விஜயகாந்த் :நிலாவுக்கு போறேன் நான்
தொண்டர் :என்னண்ணே திடீர்ன்னு?
விஜயகாந்த் :ஆமா இங்க இருந்தா 2010லயோ இல்லை 2016லயோ கூட ஆட்சிய பிடிக்க முடியாது அதான் மனுசனுங்க நிலாவுல இடமெல்லாம் வாங்கிட்டானுங்க அவங்க அங்க குடி போறதுக்கு முன்னாடியே நான் அங்க போயிட்டேன்ன்னா பின்னாடி அங்கயும் கட்சி தேர்தல்ன்னு வரும் பொலுது நான் தான் இங்க ஆதியில இருந்து வால்ற திராவிடன்னு சொல்லிக்கிடலாம்ல அதான் இப்போவே துண்டு போடப்போறேன்..
தொண்டர் :என்னாது துண்டு போடப்போறீங்களா?
விஜயகாந்த் :இல்லப்பா இடம் வாங்கபோறேன்னு சொல்லவந்தேன்
தொண்டர் :இன்னும் யாருமே வீடு கட்டலியே நீங்க அங்க போயி என்ன பண்ணபோறீங்க?
விஜயகாந்த் :அட நீயென்னப்பா புரிஞ்சுகிட மாட்ற!எனக்கு என்ன ரெண்டு புள்ளைங்க பிறந்துருச்சு இனிமேல் அவங்க வால்க்கைய அவங்க பாத்துகிடுவாங்க நான் நிலாவுக்கு போயி அங்க முதல்ல ஒரு வீடு கட்டப்போறேன்
தொண்டர் :அப்பறம்?
விஜயகாந்த் :அப்பறம் அங்க இடம் வாங்குன மக்கள் சும்மாவா இருப்பாங்க வீடு கட்டி குடி வருவாங்க அப்பறம் அவங்க புள்ளைகள படிக்க வைக்க ஸ்கூல் காலேஜ் இதெல்லாம் வேணும்ல அது நான் கட்டப்போறேன்..
தொண்டர் :ஏண்ணே அங்க போயும் காலேஜு ஸ்கூலுன்னு கட்டிக்கிட்டு வேற எதுனாலும் பிஸினஸ் பண்ணாலாம்ல...
விஜயகாந்த் :என்னடா என்னைய லூசுன்னு நினைச்சயா அங்க போனதுக்கப்பறம் டிபார்மெண்ட் ஸ்டோர், அப்பறம் என்ன என்ன பிஸினெஸ் எல்லாம் பண்ணமுடியுமோ அதெல்லாம் பண்ணப்போறேன்....
தொண்டர் :சரி நீங்க மட்டும்தான் போறீங்க அங்க போயி வேலைக்கு ஆள், வாத்தியார்க்கு, என்ன பண்ணுவீங்க?
விஜயகாந்த் :அதுதான் ஒரே குழப்பமா இருக்கு மற்றமொழிக்கெல்லாம் எப்பிடியும் ஒருத்தன் கிடைச்சுடுவான் தமிலன் நான் மட்டும்தான் போறேன் அங்க உள்ளவங்க தமில் சொல்லிக்குடுங்கன்னு கேக்க மாட்டாங்க இருந்தாலும் தமிலில்லன்ன நம்ம எப்படி பொலைப்ப ஓட்டமுடியும்? அதனால நானே கொஞ்ச நாளைக்கு தமில் வாத்தியாரா இருக்கலாமுன்னு பாக்குறேன்...
தொண்டர் :நீங்களா தமிழ்வாத்தியாராவா? யாராவது நீங்க தெலுங்கு எப்படி தமிழ் சொல்லிக்குடுக்கலாமுன்னு கேட்டா என்ன பண்ணுவீங்க?
விஜயகாந்த் :பிறப்பால தெலுங்கா இருக்கலாம் ஆனா வளர்ந்தது தமில் நாட்டுல தெரியுமுல்ல..தமில்ல எத்தனை உயிர் எலுத்து இருக்குன்னு சொல்லவா? இல்லை எத்தனை மெய்யெலுத்து இருக்குன்னு சொல்லவா? இல்லை எத்தனை உயிர்மெய்யெலுத்து இருக்குன்னு சொல்லவா? தமில் என்னோட தாய் மொலியில்லாட்டினாலும் என்னை வலர்த்த மொலின்னு சொல்லுவேன்...என்ன தமில்ல எனக்கு பிடிக்காத ஒருவார்த்தை எல்லாருக்கும் தெரியும் ஆனா என் வாயிலயே வராத எலுத்து இந்த ல மட்டும்தாங்க..
தொண்டர் :அதான் உங்க வாய்ல வருதே அப்பறமென்ன?
விஜயகாந்த் :டேய் அது ல டா நான் சொல்றது ல
தொண்டர் :ரெண்டும் ஒண்ணுதாண்ணே..
விஜயகாந்த் :என்னைய கொலைகாரனாக்காத வேணாம் நான் அவங்க கிட்ட எலுதிக்காட்டிக்கிறேன்..
தொண்டர் :எப்பிடிண்ணே சரி அத விடுங்க அப்போ நீங்க ல சொல்லும்போதெல்லாம் அவங்க ழ ந்னு புரிஞ்சுப்பாங்களா?
விஜயகாந்த் :அறிவு ஆமாடா இவ்ளோ நாளா என்னைய தமில் மக்களும் தமிலகமும் புரிஞ்சுக்கிடலியா அதுமாதிர்தான் அவங்களும் புரிஞ்சுப்பாங்க நீ கூட சீக்கிரம் என்னையப்பத்தி புரிஞ்சுகிட்ட
தொண்டர் :நானும் அந்த தமிழன் தானே அப்போ ல வர்ற பொருளையெல்லாம் ழ ன்னு உச்சரிக்கணும்ன்னு சொல்லுவீங்க இல்ல
விஜயகாந்த் :ஆமா
தொண்டர் :நீங்க தமில்,தமிலன்னு சொன்னா அவங்க தமிழ் தமிழன்னு சரியாப்புரிஞ்சுப்பாங்கல்ல,,
விஜயகாந்த் :ஆமா ஆமா
தொண்டர் :அப்போ நீங்க
பால்ன்னு சொன்னா
வால்ன்னு சொன்னா
அலகுன்னு சொன்னா
வலின்னு சொன்னா
தாலின்னு சொன்னா
கலகம்ன்னு சொன்னா
என்ன புரிஞ்சுப்பாங்கன்னு சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும்..
விஜயகாந்த் :போடா நான் நிலாவுக்கும் போகலை வானத்துக்கும் போகலை...நான் தேசிய முற்போக்கு திராவிட கலகத்தை பாத்துட்டு இங்கயே இருந்துக்கிறேன்..
தொண்டர் : என்னாது கலகமா?
விஜயகாந்த் : டேய் உண்மையிலே இங்க கலகம் நடக்கப்போகுது ஓடிப்போயிடு...
தொண்டர் : !!!!!!