Showing posts with label கல்யாணப்பரிசு. Show all posts
Showing posts with label கல்யாணப்பரிசு. Show all posts

July 9, 2010

என் மனைவிக்கொரு கடிதம்...!

என் ஆசை பொண்டாட்டியே நீ உன்னோட அப்பா வீட்டுக்கு போன இந்த நேரத்தில் நான் இங்க நான் உன்னோட வாழ்ந்த ஒவ்வொரு நிமிஷமும் திரும்பி நினைச்சுப்பார்த்து உனக்கே உனக்குன்னு எழுதும் கடுதாசி..

ஒரு நாள் அது நமக்கு திருமணமாகி ஒரு மூணு மாசமாயிருக்கும்ன்னு நினைக்கிறேன் ஆசையா புடவை வாங்கி கொடுங்கன்னு சொன்ன உன்னை என்னோட பல்சர்ல உட்கார வச்சு கடைக்கு கூட்டிட்டு போனேன் அப்போ கூட நீ எனக்கு பிடிச்ச வயலட் கலர் புடவை கட்டியிருந்த கடைக்கு போனதும் உனக்கு பிடிச்ச புடவை எடுத்துக்கோடின்னு சொன்னேன் நான், நீ அங்க இருந்ததுலயே ரொம்பவும் வெயிட்லெஸ் புடவை எடுத்த ஏண்டி நல்லா வெயிட்டா இருக்குற புடவை எடுக்க வேண்டியதுதானேன்னு கேட்ட என் கிட்ட நீ சொன்ன நீங்க கஷ்டப்படக்கூடாதுன்னுதாங்கன்னு , இத்தனைக்கும் அது ஒண்ணும் அவ்ளோ விலை குறைஞ்ச புடவையும் இல்ல , பின்ன ஏன் அப்படி சொன்னன்னு வீட்டுக்கு திரும்பி வர்ற வரைக்கும் எனக்கு புரியவே இல்லை கிட்டதட்ட ஒரு வாரம் கழிச்சு ஒரு ஞாயிற்றுகிழமை துணியெல்லாம் ஊற வச்சுருக்கேன் மறக்காம துவைச்சு போட்டுடுங்கன்னு சொல்லிட்டு மகளிர் சங்கத்துக்கு நீ கிளம்பி போனப்பத்தாண்டி எனக்கு புரிஞ்சுச்சு உன்னோட திட்டம்...

ஒரு நாள் நம்ம வீட்டுக்கு முன்னாடி பக்கத்துவீட்டு மாமியோட சேர்ந்து  பாத்திரம் விக்க வந்தவன்கிட்ட பாத்திரம் வாங்கிட்டு இருந்த அப்போ நான் காம்பவுண்ட் சுவத்துல கையவச்சு கன்னத்துக்கு முட்டுகுடுத்துட்டு நின்னுட்டு இருந்தேன் அப்போ பாத்திரக்காரன் ஒரு பெரிய சம்பாவை காட்டி இது எடுத்துக்கங்க மேடம் எதுவேணும்னாலும் கொட்டிவச்சுகிடலாம்ன்னு சொன்னான் அப்போ நீ சொன்ன அது ஏற்கனவே எங்க வீட்ல எதுவேணும்னாலும் கொட்டிக்கிற  ஒரு சம்பா இருக்கு நீ நான் கேட்ட ஃபரை பேன் இருக்கான்னு காட்டுன்னு சொல்லிட்டு பக்கத்து வீட்டு மாமியப்பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிச்ச நான் கூட உங்க அம்மா வீட்ல இருந்து கொண்டுவந்த சம்பாவைத்தான் சொல்றயாக்கும்ன்னு நினைச்சேன் கொஞ்ச நாள் கழிச்சு உன்கிட்ட கோவிச்சுகிட்டு பேசாம இருந்த ஒரு நாள்  ஆறிப்போன வத்தகொழம்பையும் சோத்தையும் வச்சுட்டு நம்ம பெட்ரூம் சுவத்தப்பார்த்து கொட்டிக்கங்கன்னு மூஞ்சிய சிலுப்பிட்டு நீ சொன்னப்பத்தான்டி புரிஞ்சுச்சு நீ அன்னிக்கு பாத்திரக்காரன்கிட்ட சொன்ன சம்பா எதுன்னு..

போன மாசம்ங்கூட உன்னோட ஃப்ரண்ட் மேரேஜ்க்காக வெளியூர் போயிருந்த நீ , போயிட்டு வந்ததும் நீ சொன்ன உங்க அப்பா அம்மா தங்கச்சி எல்லாம் மேரேஜ்க்கு போன இடத்துல பாத்தேன் எல்லாருக்கும் அவங்க சாப்பிடுறதுக்கு வேண்டியதை  வாங்கி கொடுத்து நல்லா கவனிச்சுகிட்டேன்னு சொன்ன எனக்கு ஆச்சரியமா போச்சு என்னடா இது அப்பாவையும் அம்மாவையும் கொஞ்சம் கூட கண்டுக்காத நம்ம பொண்டாட்டி இவ்ளோ நல்லவளா மாறிட்டாளேன்னு சந்தோஷப்பட்டு உன்னோட ஃப்ரண்ட் மேரேஜ் மதுரையிலா நடந்துச்சுன்னு கேட்ட எனக்கு நீ சொன்ன பதில் குற்றாலம் ஹும் ...


அப்புறம் ஒரு நாள் உன்னோட உயிர்த்தோழி போனவாரம் ஒரு படத்துக்கு போனோம் நல்லா இருக்குன்னு  நம்ம இரண்டு பேரும் அவங்க வீட்டுக்கு போனப்ப சொன்னாங்க நானும் சரி வாடி இந்த வார சண்டே அந்த படத்துக்கு போகலாம் அதான் உன் ஃப்ரண்ட் அந்த படம் நல்லாருக்குன்னு சொல்றாளேன்னு சொன்னேன் அதுக்கு நீ சொன்ன அவ சொல்றதெல்லாம் நான் கொஞ்ச நாளா நம்புறதே இல்லீங்க வர வர பொய்யா சொல்றான்னு சொன்ன , உன்னை பொண்ணு பாக்க வந்த என்னை ரொம்ப அழகா இருக்கேன்னு உன்கிட்ட சொன்னது அவங்கதான்னு ஒரு நாள் அவங்க என்கிட்ட சொன்னப்பத்தாண்டி  தெரிஞ்சுச்சு நீ அன்னிக்கு ஏன் அவங்க சொன்னதை நம்பமாட்டேன்னு சொன்னன்னு...


போன மாச டெலிபோன் பில் ஏண்டி என்கிட்ட காட்டலைன்னு கேட்டேன் கொஞ்ச நாளா ஞாபக மறதியா இருக்குங்கன்னு சொன்ன அப்புறம் ஒரு நாள் என்னோட பிறந்த நாளுன்னு வாழ்த்து சொன்ன நான் சொன்னேன் நாளைக்குத்தானே எனக்கு பிறந்த நாள் இன்னிக்கு ஏன் சொல்ற உனக்கு கிறுக்கா பிடிச்சுருக்குன்னு கேட்டேன் ஆமாங்கன்ன...பிறகொரு நாள் ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் சண்டைன்னு வந்தப்போ இவ்ளோ என் மேல கோபம் வச்சு என்கூட சண்டை போடற அப்புறம் ஏண்டி என்னை கட்டிகிட்டன்னு கேட்டேன் நீ சொன்ன நாந்தான் கிறுக்கியாச்சேன்னு சொல்லிட்டு கோவிச்சுகிட்டு உன் அம்மா வீட்டுக்கு போயிட்ட அதுதான் உன்கிட்ட நான் போட்ட கடைசி சண்டையும் கூட ...


இந்த சண்டையெல்லாம் நாம வாழ்ற வாழ்க்கையோட மறக்கமுடியாத ஞாபகமாத்தான் இருக்கே ஒழிய உன்மேல கொஞ்சங்கூட வெறுப்பு வரவே இல்லடி...உன்னை பிரிஞ்சு இந்த ஒரு மாசம் ரொம்ப கஷ்டமா இருக்குடி , ஆசையா நாம போட்டுகிட்ட சண்டை , ஒருத்தர் மேல ஒருத்தர் செல்லமா எடக்கு பேசிகிட்டது ,இது மட்டுமில்ல என்னதான் நீ சண்டை போட்டாலும் எனக்குன்னு பார்த்து பார்த்து செய்த சமையல் , இதுமட்டுமில்லாமல் எப்பவாது நான் உனக்காக எழுதுன கவிதையெல்லாம் எனக்கு தெரியாம எடுத்து படிச்சு அதுக்கு நீ எழுதுன பதில் கவிதையெல்லாம் உன்னோட பெர்சனல் லாக்கர்ல வச்சுருக்குறதை பார்த்த பிறகு,  உன்மேல இருக்குற அன்பு இன்னும் ஜாஸ்தியாகிடுச்சுடி இந்த லெட்டர் உன்கிட்ட சேருமா சேராதான்னு தெரியலை ஆனா என்னோட மனசு உனக்கு தெரிஞ்சு திரும்பி வருவன்னு நினைக்கிறேன் அட்லீஸ்ட் திரும்ப இந்த கடிதத்துக்கு பதில் கடிதமாச்சும் எழுதுவன்ற நம்பிக்கையில் உனக்கு இது போஸ்ட் பண்றேன்...


ப்ரியமுடன் வசந்த்
எழுதிய நாள் : 11-11-2012