February 20, 2012

திருமண அழைப்பிதழ் - அன்புடன் வரவேற்கிறேன்

இதுவரையிலும் எனக்கு அன்பும் ஆதரவும் அளித்துவந்த ப்ரியமுள்ள பதிவுலக நண்பர்கள் , உறவினர்கள் அனைவருக்கும் வணக்கம் . என்னுடைய திருமணம் வரும் மார்ச் மாதம் 4ம் தேதி [ 04-03-2012] நடைபெற இருக்கிறது. திருமணம் என்றால் நேரில்தான் அழைப்பிதழ் கொடுக்கவேண்டும் கம்பெனியின் மிகத்தாமத திருமண விடுப்பின் காரணமாகவும் , திருமண வேலைகள் வேறு ஆட்டிப்படைப்பதாலும் அனைவருக்கும் நேரில் அழைப்பு கொடுக்க’ இயலவில்லை ஒரு சிலருக்கே நேரில் அழைப்பு கொடுக்க வாய்த்தது ஆகவே அழைப்பு கிடைக்காதவர்கள் ப்ரிய மனது பண்ணி இதையே அழைப்பாக ஏற்றுக்கொண்டு என்னுடைய திருமண வைபவத்தில் கலந்துகொண்டு தங்கள் மேலான வாழ்த்துக்களால் எங்களை ஆசிர்வதிப்பீர்களாக..

ப்ரியமுடன்....
வசந்த் & ஜோ