குமரன்:ட்ரிங்..ட்ரிங்..ட்ரிங்..
நாராயணன்:ஹலோ என்னா மாப்ள?எப்பிடியிருக்க?என்ன திடீர்ன்னு கால் எல்லாம் பண்ற அதிசியமா இருக்கு..
குமரன் : மாம்ஸ் எப்படியிருக்கீங்க நான் நல்லாயிருக்கேன்..திடீர்ன்னு உங்க ஞாபகம் வந்துச்சு அதான் கூப்ட்டேன்..
நாராயணன் : அப்பறம் வீட்ல மனைவிமார் குழந்தைகள் எல்லாம் எப்பிடியிருக்காங்க?
குமரன் : எல்லாம் நல்லாயிருக்காங்க மாம்ஸ் நாந்தான்..
நாராயணன் : என்னா மாப்பு நீதான்னு இழுக்குற..
குமரன் : இல்லை மாம்ஸ் அம்மா அப்பா நினைவாவே இருக்கு பாத்து ரொம்ப நாளாச்சு நாந்தான் சின்னவன் அவங்களைப்போயி பாக்கணும்ன்னு நினைக்கலை . அவங்க பெரியவங்கதானே என்னை வந்து பாக்கணும்ன்னு நினைக்கலை பாத்தீங்களா?
நாராயணன் : நீதான அவங்களோட சண்ட போட்டுட்டு போன நீதானே போய் பெரியவங்களை பார்க்கணும்..
குமரன் : அதுவுஞ்சரிதான்..இந்த கொஞ்ச நாள்ல என்னை பத்தி எதுவும் கேட்டாங்களா மாம்ஸ்..
நாராயணன் : ம்ம் கேப்பாங்க நீ என்ன பண்ற இப்போ எங்க இருக்கன்னும், உன்னோட குழந்தைகளைப்பத்தியும் விசாரிப்பாங்க..நீ பேசுறது சரியாவே கேக்கலை சிக்னல் நல்லா கிடைக்குதா?
குமரன் : என்ன மாம்ஸ் இப்பிடி சொல்லிட்டீங்க இந்த செல் போன் டவரே நான் இருக்குற இடத்துக்கு பக்கத்துல தான் இருக்கு பின்ன எப்பிடி கேக்காம போகும்..
நாராயணன் : இப்ப சரியா கேக்குது மாப்ள..அது சரி இப்ப நான் என்ன பண்ணனும்?
குமரன் : எனக்கு அப்பாவையும் அம்மாவையும் பாக்கணும் போல இருக்கு இப்ப நான் அவங்கள பாக்க வரலாமான்னு போன் பண்ணி கேட்டு சொல்றீங்களா?
நாராயணன் : சரிடா மாப்ள..கேட்டுட்டு உனக்கு போன் பண்றேன்..வச்சுடுறேன்..
குமரன் : மாத்தி எதுவும் சொல்லி திரும்பவும் பிரச்சனைய கிளப்பிடாத மாம்ஸ் சரியா உன்னோட கால்க்கு வெயிட் பண்ணிட்டு இருப்பேன்..
நாராயணன் : ஹ ஹ ஹா சரிடா..
நாரயணன் : ட்ரிங்..ட்ரிங்..ட்ரிங்..
பரமன் : ஹல்லோ..
நாராயணன் : ஹலோ மச்சான் நான் தான் நாராயணன் பேசுறேன்..
பரமன் : சொல்லு மச்சான் எப்படியிருக்க?
நாராயணன் : நான் நல்லாயிருக்கேன் மச்சான் அக்கா எப்படியிருக்கா?
பரமன் : அவளுக்கென்ன என் பாதி உசிரை எடுத்துட்டு நல்லாத்தான் கெளுத்தியாட்டமிருக்கா
நாராயணன் : மச்சான் இருந்தாலும் உன்னோட ஆட்டம் அடங்கமாட்டேன்னுது பாத்தியா?
பரமன் : உண்மையத்தன சொன்னேன்..அது சரி எதும் விஷயமில்லாம போன் பண்ண மாட்டியே இப்ப என்ன விஷயம் சொல்லு..
நாராயணன் : குமரன் போன் பண்ணுனான் மச்சான் அதான் உம்மவன்..உன்னையும் அக்காவையும் பாக்கணும் போல இருக்காம்..
பரமன் : அவந்தான் ரோஷக்காரனச்சே இப்ப என்னவாம் துரைக்கு பாசம்?
நாராயணன் : என்ன மச்சான் அவந்தான் சின்னப்பையன் நீங்களாவது விட்டுக்குடுத்து போகக்கூடாதா?
பரமன் : ம்ம் எதுக்கும் பெரியவன் கணேஷ கேட்டுட்டு சொல்றேன்...
நாராயணன் : இப்போ அவன் எங்க இருக்கான் ?
பரமன் : அவன் எங்கயாச்சும் எதுனாலும் மரத்தை ஆராய்ச்சி பண்றேன்னுட்டு ஊரெல்லாம் சுத்திட்டு இருப்பான்..
நாராயணன் : சரி மச்சான் கேட்டுட்டு எனக்கு போன் பண்ணு உம்மவன் வெயிட் பண்ணிட்டு இருக்கான்...
பரமன் : ட்ரிங்..ட்ரிங்..ட்ரிங்..
கணேஷ் : ஹலோ என்னப்பா இந்நேரத்துல கூப்டுற சாப்பாடுரெடியா?
பரமன் : தின்னிப்பயலே தின்றதுலயே இரு இப்பிடி தின்னு தின்னுதான் பானை மாதிரி வயித்த வச்சுட்டு திரியுற...
கணேஷ் : சீ போப்பா உனக்கு எப்பவுமே கிண்டல்தான்.. என்ன விஷயம்ன்னு சொல்லு?
பரமன் : எலேய் உன் தொம்பி நம்மளைப்பாக்கணுமாம் வரச்சொல்லவா?
கணேஷ் : என்னப்பா எங்கிட்ட போயி கேட்டுட்டு வரச்சொல்லுங்க..
பரமன் : என்னடா உனக்கு கோபமில்லியா?
கணேஷ் : ஏன் அவன் தான சண்டை போட்டுட்டு போனான் நானா சண்டை போட்டேன்..?
பரமன் : அதுசரி..சரிடா அப்ப அவன நாளைக்கு வரச்சொல்றேன் ஊர் ஊரா சுத்தாம நாளைக்காச்சும் வீட்ல இருடா..பின்ன திரும்பவும் சண்டை போட்டுட்டு போயிடப்போறான்..
கணேஷ் : சரி சரி..
பரமன் : ட்ரிங்...ட்ரிங்..
நாராயணன் : என்ன மச்சான் மூத்தவன்ட்ட பேசுனியா ?
பரமன் : பேசுனேன் நாளைக்கு வரச்சொல்லு மச்சான் அவன..வரும்போது பேரப்புள்ளைகளையும் கூட்டிட்டு வரச்சொல்லு..
நாராயணன் : சரி சரி தாத்தா பாசம் பொங்கி வழியுது போல வச்சுடுறேன்..
நாராயணன் : ட்ரிங் ட்ரிங்..
குமரன் : என்ன மாம்ஸ் என்ன சொன்னாரு அப்ஸ்?
நாராயணன் : ம்ம் எல்லாம் நல்ல விஷயம்தான் நாளைக்கு உன்னை வரச்சொன்னாரு க்குடவே புள்ளைகளையும் கூட்டிட்டு போ மாப்ள..
குமரன் : ரொம்ப சந்தோசம் மாம்ஸ் மாம்ஸ்னா அது நீதான் சண்டை போட்ட குடும்பத்தையும் ஒண்ணா சேத்து வச்சுட்டியே தாங்ஸ் மாம்ஸ்..நாளைக்கு அந்தப்பக்கம் நீ வந்துடாத..வந்தா கொன்ன்னே போடுவேன்...
நாராயணன் : ஹ ஹ ஹா....
(குமரன்=முருகன்,நாராயணன்=நாராயணன்,பரமன்=பரமசிவன்.கணேஷ்=விநாயகன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க)