September 28, 2011

ப்ரிய சிறைகள்..!





 
ஒத்திகை..!


தற்சமயம் 
நமக்கான வாழ்க்கையை
நம் இருவர் மனங்களும்
ஒத்திகை
பார்த்துக்கொண்டிருக்கின்றன
நீயும் நானும் அதை வேடிக்கை
பார்த்துக்கொண்டிருக்கிறோம்..!

----------------------------


 

ப்ரிய சிறைகள்..!


உனக்கான ப்ரியங்களை
நான் என்னிடமிருந்து
விடுவித்துக்கொண்டிருக்கிறேன்
நீ மறுபடியும் உன்னிடம்
அவற்றை சிறைபிடித்துக்
கொண்டிருக்கிறாய்..!




----------------------------



டிட்டோ...!

உனக்கேற்றபடி நான் 
எனக்கேற்றபடி நீ
நமக்கேற்றபடி காதல்
முதற்க்கொண்டு 
அத்தனையும்..!


( Note : இவையும் இனி வருபவையும் என் Engagementற்க்கு பிறகான கவிதைகள் ) 

15 comments:

Philosophy Prabhakaran said...

இனிமே எல்லாம் அப்படித்தான்... இனிமே எல்லாம் அப்படித்தான்...

ஸ்ரீராம். said...

வாழ்த்துகள் வசந்த்.

டிட்டோ கவிதை ரொம்ப ரசித்தேன்.

Unknown said...

ஒத்திகை மிக அருமை. வாழ்த்துக்கள்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

புன்னகையோடு இரசித்தேன், தேன்...

'பரிவை' சே.குமார் said...

டிட்டோ கவித்'தேன்' - ரசித்தேன்.

Nagasubramanian said...

cute poems.....

rajamelaiyur said...

//
உனக்கான ப்ரியங்களை
நான் என்னிடமிருந்து
விடுவித்துக்கொண்டிருக்கிறேன்
நீ மறுபடியும் உன்னிடம்
அவற்றை சிறைபிடித்துக்
கொண்டிருக்கிறாய்..!
//

அருமையான வரிகள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nice

சுசி said...

அழகு அழகு அழகு.. :))

Anonymous said...

கவிதைக்கு படங்களா?
படங்களுக்கு கவிதையா?
அழகான கவிதைகள்.....

ப்ரியமுடன் வசந்த் said...

கருத்தளித்த அனைவருக்கும் மிக்க நன்றிகள் :)

திவ்யாஹரி said...

வாழ்த்துக்கள் வசந்த்...

சாந்தி மாரியப்பன் said...

மீள முடியாத ப்ரியச் சிறைகளுக்குள் ஆயுட்காலமெல்லாம் அடைபட்டிருக்க வாழ்த்துகள் :-)

ப்ரியமுடன் வசந்த் said...

Thank u dhivya & shanthi madem ..

ராஜி said...

ஒத்திகை..!


தற்சமயம்
நமக்கான வாழ்க்கையை
நம் இருவர் மனங்களும்
ஒத்திகை
பார்த்துக்கொண்டிருக்கின்றன
நீயும் நானும் அதை வேடிக்கை
பார்த்துக்கொண்டிருக்கிறோம்..!
>>
இப்போ ஒத்திகை. திருமணத்திற்குபின் அரங்கேற்றமா?