March 12, 2010

கை வீசி நடக்குற காத்தே...


நந்தலாலா படத்தில் வாற இந்த பாட்டு கைவீசி நடக்குற காத்தே நானும் மிஷ்கினோட இந்த பாட்டு படத்துலயே வரலை அதான் நானே காட்சியமைப்பு பண்ணிட்டேனே
மிஷ்கின் சார் வெவ்வெவ்வே...


நந்தலாலா படத்தோட பாட்டையும் கேட்டுட்டே வாசிங்க...

http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR4165'&lang=en



கை வீசி நடக்குற காத்தே






காத்தோடு குலுங்கற பூவே’



காத்து வந்து தழுவிடும் அழகு இயற்கையின் அழகு'



நேற்று இன்று தொடங்கியதல்ல இதயத்தின் உறவு


வானம் பூமி எங்கும் தாய்மை கொஞ்சும் இன்பம்


யாவும் நமது சொந்தம்...




ஒரு குடம் ஒரு குடம் நீர் ஊற்றி மலர்வனம் வளர்த்திட பாரு


அதை கொஞ்சம் அதை கொஞ்சம் நீ ரசித்து


அதை மிஞ்சும் பாட்டொன்று பாடு...





அழகான கிளி குஞ்சு மெதுவா மெதுவா கிளையில் நடந்திட பழகு



சிவப்பான இதழ் கூட்டி சுகமா சுகமா ஒரு சொல் பேசிட பழகு





பழக பழக உலகம் முழுதும் சொந்தமின்னும் உண்டாகும்





பறந்து பறந்து ரசிக்கும் உறவில் வானமின்னும் பெரிதாகும்



மலரும் மலர்கள் உதிர்கிற பொழுதிலும்


குலுங்கி குலுங்கி சிரிப்பதை பாரு





கவலை மறந்து சிரிக்கிற இடம்தான் கடவுள் இருந்து வசிக்கிற வீடு





விளையாடும் அணில் குஞ்சே அழகா முதுகில் தடவி கொடுத்தது யாரு



உனக்காக பசியாற மரங்கள் முழுதும் பழங்கள் பழுக்குது பாரு ..





உருட்டி உருட்டி அழகா அழகா கோலி குண்டு கண்ணாலே
துருவி துருவி தேடுவதென்ன சொல்லு உந்தன் மொழியாலே





வளைஞ்சி நெளிஞ்சு ஓடுகிற வழியினில் உனக்கு தெரிஞ்ச திசையினில் ஓடு


ஒரு குடம் ஒரு குடம் நீர் ஊற்றி மலர்வனம் வளர்த்திட பாரு
அதை கொஞ்சம் அதை கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொன்று பாடு ...
காத்து வந்து தழுவிடும் அழகு இயற்கையின் அழகு'
நேற்று இன்று தொடங்கியதல்ல இதயத்தின் உறவு
வானம் பூமி எங்கும் தாய்மை கொஞ்சும் இன்பம்
யாவும் நமது சொந்தம்....
ஒரு குடம் ஒரு குடம் நீர் ஊற்றி மலர்வனம் வளர்த்திட பாரு
அதை கொஞ்சம் அதை கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டோன்று பா
டு...

நந்தலாலா படத்தோட பாட்டையும் கேட்டுட்டே வாசிங்க...


35 comments:

Unknown said...

padangal anaithum arumai

சாந்தி மாரியப்பன் said...

படங்களெல்லாம் ஒன்றையொன்று விஞ்சுகின்றன. கை வீசி நடக்கிற காத்து அற்புதம்.

கவி அழகன் said...

சூப்பர் கண்ணா சூப்பர் கண்ணா
வாழ்த்துக்கள் இயக்குனரே

Chitra said...

very nice

தமிழ் உதயம் said...

நா இந்தப்பாட்டை கேட்டதில்ல. இப்பத் தான் கேட்கறேன். ரெம்ப பிடிச்சிருக்கு. படங்கள் அழகோ அழகு.

Deepan Mahendran said...

படங்கள் சூப்பர்....!!!

:)

KUTTI said...

BOSS...பிரமாதம்.

சைவகொத்துப்பரோட்டா said...

வாழ்த்துக்கள் இயக்குனரே.....படமாக்கிய விதம் நல்லா இருக்கு.

திவ்யாஹரி said...

படங்களும்.. கவிதை வரிகளும்.. ரொம்ப நல்லா இருக்கு வசந்த்.. குறிப்பா சொல்லணும்னா.. கஷ்டம் தான்.. எல்லாமே superb-ஆ இருக்கு..நான் இது வரைக்கும் கேட்டதில்லை இந்த பாட்டை.. தேங்க்ஸ் வசந்த்..

சத்ரியன் said...

வசந்த்,

மிஷ்கின் மட்டும் பாத்தாருன்னு வெச்சிக்க. தோஹாவ விட்டுட்டு உன்ன கோடம்பாக்கத்துல குடியேறச் சொல்லிடுவாரு.

மெய்யாலுமே சூப்பரப்பு....

Thenammai Lakshmanan said...

கலக்குறே வசந்த அவருக்கு முன்னாடி நீ படம் எடுத்துருவே போல இருக்கே sema super machi

RAMYA said...

படத்துக்காக பாட்டா இல்லே பாட்டுக்காக படங்களா!

என்று வியக்கும் வண்ணம் உங்களின் இடுகை வசந்த் !

தாமதம்தான் மன்னிக்க சகோ!

Unknown said...

அப்பம் நந்தலாலா படத்தில இடம்பெற போகும் "கைவீசி நடக்கிற காத்தே" ரீமிக்ஸ் ன்னு சொல்லுங்க.

RAMYA said...

கதவை யாரோ தட்டுறாங்க பாருங்க. யாரு அது மிஷ்கின் சாயலா நிக்குறாங்க இல்லே!

இருக்கும் இருக்கும் :))

சசிகுமார் said...

நல்ல பதிவு நண்பரே உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

க.பாலாசி said...

அசத்தலுங்க... வசந்த்....

Priya said...

படங்கள் அத்தனையும் சூப்பர்ப்!

அன்புடன் அருணா said...

மீண்டும் கலக்கல்ஸ் வசந்த்!

Subankan said...

புதுசு புதுசாத் திங் பண்றாங்கப்பா, நல்லாருக்குப்பா

Santhini said...

இப்போதான் பார்த்தேன்....கன்னா பின்னான்னு யோசிக்கிறீங்கப்பா.
நல்லா இருக்கே இந்த ஐடியா...பாட்டும் நல்லா இருக்கு

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Super.

அன்புடன் நான் said...

மிக வியந்தேன்.... வசந்த்

//கவலை மறந்து சிரிக்கிற இடம்தான் கடவுள் இருந்து வசிக்கிற வீடு//

இதற்கான படத்திற்கு என் முதல் ஓட்டு.....

அத்தனைபடமும்... ஒளிக்கவிதை!

சீமான்கனி said...

ரெம்ப மெனக்கெட்டு இருக்க மாப்பி...படங்களும் கவிதை பேசுது...கைவீசி நடக்குற காத்து மட்டும் கொஞ்சம் பயமா இருக்கு....வாழ்த்துகள்...புதுசு புதுசு...

சுசி said...

அசத்திட்டீங்க உ.பி..

அவ்ளோ அழகாவும் பொருத்தமாவும் இருக்கு படங்கள்..

சொன்ன மாதிரியே கேட்டாச்சு :)))

ராமலக்ஷ்மி said...

அத்தனையும் அழகழகான படங்கள். பொருத்தமானவையும்.

நட்புடன் ஜமால் said...

படங்கள் அனைத்தும் அழகு.

பூக்களுக்கிடையில் சிரிக்கும் 4-பூக்கள் மிக அழகு.

ஸ்ரீராம். said...

அருமை...அருமை வசந்த்

Good citizen said...

Simply superbe vasanth,,,superbe imagination,and selection of pictures

Paleo God said...

super..:)

அனில் படம் அழகு..:)

டக்கால்டி said...

ரூம் போட்டு யோசிக்கிறீங்களா?
உங்களுக்கு உடம்பு பூரா மூளையா?
அருமை.. தொடர்ந்து கலக்குங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

unnai pukazhave vaarththai illiaye

பனித்துளி சங்கர் said...

புகைப்படங்கள் அனைத்தும் கலக்கல் !

மீண்டும் வருவான் பனித்துளி !

Anonymous said...

chanceless...super vasanth....

Menaga Sathia said...

படங்களும்,பாடலும் சூப்பர் வசந்த்!! இப்பதான் நந்தலாலா படத்தின் பாடலையே கேட்டேன் உங்களால்...

தினேஷ்குமார் said...

very nice ........