அறையெங்கும் சந்தனமணத்தை பரப்பிக்கொண்டிருந்தது அந்த சாண்டல் அகர்பத்தி சந்தன வாசத்தை நுகர்ந்தவாறே மெத்தையில் உட்கார்ந்திருந்த என்னிடம் ''சுளுக்கெடுத்துவிடறேன் கொஞ்சம் காலை நீட்டுங்க'' என்று சொல்லியவாறு என்னுடைய காலை எடுத்து அவளின் மடியில் வைத்து ஒவ்வொரு விரலையும் முன்னும் பின்னும் இழுத்து இழுத்து பார்த்து சுளுக்கு எதுவும் இல்லையென்றதும் , ''என்னங்க சுளுக்கே விழ மாட்டேன்னுது'' என்றவளிடம் ''நீதான் நேற்றே சுளுக்கெடுத்துவிட்டாயே இன்றைக்கு எப்படி இருக்கும்'' என்றேன் நமுட்டு சிரிப்புடன் , அதற்கு அவள் களுக்கென்று சிரித்துக்கொண்டே தலையணையில் முகம் புதைத்துக்கொண்டாள், வெட்கமாம்.
தலையணையில் முகம் புதைத்தவளிடம் அட ரொம்பத்தான் வெட்கப்படுகிறாய் நீ, சென்ற மாதம் நீ ஊருக்கு போயிருந்த நேரத்தில் உன் தலையணை என்னிடம் நிறைய முத்தங்களை வாங்கி வைத்திருக்கிறது இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் அந்த முத்தத்தையெல்லாம் உனக்கு மாற்றிவிடும் பரவாயில்லையா என்றதும் ச்சீய் தலையணைக்கு போய் யாராவது முத்தம் கொடுப்பார்களா என்று கண்களை அகலவிரித்து தலையணையை நோக்கி உன்னை பிறகு கவனித்துக்கொள்கிறேன் என்கிற மாதிரி ஓரக்கண்ணில் பார்த்துவிட்டு என்னை நோக்கி வந்தவள் முத்தமழை பொழிந்துவிட்டாள், கேட்டால் கட்டணமில்லா முத்த ட்ரான்ஸ்ஃபர் செய்துவிட்டது தலையணை என்கிறாள். ஆஹா தலையணை மந்திரம் வேலை செய்கிறதே என்று நினைத்துக்கொண்டேன் மனதிற்குள்.
ஆமாங்க இந்த தலையணை மந்திரம் தலையணை மந்திரம் என்று சொல்கிறார்களே அது என்ன மந்திரம் என்று குப்புற படுத்திருந்த என் முதுகில் முட்டை முட்டையாக கை விரல்களால் கோலமிட்டுக் கொண்டே வினவியளை ஆச்சரியமுடன் பார்த்தேன் நாம் மனதிற்குள் நினைத்தது இவளுக்கு கேட்டுவிட்டதோ என்று நினைத்துக்கொண்டே அதுவா செல்லம் அதற்கு நீ என்னிடம் என்ன செய்கிறாயோ அதற்கு எதிர்பதமாக நான் உன்னிடம் செய்வேன் அதுதான் என்றதும் . என்னவோ புரிந்திருக்க வேண்டும் சட்டென்று விரல்களால் கோலமிடுவதை நிறுத்தி கோவத்துடன் என் இரண்டு கன்னங்களிலும் தன் ஐந்து கைவிரல்களும் பதியுமாறு ஓங்கி பளாரென்று அடித்துவிட்டு ஆளும் மூஞ்சியும் பாரு என்றவளின் கன்னங்களில் பதிலுக்கு முத்தமிட ஆரம்பித்தேன்.இப்பொழுது அவளுக்கு புரிந்துவிட்டிருந்தது முதலில் சொன்னது போலி தலையணை மந்திரமென்று.
அப்படியே தூங்கிவிட்டேன் போலிருக்கிறது காலையில் நான் படுத்திருந்த பொசிசனை பார்த்தவள் சிரித்துக்கொண்டே ''கால் நீட்டி தூங்கும் காண்டா மிருகம் அடடடே ஆச்சரியக்குறி'' என்று நக்கலடித்த படியே காபி சாப்பிடுங்க ஆறிடப்போவுது என்று காபியை கொண்டுவந்து டீஃபாய் மீது வைத்துச்சென்றாள். நான்தான் நக்கல் பிடித்தவன் என்றால் இவள் நக்கலை குத்தகைக்கே எடுத்திருப்பாள் போல இன்னைக்கு இரவு இருக்கிறதடி உனக்கு என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே அவள் குடுத்த காபியை குடித்துவிட்டு வழக்கம்போலே அன்றைய இரவு டின்னருக்கான மெனுவை ஸ்டிக்லேபிளில் எழுதி டீ கப்பின் அடியில் ஒட்டிவிட்டேன்.
அன்றைக்கு அலுவலகத்தில் அதிகப்படியான வேலையால் சோர்ந்து போய் வீடு திரும்பினேன். வீடு திறந்துதான் இருந்தது கவி , கவி என்றழைத்தபடியே வீடு முழுவதும் தேடினேன் ஆளையே காணோம் என்னை வெறுப்பேற்றுவதற்காக எங்கேயாவது ஒளிந்திருந்து விளையாட்டு காட்டுவாளாக்கும் என்று நினைத்தபடிஉடை மாற்றிவிட்டு பெட்ரூமிற்குள் நுழைந்ததும், நான் நினைத்தபடியே உள்ளே ஒளிந்திருந்த அவள் சட்டென்று கதவை சாத்திவிட்டு என்னை கட்டிப்பிடித்து முகம் நிறைய முத்தம் கொடுத்தாள். முத்தம் கொடுக்க வெட்கப்படுபவள் இப்படி முத்தமழை பொழிவது ஆச்சரியமாய் இருந்தது. இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சு என்றேன்? நீங்க இன்னிக்கு டின்னர்க்கு என்ன எழுதியிருந்தீங்க என்று கேட்டதும்தான் காலையில் அவளுக்கு விளையாட்டாய் மெனுவில் ''முத்த தோசை'' என்று எழுதிக்கொடுத்தது ஞாபகத்தில் வந்தது , அலுவலகத்தில் நடந்த அதிகப்படியான வேலை அழுத்தத்தில் காலையில் அவளுக்கு எழுதிக்கொடுத்திருந்த மெனுவையும் மறந்திருந்தேன் நான். அவள் கொடுத்த டின்னரான முத்த தோசை முகத்தையும் மனத்தையும் நிறைத்தது.பதிலுக்கு காம டிப்ஸ் கொடுக்க ஆரம்பித்திருந்தேன் நான்.