ஊருக்கு போயிருந்த மிஸஸ் வந்துட்டாங்க...
Mr. ஸ்பிரிங் : ஹேய் போயம் இங்க வா ஆபிஸ்ல இருந்து வந்து எவ்ளோ நேரமாச்சு சூடா ஒரு கப் காபி கேட்டேனே என்னாச்சு?
Mrs ஸ்பிரிங் : இந்தா பாருங்க மாமா எங்கப்பாரு ஆச ஆசயா கவிதான்னு அழகா பேரு வச்சத இப்படி போயம்ன்னு கூப்பிடறது கொஞ்சம் கூட நல்லா இல்ல
Mr. ஸ்பிரிங் : என்னடி இது பேரு கவிதா கொவிதான்னுட்டு ஊரு உலகத்துல அவன் அவன் அவங்க பொண்ணுகளுக்கு எந்த பேர் வைக்கிறதுன்றது புத்தகம் வாங்கி அதுல இருந்து ஸ்மிதா, ஸ்வர்ணா, சொப்னான்னு அழகா பேர் வைக்கிறானுங்க உங்கப்பாரு என்னடான்னா கவிதான்னு பழைய கிழவிகளுக்கு வைக்கிற பேர் எல்லாம் வச்சிருக்காரு..
Mrs ஸ்பிரிங் : த பாருங்க மாமா இந்த ஜாட மாடயா கிழவின்னு சொல்ற வேலை வச்சுகிட்டீங்க அப்ப்பறம் தினமும் ராத்திரிக்கு பட்டினிதான் சொல்லிட்டேன் எங்கப்பாரு ஏன் எனக்கு அந்த பேர் வச்சாருன்னு தெரியுமா உங்களுக்கு?
Mr. ஸ்பிரிங் : ஆமா எதுக்கு வச்சிருக்கப்போறாரு அவரோட முதல் காதலி பேரா இருந்திருக்கும் இல்லாங்காட்டி உங்க பாட்டி பேரா இருந்திருக்கும்
Mrs ஸ்பிரிங் : வாய்யா என் மாப்ள உங்கள கவனிக்கிற விதத்துல கவனிச்சாத்தான் நீங்க சரிப்படுவீங்க ராத்திரி காலை சொரண்டுவீங்கல்ல அப்போ அந்த கெரண்ட கால கரண்டியில அடிக்கிறேன்..ஏன் எனக்கு அந்த பேர் வச்சாங்கன்னு கேளுங்கன்னா...
Mr. ஸ்பிரிங் : சரி சொல்லித்தொலை
Mrs ஸ்பிரிங் : எங்கப்பாவும் எங்கம்மாவும் காதல் செஞ்சு கல்யாணம் பண்ணிகிட்டவங்க நான் பொறந்ததும் எங்கப்பா எங்கம்மாகிட்ட எனக்கு என்ன பேர் வைக்கலாம்ன்னு கேட்ருக்கார் அதுக்கு எங்கம்மா சொன்னாங்களாம் நீங்க என்னை காதலிக்கிறப்போ எழுதுன கவிதைகள் ஒண்ணு கூட எனக்கு பிடிக்கல ஆனா கல்யாணம் ஆனப்பிறகு நீங்க எழுதுன இந்த கவிதைதான் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்குன்னு என்னப்பார்த்துகிட்டே சொன்னாங்களாம் அதனால எங்கப்பாரு எனக்கு கவிதான்னு பேர் வச்சுட்டாங்க மாமோய்...
Mr. ஸ்பிரிங் : மானங்கெட்ட குடும்பமா இருக்கும் போல அடச்சேய் இதெல்லாம் போய் அவங்க கிட்ட கேட்ருக்கியே உனக்கு வெட்கமா இல்ல?
Mrs ஸ்பிரிங் : அய்ய தோ பார்டா அது என் பாட்டி எனக்கு சொல்லி தெரிஞ்சுகிட்டேன்,அது இருக்கட்டும் உங்களுக்கு ஏன் அந்த பேர் வச்சாங்க?
Mr. ஸ்பிரிங் : இது இப்போ ரொம்ப முக்கியமா?
Mrs ஸ்பிரிங் : அப்பறம் நீங்க என் பேரை டேமேஜ் பண்ணுனதுல பாதியாச்சும் உங்க பேரை நான் டேமேஜ் பண்ணலைன்னா நான் ஜக்கம்மா பரம்பரையில வந்தவளே இல்லை. சொல்லுங்க என் செல்லம்ல சொன்னீங்கன்னாத்தான் காபி கிடைக்கும் ஆமா!
Mr. ஸ்பிரிங் : அது நான் வசந்த காலத்துல பிறந்ததால வசந்த்ன்னு பேர் வச்சாங்கன்னு எங்கப்பா சொல்லியிருக்கார்..
Mrs ஸ்பிரிங் : அடடடா நீங்க குளிர் காலாத்துலயும் கோடை காலத்துலயும் பொறக்காம போய்ட்டீங்களே மாமா!
Mr. ஸ்பிரிங் : ஏன்?
Mrs ஸ்பிரிங் : இல்லை குளிர் காலத்துல பொறந்திருந்தா குளிர்குமாருன்னும், கோடை காலத்துல பொறந்திருந்தா கோடைகுமாருன்னும் பேர் வச்சுருப்பாங்க இல்லயா அதச்சொன்னேன்..
Mr. ஸ்பிரிங் : அட அட எம்புட்டு அறிவுடி உனக்கு உன்னை உங்கப்பாரு சுடுக்காட்டுதலையன் பெத்தாரா இல்லை கடையில செஞ்சு வாங்குனாரா?
Mrs ஸ்பிரிங் : என்னை திட்ட உங்களுக்கு உரிமை இருக்கு எங்கப்பாவ திட்டுற வேலை வச்சுகிட்டீங்கன்னா கணவன் தூங்கும் பொழுது கல்லை தூக்கி போட்டு கொன்ற மனைவின்னு நூஸ் வரும் பரவாயில்லையா?
Mr. ஸ்பிரிங் : கவிதை சரியீல்லைன்னா அதையெழுதுனவனத்தானடி திட்ட முடியும் கவிதையவா திட்ட முடியும் ? எப்பிடி உன்னோட ஸ்டைல்லயே உன்னை கவுத்துனேனா இல்லியா?
Mrs ஸ்பிரிங் : இருங்க என் ஸ்டைல் என்னான்னு காட்டறேன் ( சமையல் அறைக்கு சென்று காபி எடுக்க போகிறார் ஒரு கப்பில் காபியை எடுத்துகொண்டு வருகிறார் வந்ததும் Mr. ஸ்பிரிங் ன் முஞ்சியில் ஊற்றி விடுகிறார்)
Mr. ஸ்பிரிங் : அய்யோ அம்மாஆஆஆஆ
Mrs ஸ்பிரிங் : எப்பிடி மாமா நம்ம ஸ்டைலு? இதுதான் கவிதா ஸ்டைல் ஜாக்கிரத...