வர வர இவர் சரியில்லை என்கிட்ட சரியா பேசறதில்லை என்னை தவிர்த்துடறார் என்ன காரணம்ன்னே தெரியலை என்னை அவாய்ட் பண்ணுனார் கீதா உனக்குத்தான் தெரிஞ்சிருக்குமே நாம நல்லா பழகுற ஒருத்தர் காரணமில்லாம நம்மளவிட்டு விலகிப்போனா நம்மளால தாங்கிக்க முடியாதுதானே அதான் கோவம் வந்து அடிச்சுட்டேன் இப்போ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் ஏன் இவர் என்னை அவாய்ட் பண்ணனும்?
"ஏண்ணா நீ அப்டி பண்ணுன அட்லீஸ்ட் போன் பண்ணியாச்சும் சொல்லியிருக்கலாம்ல நீ அவளுக்கு?"
"இல்ல கீதா ஆபிஸ்ல அன்னிக்கு வேலை ஜாஸ்தி மொபைல் கூட சார்ஜ் சுத்தமா தீர்ந்துடுச்சு"
உச்சி மண்டையில சுர்ருன்னு கோபம் வந்து நித்யா "திரும்ப திரும்ப பொய் மேல பொய் சொல்லி என்ன பத்ரகாளியா மாத்தாதீங்க வசந்த் அப்பறம் நான் மனுஷியாவே இருக்க மாட்டேன் ,இப்போ உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும் என் கூட வர முடியுமா?முடியாதா?"
"எங்க?"
"எங்கன்னு எல்லாம் சொல்ல முடியாது வர முடியுமா முடியாதா?"
"போகலாம் வா!"
முன்னாடி வேகமா நடந்து போன நித்யா அவளோடா ஆக்டிவா ஸ்கூட்டரை ஸ்டார்ட் பண்ணுனா பின்னாடி என்னை உட்கார சொன்னா நானும் பின்னாடி உட்கார்ந்து அவளோட போனேன்
வண்டி எடுத்த வேகத்துலயே பறக்க ஆரம்பிச்சுச்சு வண்டி போற ரூட்ட பார்த்தா எக்கோ பார்க்தான் போவான்னு நினைச்சேன் சரியா அங்கதான் போனா வண்டிய பார்க்கிங்க்ல போட்டுட்டு ரெண்டு பேரும் உள்ளாற போனோம் அன்னைக்கு ஆள் நடமாட்டம் கொஞ்சம் குறைவாத்தான் இருந்துச்சு ரெண்டு பேரும் புல் தரையில உட்கார்ந்தோம் ஒரு பத்து நிமிசம் அவ என்கிட்ட எதுவுமே பேசலை
என்ன நித்யா என்கிட்ட எதுவோ பேசணும்ன்னு கூட்டிட்டு வந்திட்டு இப்படி பேசாம இருந்தா என்ன அர்த்தம்ன்னு கேட்டுட்டு அவ பக்கம் திரும்புனா முழங்காலை மடக்கி முகத்தை அதுல வச்சு குலுங்கி குலுங்கி அழுதிட்டு இருந்தா
என்னால அவ அழுவறதை தாங்க முடியலை "என்னாச்சு நித்யா ஏன் இப்போ அழுவுற"ன்னு கேட்டேன்
"போடா அழறதையும் அழ வச்சிட்டு இப்போ இப்போ ஏன் அழுவுறன்னு வேற கேட்குறியா?"
அவ கோபத்துல போடான்னு சொல்றது கூட அழகா இருந்துச்சு "சரி என்னாச்சு இப்போ?"
ஏண்டா இப்பிடி பண்ற? ஏன் இப்படி இம்சை பண்ற ? கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் எவ்வளவு சந்தோசமா இருந்தேன் தெரியுமா? இப்போ உயிரோட ஏன் என்னை கொல்லுற?
நீ முதல்ல கண்ணை தொடச்சிக்கோ ப்ளீஸ் அப்பறம் நான் சொல்றேன்
நான் சொன்னதும் கர்ச்சீப் எடுத்து கண்ணை தொடச்சிக்கிட்டா லேசா மூக்கை உறிஞ்சுகிட்டே "ம்ம் சொல்லு"ன்னாள்
"நீ என்னை லவ் பண்றேன்னு தெரியும் நித்யா" நான் கண்டு பிடிச்சுட்டேன்
ஆமா பெரிய உலக அதிசயம் இவரு கண்டு பிடிச்சுட்டாரு ஆமா நான் உன்னை லவ் பண்றேன் உன்கிட்ட சொன்னது இல்ல அதுக்கென்ன இப்போ?
"இந்த காதல் வேணாம் நித்யா!"
"ஏன்? என்னை பிடிக்கலியா ?என்னை விட பணக்காரியா அழகானவளா எதிர்பார்க்குறியோ?"
"இல்லை நித்யா உன்னைப்போய் யாராச்சும் பிடிக்கலைன்னு சொல்ல முடியுமா?"
"அப்புறம் என்ன?"
"இல்லை நித்யா நான் உனக்கு பொருத்தமானவன் இல்லை"
"ஏன் அப்பிடி சொல்ற?"
என்ன நித்யா நீ எவ்வளோ வசதியான வீட்டு பொண்ணு நீ உனக்கு நிறைய சொத்து இருக்கு கார் இருக்கு பங்களா இருக்கு நிறைய படிச்சுருக்க உனக்குப்போய் நான் சரிவராது நித்யா உனக்கேத்த மாதிரி வசதியான வீட்டை சேர்ந்த பையன் தான் உனக்கு சரி
உனக்கு என்னடா குறைச்சல் இந்த ஊர்லயே எனக்கு நீதான் அழகா தெரியுற நல்ல வேலையில இருக்க குடும்பத்தை நடத்தற அளவுக்கு வருமானம் இருக்கு இதை விட வேறென்ன எனக்கு வேணும்?
"அதெல்லாம் சரியா வராது நித்யா ப்ளீஸ் சொன்னா கேளு"
இப்போ உனக்கென்ன பிரச்சினை நான் உன்னைவிட வசதியா இருக்கேன்ன்னுதான சொல்லு இப்பவே என்னோட சொத்து சொந்தம் எல்லாத்தையும் விட்டுட்டு வந்துடறேன் அப்போ சரின்னு சொல்லுவியா?
சே சே எனக்காக எதுக்கு உன்னோட சொந்தபந்தத்தையெல்லாம் விட்டுட்டு வரணும்
"பின்ன ? நான் என்ன பண்ணுனா நீ என்னை லவ் பண்ணுவன்னு சொல்லு?"
அப்படியே சொல்லிவிட்டு திரும்பவும் முழங்காலுக்குள் முகம் புதைத்து அழ ஆரம்பித்துவிட்டாள் இந்த முறை அழுகை பலமானதாகவே இருந்தது என்னால அதுக்கு மேல என்னோட அழுகைய கட்டுப்படுத்த முடியாம சே எனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வர்றேன்னு சொல்றாளேன்னு நினைச்சு எனக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
"வேணாம் நித்யா சொன்னா புரிஞ்சுக்கோ!"
அவ அவ்வளவு சொல்லியும் பலவந்தமா நான் அவளோட காதலை ஏற்க மறுத்தேன் இன்னும் அவளோட அழுகை அதிகமாகி விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள்
ஏண்டா என்னை புரிஞ்சுக்க மாட்டேன்ற நான் இவ்வளவு சொல்லியும் நீ புரிஞ்சுகிடவே இல்லைல எப்போதாண்டா என்னை புரிஞ்சுக்குவ ஒரு வேளை நான் உயிரை விட்டுட்டா புரிஞ்சுகிடுவியா?
"அவ சொல்லி முடித்த மறு நிமிடம் நான் அவளோட கண்ணாத்தில் பளார் என்று அறைந்தேன்"
நீ போய்ட்டா நான் மட்டும் சந்தோஷமா இருப்பேனா நித்யா? நீன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் நித்யா என்னை கட்டிகிட்டு நீ கஷ்டப்படக்கூடாதுன்றதுக்காகத்தான் இப்படில்லாம் நடந்துகிட்டேன்
உன்னை கட்டிகிட்டா கஷ்டப்படுவேனா "உன்னை கட்டிக்கிடலைன்னாத்தாண்டா உயிரே போனமாதிரி கஷ்டப்படுவேன்"
சொன்ன நித்யா பட்டென்று தன்னோட உதடுகளை என் உதட்டோடு பொருத்திக்கொண்டாள் நான் எதிர் பார்க்கவேயில்லை அவள் கூந்தல் நறுமணமும் பட்டு மாதிரியான உதடுகளும் உதடு ஓரம் வழிந்த தேன் போன்ற ஈரமும் என்னை மறக்க செய்தது அப்படியே என்னை இறுக கட்டிக்கொண்டாள் .
ரொம்பவே இருட்டிவிட்டிருந்தது நானும் நித்யாவும் எவ்வளவு நேரம் அப்படி இருந்தோம் என்றே தெரியாமல் உலகை மறந்து இருந்தோம் .
"இங்க பார்டா சூப்பர் பிட்டு ஓடுது" என்ற சத்தம் கேட்டு சட்டென்று விலகி திரும்பினோம்
அங்கே நான்கு இளந்தாரிகள் நின்று எங்களை என்று சொல்வதை விட நித்யாவை ஒரு வித வெறியுடன் பார்த்தனர் அவர்களின் உடையையும் பாவனைகளையும் பார்க்கையில் யோக்கியமானவர்களாக தெரியவில்லை
"நானும் நித்யாவும் கொஞ்சம் சுதாரித்து எழுந்து ஓட ஆரம்பிக்கலானோம்"
அவர்கள் எங்களை துரத்த ஆரம்பித்திருந்தனர்
தொடரும்
.