Showing posts with label முத்தம். Show all posts
Showing posts with label முத்தம். Show all posts

April 18, 2011

முத்தப்பால் - முத்தக்குறள்கள் (U/A)


முத்தப்பால் 




முத்தம் முதல இன்ப மெல்லாம் காதலி
பகவன் முதற்றே உலகு

முத்தமிட சத்தமின்றி முத்தமிட்ட பின்
பெறுக அதற்கு தக

முத்தப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
காமன் அடிசேரா தார்

காதலித்த பொழுதின் பெரிதுவக்கும் தன்முத்தத்தை
முதல்முத்தம் எனக்கேட்ட காதலி,

முத்தம் உயிருக்குள் உய்க்கும் முத்தமிடாமை
உயிரையும் எடுத்து விடும்

யாகாவா ராயினும் இதழ்காக்க காவாக்கல்
சோகப்பர் கற்பிழுக்குப் பட்டு

முத்ததோடு ஒத்த கூடல் பலகற்றும்
கல்லார் அதிர்ஷ்டமிலா தார்

முத்தம் எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
துன்பம் இலாத இன்பம்

எல்லா முத்தமும் முத்தமல்ல காதலர்க்கு
இதழ் முத்தமே முத்தம்

தொட்டணைத் தூறும் முத்தம் மாந்தர்க்கு
உணர்ச்சியை தூறும் காமம்

முத்தத்துள் முத்தம் இதழ்முத்தம் அம்முத்தம்
முத்ததிற்க் கெல்லாம் தலை

இதழுக்கு முத்தமில்லாத பொழுது சிறிது
கன்னத்திற்கும் ஈயப் படும்

எம்முத்தம் யார்யார்வாய் கொடுப்பினும் அம்முத்தம்
மெய்முத்தம் காண்ப தறிவு

உடலால் ஆகாதெனினும் முத்தம் தன்
மெய்வருத்த உணர்ச்சி தரும் 



- முத்தள்ளுவர்




,