கள் வாங்கிக்கொடுத்திருக்கிறார் ஆனால் எல்லாவற்றையும் கேட்டதும் வாங்கிக்கொடுத்ததுகிடையாது சில நாட்கள் கழித்தே வாங்கிக்கொடுத்திருக்கிறார். பணம் இருக்கே கேட்டதும் வாங்கிக்கொடுத்திருக்கலாம்தானே அப்பா என்றால் , கேட்டதும் வாங்கிக்கொடுத்தால் வாங்கிய பொருளின் மதிப்பறிந்திருக்க மாட்டாய். இப்பொழுது இத்தனை நாட்கள் கேட்டு கேட்டு வாங்கிய பொருளென்று அதை பத்திரமாக வைத்திருப்பாயல்லவா என்பார். கடந்த 1999 ம் வருடம் இதே டிசம்பர் மாதம் வந்த என்னுடைய பிறந்த நாளுக்கு நான் கேட்காமலேயே டைட்டன் ஸ்கொயர் டைப் வாட்ச் ஒன்று வாங்கிக்கொடுத்தார். வாட்ச் என்று அப்பா வாங்கிக்கொடுத்தது அதுதான் முதன் முறை அதுவரை நான் வாங்கிய உறவினர்கள் வாங்கிக்கொடுத்த நிறைய வாட்ச்கள் தொலைந்து போயிருக்கின்றன அல்லது உடைந்து போயிருக்கின்றன ஆனால் இந்த வாட்ச் கிட்டத்தட்ட பனிரெண்டு வருடங்களாக என்னுடனே இருக்கிறது என்பதை விட அப்பாவின் சார்பில் என்னுடன் இருந்து அன்பையும் அறிவுரையையும் தேவைப்படும் சமயங்களில் தந்துகொண்டேயிருக்கிறது...நிறைய புதுரக வாட்ச்கள் பார்க்கும்பொழுது    வாங்க வேண்டுமென்று ஆசையும் வந்ததில்லை..வேறு ஏதாவது வாட்ச்கள் கட்டும் சூழ்நிலை வந்தாலோ இல்லை இந்த வாட்ச் கட்ட மறந்த நாட்களோ மகிழ்ச்சியுடன் நகர்ந்ததில்லை..



இதோ இன்றைக்கு அப்பாவுக்கு எழுதும் பிறந்த நாள் வாழ்த்தையும் நான் எழுத எழுத பார்த்து சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கிறது.

பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா..

சென்ற வருடம் அப்பாவுக்கு எழுதிய பிறந்த நாள் வாழ்த்து பதிவு அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை

பதிவை வாசித்த அனைவருக்கும் நன்றிகள்..


December 18, 2011

ரைட்டிங் ஸ்டைல் ..

நம்முடைய கையெழுத்தில் கவிதையை வாசிப்பது நமக்கே சில சமயம் சிலிர்ப்பைதரும் இதோ எனக்கு சிலிர்ப்பை தந்த என் கை(உயிர்)எழுத்து இவ்ளோ நாள் விட்டுட்டு இப்போ ஏன்னு கேட்குறீங்களா? ப்ரியசகிக்காக...









December 12, 2011

'காமன்' வெல்த் (U/A)



ஒரு நாள் இருவரும் வெளியிலிருக்கும் ஒரு பார்க்கில் சந்தித்து கொண்ட பொழுது அவள் கையிலிருக்கும் மச்சத்தை பார்த்துவிட்டு ஹைய்யோ இத எப்படி கவனிக்காமல் போனேன் எங்கே சொல் உன் உடம்பில் எத்தனை மச்சம் இருக்கிறதென்று? என்று அவளிடம் கேட்டேன் ஏன் கேட்கறடா என்று வினவியவளிடம் சும்மா ஒரு லவ் நாலேட்ஜிற்க்குத்தான் சொன்னால்தான் என்னவாம் என்றேன் சிணுங்கியபடியே மொத்தம் பத்து இருக்கிறது என்றாள் எங்கெல்லாம் என்றேன் ஆச தோச நீயே கண்டுபிடிச்சுக்கோ என்றாள் பாவம் நீயாகவே சொல்லிவிட்டாயென்றால் உனக்கு நல்லது இல்லையென்றால் எனக்கு நல்லது ம்ஹூம் சொல்லமாட்டேன் என்றாள் அப்படியா மேடம் அப்போ நம்ம மேரேஜிற்க்கு பிறகு நானே கண்டுபிடித்துக்கொள்கிறேன் ஆனால் ''நான் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு மச்சங்களையும் வரிசையாக இணைக்கும்படி என் உதட்டால் உன் உடம்பில் மச்சக்கோடு வரைவேன் பரவாயில்லையா?'' என்றேன் ஆஆங் அதெப்படி முடியாது என்றாள் அப்போ சொல் என்றேன் ம்ஹூம் என்றாள் அப்போ மச்சக்கோடு ஒகேவா என்றேன் ஒகே என்றாள் கீழ் உதட்டை கடித்தபடியே..

திருமணத்திற்க்கு பிறகொரு நாள் புத்தம் புதிய ஒரு சேலை அணிந்துகொண்டிருந்தவள் என்னருகில் வந்து இந்த காட்டன் சாரி எனக்கு நல்லா இருக்கா என்று வினவினாள் சூப்பரா இருக்கு ஆனால் ''உனக்கு கூந்தல் சேலைதான் கொள்ளையழகு'' என்றதும் கூந்தல் சேலையா? என்று ஆச்சரியத்தோடு வினவியவளிடம் அதான் கண்ணே நேற்றைக்கிரவில் ''உன் உடம்பெங்கும் விரவியிருந்த உன் கூந்தலைத்தான் சொன்னேன்'' என்றபடி அவளை கட்டியணைத்தேன் ச்சீய் சரியான காட்டான்டா நீ என்று என்னிடமிருந்து விடுவித்துக்கொண்டு ஓடியவளை கூந்தல் சேலை அணிவிக்க வெகு நேரமாயிருக்கவில்லை..

மறுநாள் , குளித்துமுடித்துவிட்டு ஈரம் சொட்ட சொட்ட தலையை சிலுப்பியபடி சிணுங்கல்முகத்துடன் என்னிடம் வந்தவள் உனக்கு கொஞ்சமாவது சென்ஸ் இருந்தா இப்படிலாம் பண்ணுவியா நீ என்றாள் என்ன சொல்ற நீ ? ம் ஆமாம் உடம்புல சுடு தண்ணீர் விழுந்ததும் ஒரே எரிச்சல் என்னவென்று பார்த்தால் உடம்பெல்லாம் உன் நகக்கீறல் முதலில் உன் நகத்தை வெட்டிவிட வேண்டும் என்றாள் சிணுங்கலுடனே ஓஹ் அதுவா? அது ''நேற்றைக்கு நாம் கலந்துகொண்ட காமன்வெல்த் கேம்ஸில் நீ வாங்கிய பரிசுகள்'' கண்ணே என்றதும் இன்னும் வெட்கப்பட்டு சிரித்தாள் ஈரக்கூந்தல் அள்ளிமுடித்தவளை இன்னொரு காமன்வெல்த் கேம்ஸிற்க்கு தயார் படுத்தினேன்.

இன்னொரு நாள் பகல் பொழுதில் என் மடியில் தலை வைத்து படித்திருந்தவள் என்னிடம், நான் சாரிகட்டுறது பிடிச்சிருக்கா இல்லை சுடிதார் போட்டிருப்பது பிடிச்சிருக்கா என்றாள் சாரிதான் என்றேன் ஏன் என்றாள் சேலையில்தான் உன் வனப்பான பிரதேசங்கள் என்னை இன்புறச்செய்கின்றன என்றபடி உனக்கெது சவுகர்யமாக இருக்கிறது என்று வினவினேன் சுடிதார் என்றாள் ஏன்? என்றதும் , ''உங்களோட ப்ராபர்டிஸ் எல்லாம் பத்திரமா பாதுகாப்பா இருக்க ஹெல்ப் பண்ணுதே '' என்று வெட்கியவளை அடிக்கள்ளி என்றபடி அவள் உதட்டில் மென் முத்தமிட விடுங்க பட்டப்பகலிலேவா என்றாள் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமென்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்றதும் சிவந்த அவள் முகம் இன்னும் சிவக்க ஆரம்பித்தது..

ஒரு நாள் மாலைப்பொழுதில் நான் புத்தகம் படித்துக்கொண்டிருக்கையில் என் நெற்றியில் முத்தமிட்டவள் நீங்க எனக்காக எழுதிய கவிதைகள் அத்தனையும் ஏன் அந்த கருப்பு வண்ணத்திலிருக்கும் டயரியில் எழுதினீர்கள் எல்லோரும் வெள்ளை டயரியில்தானே எழுதுவார்கள் என்றாள் அதுவா ''நீ இந்த விமானத்தில் இருக்கும் கருப்புப்பெட்டி கேள்விப்பட்டிருப்பாய் விமானம் விபத்துக்குள்ளானால் அந்தகருப்புப்பெட்டியிலிருக்கும் ரகசியத்தை அனைவரும் தெரிந்துகொள்வார்கள் அதுபோலவே நான் உன் மேல் வைத்திருக்கும் அத்தனை காதலையும் இந்த கருப்புடயரி ரகசியமாய் வைத்திருக்குமென்றேன்'' , உணர்ச்சிவசப்பட்டவள் மிக தைரியமாக ஃப்ரெஞ்ச் கிஸ் ஒன்று கொடுத்தபடி என்னை வாரியணைத்தாள்.

மங்கிய நீல நிற இரவு விளக்கில் இருவரும் ஆதாம் ஏவாளாய் இருக்கையில் சின்ன சின்னதாய் காதல்ஸ்வரங்களாய் அவளின் கொலுசும் வளையல்களும் சத்தங்கள் எழுப்பிக்கொண்டிருந்தன இந்த கொலுசும் வளையலும் ஏன் சத்தம் போடுகிறதென்று தெரியுமாவென்றேன் இல்லையே என்றாள் நான் உன்னிடம் சரணடைந்துவிட்டதை பார்த்த கேலிச்சிரிப்புதான் அது என்றேன் ஓஹ் அப்படியா என்றவளிடம், கலைந்து போடப்பட்ட ஆடைகளை காட்டி ' அவங்க நம்ம மேல கோபமா இருக்காங்கபோல' என்றேன் சிரித்தபடி ஏன் அப்படி சொல்றீங்க என்றாள் அவங்கள நம் விளையாட்டில் சேர்த்துக்கொள்ளவில்லையே அதுதான் காரணமாயிருக்கும் என்றதும் க்ளுக்கென்று சிரித்தவளும் நானும் மீண்டுமோர் கள்ளாட்டம் விளையாட ஆரம்பித்திருந்தோம்..



December 6, 2011

இந்தா பிடி..விருதுகள் 2011

























கூடங்குளம், பால் விலை உயர்வு, பஸ்கட்டண உயர்வு,மின்கட்டண உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, இவ்வளவையும் எதிர்த்து தங்கள் வாழ் நாட்களை கடத்திக்கொண்டிருக்கும் பொதுமக்கள் ஒவ்வொருவரும் போராளிகளே..


நன்றி..

November 28, 2011

Cast Away - ஒரு பார்வை

அப்பாவின் அறிமுகத்தின் பேரில் பார்த்த திரைப்படம் Cast Away இந்த உலகில் சில மனிதர்களுக்கு தனிமை மிகவும் பிடித்த விஷயமாக இருக்கலாம் பலருக்கு தனிமையில் இருப்பது வெறுமையாகவும் தோன்றும் . தமிழில் தனிமையிலே இனிமை காணமுடியுமா? என்ற பாடல் கூட இருக்கிறது. சிலரால் ஒரு ஐந்து நிமிடம் யாரிடமாவது பேசாவிட்டால் எதையோ இழந்ததைப்போல் இருப்பார்கள் ஐந்து நிமிடத்துக்கே இப்படியென்றால் ஒருவன் மனிதர்கள் இல்லாத தீவில் தன் வாழ்நாளின் நான்கு வருடங்களை கழிக்கிறான். எப்படி அவன் நான்கு வருடங்கள் வெளி உலகத்தோடு எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் அந்தத்தீவில் கழிக்கிறான் என்பதுதான் இத்திரைப்படம்.


ஹாலிவுட் அகாடமி அவார்டான ஆஸ்கார் இரண்டு முறை வென்ற நாயகன் தி கிரேட் Tom Hanks இதில் நடிகராக நடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட வாழ்ந்திருக்கிறார் என்று சொல்வதே சரி.  ஒரு நான்கு வழிச்சாலையில்தான் படம் ஆரம்பிக்கிறது. நாயகன் Tom Hanks FedEX கூரியர் நிறுவனத்தில் எக்ஸ்கியூட்டிவாக பணி புரிகிறார். தன்னுடைய அலுவலகத்தில் எல்லாமே குறித்த நேரத்தில் நடைபெறவேண்டும், நேரமும் டைம் மேனேஜ்மெண்டும் முக்கியமானது என்று சொல்பவர். தன் காதல் மனைவியுடன் காதலாக வாழ்க்கை வாழ்பவர். ஒரு முறை தன் அலுவலக கூரியர்களுடன் தானும் விமானத்தில் பயணம் செய்கிறார் பயணத்தின் போது விமானம் விபத்தில் சிக்கி நடுக்கடலில் விழுகிறது விமானத்தில் பயணம் செய்த ஒருவரும் உயிர்தப்பவில்லை Tom Hanksஐ தவிர.விமானத்தில் அவசரகாலத்தில் தப்பிப்பதற்க்காக இருக்கும் மிதவையின் மூலம் ஒரு குட்டித்தீவினை அடைகிறார் Tom Hanks. அந்த தீவின் அந்த விமானத்தில் ஏற்றப்பட்டிருந்த சில கூரியர் பார்சல்களும் அவருடன் கரையேறுகின்றன.

அந்த தீவில் Tom Hanksஐ தவிர வேறு மனிதர்களே இல்லை மேலும் அந்தத்தீவொன்றும் கப்பல்கள் பயணப்பாதையிலும் இருக்கவில்லை வெளி உலகத்துடன் தொடர்புகொள்ள எந்த ஒரு வசதியும் இல்லை ஆனால் Tom Hanksசிடம் தன்னம்பிக்கை மட்டும் இருந்தது. தான் தப்பித்து வந்து மிதவையின் மூலமே திரும்ப கடலில் பயணிக்க முயற்சிக்கிறார் ஹும் பெரிய பெரிய அலைகளின் ஆர்ப்பாட்டத்தில் அந்த மிதவை தொடங்கிய இடத்திற்க்கே மீண்டும் வருகிறது Tom Hanks சோர்வடைகிறார் மீண்டும் மீண்டும் அங்கிருந்து தப்பிப்பதற்க்கு பல முயற்சிகள் எடுத்தும் அத்தனையும் தோல்வியடைகிறது. சுற்றிலும் கடல் நீர் இருந்தாலும் குடிப்பதற்க்கு கடல் நீரையா குடிக்க முடியும் ? அந்த தீவில் கிடைக்கும் தேங்காயை சாப்பிட்டு தேங்காய் நீரை குடித்து நாட்களை நகற்றுகிறார். வயிற்றுப்பசிக்கு கடல் மீன்களை பிடித்து தின்கிறார். இலைகளில் படிந்திருக்கும் மழை நீரை தேங்காய் ஓடிற்க்குள் சேகரித்து குடிக்கிறார் . எப்படியோ அந்த தீவில் அவர் வாழப்பழகிக்கொண்டார் எப்படியும் தான் தன்னிருப்பிடத்திற்க்கு திரும்பிவிடுவோம் தன் காதல் மனைவியை காண்போம் என்ற நம்பிக்கை அவரை விட்டு அகலவில்லை .



தன்னுடன் கொண்டுவந்திருந்த கடிகாரத்தில் இருக்கும் மனைவியின் புகைப்படத்தை பார்த்து சோகம் கொள்கிறார். நெருப்பை உருவாக்க மிகப்பிராயசப்படுகிறார் அப்படி ஒரு முறை முயற்சி செய்யும்பொழுது கையில் சதை கீறி இரத்தம் பீய்ச்சுகிறது வலிதாங்கமுடியாமல் தன்னுடன் கரையேறிய பார்சலில் இருக்கும் வாலிபாலை தூக்கியெறிகிறார். அடுத்தமுறை நெருப்பை உருவாக்கிவிட்டு ஐ மேட் ஃபயர் என்று சொல்லி ஆனந்தப்படுகிறார். அவரின் இரத்தக்கறை பட்டு தூக்கியெறியப்பட்ட வாலிபாலை காண்கிறார் அவருக்கு அது மனித முகத்தை ஞாபகப்படுத்துகிறது . அதை அந்த வாலிபால் தயாரித்த நிறுவனத்தின் பெயரான வில்சன் என்ற பெயராலே அழைக்கிறார் அதனுடன் பேசுகிறார் விவாதம் செய்கிறார் சண்டையில் தூக்கியெறிந்துவிடுகிறார் பிறகு தேடிக்கண்டுபிடித்து தன்னுடன் மீண்டும் வைத்துக்கொள்கிறார் . இப்படி ஆளில்லாத தீவில் அந்த வாலிபால் அவருக்கு சிறந்த நண்பனாக இருக்கிறது.





இப்படியாக நான்கு ஆண்டுகள் கழிந்திருக்கையில் ஏதோ ஒரு விபத்து ஏற்பட்டு அதன் மூலம் அந்தக்கரையை வந்தடைந்த ஒரு பிளாஸ்டிக் கூரையினை பார்க்கிறார் , மரங்களாலான ஒரு படகு தயாரிக்கிறார்.காற்று வீசும் திசை தனக்கு சாதகமான நாட்களுக்காக காத்திருக்கிறார் அப்படி ஒரு நாள் வந்ததும் அந்த தீவை விட்டு தப்பிக்கிறார் தன் நண்பன் வில்சனுடன். அப்படி கடலில் மிதந்து வரும் வழியில் புயல் காற்று காரணமாக வில்சனை பறிகொடுத்துவிட்டு அவர் அழும் காட்சி நம்மையே அழ வைக்கிறது. எப்படியோ Tom Hanks தன்னுடைய இருப்பிடத்திற்க்கு திரும்புகிறார்.

மீண்டு வந்த Tom Hanksற்க்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. தான் இறந்துபோய்விட்டதாக நினைத்து தன் காதல் மனைவி இன்னொரு திருமணம் புரிந்து வேறொரு கணவர் குழந்தையுடன் வாழ்ந்துவருவதை கண்டதும் உடைந்து போகிறார். அந்த சமயத்தில் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் அவருடன் இருக்கிறார்கள் ஆனால் தனிமையில் இருப்பதைப்போல உணர்கிறார். தான் திரும்பி வந்துவிட்டதற்க்காக தரப்பட்ட விருந்துபசரிப்பில் மீந்து போன உணவுகளைப்பார்த்து சிரிக்கிறார் . படத்தை எந்த நான்கு வழிச்சாலையில் ஆரம்பித்தார்களோ அதே நான்கு வழிச்சாலையில் முடித்து முடிவை நம் பார்வைக்கு விட்டுவிடுகிறார்கள். நிஜத்தில் தன்னுடன் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் இருந்தும் யாருமே இல்லாதது போன்று கைவிடப்பட்ட நிலைதான் இந்த Cast Away.

கண்டிப்பாய் பார்க்கவேண்டிய திரைப்படம்.

படம் வெளிவந்த வருடம் - 2000

பி.கு. வில்சனைப்போலவே இதுவரை என்னுடைய கருத்துக்கள் நினைவுகள் மொக்கைகள் அத்தனையையும் பகிர்ந்து கொண்டதாலும் என் தனிமையை போக்கியதாலும் என்னுடைய பிளாக் டிஸ்க்ரிப்சனை ப்ரியமுடன் வசந்த் aka wilson என்று மாற்றியதோடு மட்டுமில்லாமல் இதுவரை சுணங்கியிருந்த பதிவிடுதலை என் வருங்கால மனைவி கொடுத்த உற்சாகத்தின் பேரில் அவர்களுக்காகவே என் மனதில் தோன்றிய அத்தனை விஷயங்களையும் தினமும் ஒன்றாக முடியாவிடினும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இனி பதிவுகள் இடப்போகின்றேன் கமெண்ட்ஸ்களுக்காகவோ ஹிட்ஸ்களுக்காகவோ அல்ல அல்ல அல்ல....இதுவரை ரீடரில் தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்களுக்கும் கமெண்ட்ஸ் இட்ட நண்பர்களுக்கும் நன்றி.


November 6, 2011

கலிங்கத்துப்பரணி

ஜூலை 17, 1999 


அன்புள்ள கணவருக்கு ஆயிரம் புன்னகைகள், நான் எழுதிய அத்தனை கடிதங்களையும் விட இந்த கடிதம்தான் மிகவும் சிறப்பானது. நான் உங்களோடு காவிரிக்கரையில் ஆடிய தருணம் , கடலலையோடு கூடிய தருணம் , காதல் மொழி பேசியே கழிந்த தருணம், காற்றுக்கு வழிவிடாது அணைத்த தருணம் எல்லா நினைவுகளும் என் நெஞ்சில் இருக்கின்றன.உங்களைப்பிரிந்த இந்த ஆறுமாதங்களும் அந்த நினைவுகளே என்னை உயிரோடு வைத்துள்ளன. நீங்கள் செய்து தந்த கிளிஞ்சல் கிளிகளை பார்த்து பார்த்துதான் மோட்சம் அடைகிறது என் ஆவி. - (கணவர் மீது தனக்கிருக்கும் காதலை வெளிப்படுத்துகிறாள்)

நீங்கள் துப்பாக்கியுடன் தான் அதிகம் காதல் பழகினீர்கள் அடுத்து என்னுடன். உங்கள் துப்பாக்கிமனைவிக்கு தோட்டாக்கள் பிறந்தது போல தூரத்து மனைவிக்கும் தங்கத்தோட்டா பிறந்துள்ளது ஆம் ஆண் குழந்தை, உங்களைப்போலவே நீண்ட விரலுடனும், சைனா மோப்புடனும் அவன் இப்பொழுதே கை கால்களை உதறி விளையாடும்போதே தெரிகிறது அவனும் உங்களைப்போலவே இராணுவ வீரனாக வருவான் என்று.உங்களைப்போல சாதாரண வீரனாக அல்லாமல் இவனைப்படிக்க வைத்து உயர் அதிகாரியாக்க வேண்டும் என்பதே என் எண்ணம். இவனை நம்முடைய காதல் சின்னமாக மட்டும் நான் பார்க்கவில்லை உங்களுடைய வீரத்தின் சின்னமாகவும் பார்க்கிறேன் நம் தேசத்தின் மகனாக இவனை பார்க்கிறேன். - (கணவரின் வீரத்தைப்பற்றி பறை சாற்றுகிறாள்)

இப்பொழுதே இவனை இராணுவ உடையில் பார்க்க ஆசைப்படுகிறேன் ஏனெனில் உங்களை முதன் முதலில் அந்த உடையில்தான் பார்த்தேன் புகைப்படம் மூலமாக , அந்த உடையில் இருந்ததால்தான் உங்களை திருமணம் செய்யவே ஒப்புக்கொண்டேன் திருமணத்தில் கூட இராணுவ உடையில்தான் உங்கள் கரங்களை பற்ற நினைத்தேன் ஆனால் சம்பிரதாயங்கள் தடுத்ததால் சந்தோஷ தருணத்திலும் சிறு வருத்தம்.நீங்கள் சென்ற முறை காஷ்மீரிலிருந்து வாங்கி வந்த உடையைத்தான் உங்கள் வாசத்தைக்காட்டும் பரிசாக நம் மகனுக்கு அளித்துள்ளேன். நமக்கு பிடித்த விடுதலைப்போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பெயரைத்தான் சூட்ட நினைத்தேன் , எத்தனைக்காலங்கள்தான் பழம் பெருமைகளை பேசிக்கொண்டிருப்பது எனவே சென்ற முறை போரில் மடிந்த உங்கள் சீனியர் ஆபிசர் மேஜர் சரவணன் பெயரை சூட்ட முடிவெடுத்துள்ளேன் இவனும் அவரைப்போலவே சிறந்த வீரனாக வருவான் என்று நம்புகிறேன். - (தேசத்தின் மீது தனக்கிருக்கும் நாட்டுப்பற்றை தெளிவு படுத்துகிறாள்)

போர் நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் நான் தினமும் கோவிலுக்கு சென்று கொண்டிருக்கிறேன், உங்கள் உயிரைக்காக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வதற்க்கு அல்ல தங்களின் ஒரு சொட்டு இரத்தம் கீழே விழுவதற்கு முன்பு குறைந்தது ஆயிரம் எதிரிகளின் குருதி குடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற வரம் கேட்டு, நம் நாட்டின் ஒரு பிடி மண்ணைக்கூட அந்த திமிர்க்கூட்டம் அள்ளக்கூடாது , அந்தக் குள்ளநரிக்கூட்டத்தின் நிழல் கூட இந்த மண்ணில் படக்கூடாது, நம் தாய்த்திரு நாட்டின் கொடி ஒரு அங்குலம் கூட தாழ்ந்து பறக்கக்கூடாது. கவலைப்படாதீர்கள் காளிதேவி அருள் புரிவாள், போரில் என் நினைவு வந்தால் உங்கள் துப்பாக்கியை முத்தமிடுங்கள் அது என்னைச்சேரும் , போரில் நீங்கள் இறந்து நாடு வெற்றி பெற்றிருந்தால் பெருமைப்படுவேன் நீங்கள் உயிரோடு இருந்து நாடு தோற்றிருந்தால் உங்கள் மனைவி என்று சொல்லிக்கொள்ளவே வெட்கப்படுவேன் , உங்கள் புகழைச்சொல்லித்தான் நம் மகனை வளர்க்க வேண்டும். ஆகவே உயிரோடு வருகிறீர்களோ இல்லையோ புகழோடு வாருங்கள் கர்ணனைப்போல் போரிடுங்கள் எதிரியிடம் சிக்கிவிடாதீர்கள் உங்கள் உயிரற்ற உடல் வேண்டுமானாலும் அவனிடம் சிக்கலாம் நீங்கள் சிக்கக்கூடாது. போருக்குகிளம்பும்போது என் கடிதத்தை படிக்க நேரமிருக்காதுதான் இருந்தாலும் ஒருமுறை என் கடிதத்தை முத்தமிடுங்கள். மறவாதீர் உங்களுக்குப்பிறகு இந்த நாட்டைக்காக்க இன்னுமொரு மாவீரன் பிறந்துவிட்டான் . துப்பாக்கிச்சத்தம் என் காதுகளில் ஒலிக்கிறது களம் புகுந்திடுங்கள் வெற்றி நாட்டுக்கே. - (கணவன் போர்க்களத்தில் துவண்டுவிடக்கூடாதென்று உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கிறாள்)

இப்படிக்கு தங்கள் மனைவி
ருத்ரா...


கலிங்கத்துப்பரணி என்ற குறும்படத்தில் இராணுவத்தில் பணியாற்றும் தன் கணவருக்கு ஒரு மனைவி எழுதுகின்ற கடிதம்தான் இது இதன் பிறகு வரும் இறுதி காட்சிகளை வீடியோவில் காணுங்கள்.




குறும்படம் பற்றி

நிறைய குறும்படங்கள் பார்ப்பதுண்டு மிகப்பிடித்த குறும்படங்கள் எல்லாவற்றையும் பிறகொருநாள் திரும்பவும் பார்த்து ரசிக்கலாம் என்ற நோக்கில் சேமித்து வைத்து வருகிறேன் அதுபோல இந்த குறும்படத்தையும் ஜஸ்ட் லைக்தட் என்று போய் விட முடியவில்லை. பதிவு செய்ய நினைத்தேன், செய்துவிட்டேன். A Genuine Cinema's Production's என்றுதான் ஆரம்பிக்கிறார்கள் உண்மையில் மிகவும் ஜெனுயூனாகத்தான் எடுத்திருக்கிறார்கள். இதில் நடிப்பை பற்றி கூறுவதற்கொன்றுமில்லை . இந்திய எல்லையில் போராடும் ஒவ்வொரு இராணுவவீரர்களுக்கும், அவர்களின் மனைவியருக்கும் என் சமர்ப்பணம் என்கிறார் இயக்குனர் ஹரீஷ் , கலிங்கத்துப்பரணியென்ற தலைப்பிற்க்கு அவர் சொல்லும் காரணம் கச்சிதம்.சொல்லவந்த கருத்திற்க்காகவும் சொல்லியவிதத்திற்க்காகவும் இயக்குனர் ஹரீஷ்ற்க்கு பாராட்டுகளும் நன்றிகளும் வெல்டன் ஹரீஷ்...! இசை பாண்டிச்சேரி yoofoone studio வைச்சேர்ந்த சுரேஷ் சபாபதியும் , ரவி பிரசாத்தும் அழகாக இசை கோர்த்திருக்கிறார்கள் இறுதிக்காட்சியில் சரியாக 6.45ல் ஆரம்பிக்கும் வயலின் இசை அட்டகாசம் அந்த இடத்தில் காட்சிக்குமட்டுமல்ல இந்த குறும்படத்திற்க்கே உயிர்கொடுத்திருக்கிறார்கள் பாராட்டுக்கள்..! 

இறுதியாக என் கிராமத்தில் இருக்கும் மக்களில் 25 சதவிகிதம் பேர் இராணுவத்தில் பணிபுரிகிறவர்கள்தாம், நண்பர்களின் தந்தைகள், என் வகுப்பறை தோழர்கள், பக்கத்துவீட்டு நண்பர்கள், அடுத்த தெரு நண்பர்கள் , என எங்கள் ஊரிலிருந்து இராணுவத்தில் பணியாற்றும் அத்தனை சகோதரர்களுக்கும் அவர்களின் மனைவியர்க்கும் இந்த நேரத்தில் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜெய்ஹிந்த்..!

October 26, 2011

தீபாவளி வாழ்த்துகள்..!

பதிவுலக நண்பர்கள், உறவுகள், வாசக வாசகியர்கள், ரசிக ரசிகைகள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்..!


October 17, 2011

இரத்தத்தின் இரத்தமே... இனிய உடன் பிறப்பே..!

யாவரும் நலம் சுசி சாதாரணமா பிளாக்ல கமெண்ட் போட்டுதான் அறிமுகமானாங்க...ஆரம்பத்தில இருந்து இப்போ வரையிலும் ஒரே மாதிரி அதே சகோதர பாசத்தோட பழகுறவங்க, இவங்களுக்கு நிறைய ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க அதுல நானும் ஒருத்தன் அப்படின்றதில பெருமையெனக்கு பின்ன நார்வேல எனக்கு ஒரு அக்கா இருக்காங்க அப்படின்னு எல்லார்கிட்டயும் காலர் தூக்கிவிட்டு பெருமையடிச்சுகிடலாம் இல்லையா?...!

இவங்ககிட்ட பிடிச்சது என்னன்னா? என்னைப்போலவே எந்த ஒரு விஷயமானாலும் அது சந்தேகமா இருந்தாலும் சண்டையா இருந்தாலும், பிளாக் பற்றிய விஷயமானாலும் மெயில்லயோ சாட்லயோ ஸ்ட்ரெயிட்டா கேட்டிடுவாங்க..என்னோட பல மொக்கைகளை சூப்பர்ன்னு நிறைய தடவை சொல்லி பலரோட வயித்தெரிச்சலை வாங்கிக்கட்டிக்கிட்டவங்க...!இது வரைக்கும் இவங்களுக்கு பொறாமையோ இல்லை கோவமோ வந்து பார்த்ததில்லை. என்னோட பிளாக்குக்கு கமெண்ட் போட்டா உன் பிளாக்குக்கு கமெண்ட் போடுவேன் அப்படின்ற உள்குத்து வேலையெல்லாம் இவங்களுக்கு தெரியாது பிடிச்சுருந்தா கமெண்ட் போடுவாங்க...!

என்னோட மொக்கைகள், கவிதைகள், சில கிரியேட்டிவ் பதிவுகளின் வளர்ச்சியில இவங்களுக்கும் பங்கிருக்கு..( ஓ இவங்களைத்தான் தேடிட்டு இருக்கோம் அப்படின்னு யாரும் அட்ரஸ் கேட்டு ஆட்டோ பிடிச்சு போய்டாதீங்க பாவம் எனக்காக அவங்கள மன்னிச்சு விட்டுடுங்க ப்ளீஸ்).. முக்கியமா ஒரு விஷயம் கர்ப்ப கால காதல் அப்படின்ற ஒரு போஸ்ட் படிச்சுட்டு அதுபத்தி என்கிட்ட அவங்க கேட்டது தம்பி இவ்ளோ நாளா ஒன்னா மண்ணா பழகிட்டு கல்யாணம் ஆனதை என்கிட்ட சொல்லவேயில்ல பாரு அப்படின்னு ஒரு கேள்விய கேட்டு என்னை ஒரு வழி பண்ணிட்டாங்க அப்பவும் இப்பவும் நான் சொல்றது ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு கற்பனை அப்படின்ற விஷயம் .. அதுக்கப்பறம் அதுபத்தியெல்லாம் கேட்கமாட்டாங்க..

எனக்கு தெரிஞ்சு என்னைபத்தி எல்லா விஷயமும் இவங்களுக்கு தெரியும் அவங்களைப்பத்தி அவங்க பிளாக் வச்சே கண்டுகினலாம் அவ்ளோ அழகா ஒரு குடும்பத்தில நடக்குற விஷயங்களை சுவாரஸ்யமா எழுதுவாங்க , பதிவுகளுக்கு இவங்க வைக்கிற தலைப்புகளும், லேபில்களும் ரசனையா இருக்கும் கமெண்ட்ஸ் மத்தவங்களுக்கு போடறதும் சரியா இருக்கும் யாரோட மனசும் புண்படாம வாழ்த்தா இருந்தாலும் பாராட்டா இருந்தாலும் அள்ளி அள்ளி கொடுக்குற மனசு..(அக்கா மறக்காம நார்வேல என் பேர்ல ரெண்டு கிரவுண்ட் எழுதி வச்சிடணும் நீங்க சொன்ன மாதிரியே எழுதிட்டேன்)

பிளாக் நண்பர்கள் அப்படின்னா என்னை பொருத்தவரைக்கும் எல்லார்கிட்டயும் சொல்றது ரயில் சிநேகம் அப்படின்னுதான் ஆனா இவங்க மட்டும் என்னோட லைஃப் ஃபுல்லா சிநேகமா பாசமா இருக்கணும்ன்னு விரும்பறேன் நாளைக்கே ச்சே இன்னிக்கே அக்கா மெயிலுக்கு என்னைப்பத்தி இவன் ரொம்ப மோசமானவன் இவன்கிட்ட உனக்கென்ன பழக்கம் வேண்டியிருக்கு அப்படின்னு தப்பா பெட்டிஷன் ரிப்பீட் பண்றவங்க நோட் பண்ணிக்கங்க..நீங்க என்ன சொன்னாலும் என்னை உபி என்று அழைப்பதை அவங்க யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டாங்க..

இன்னிக்கு அக்காவுக்கு பிறந்தநாள் ரொம்ப நாளைக்கு மாமா குணாவோடயும் குழந்தைகள் சதுர்ஜன்,அம்முவோடு பல்லாண்டு காலம் தீர்க்காயுசாக சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று பிறந்தநாள் வாழ்த்துகள் கூறி ஆசிகளையும் வாங்கிக்கொள்கிறேன்.. Many More Happy Returns Of The Day..!



இவர்கள் விஜயின் தீவிர ரசிகை..!